ஒளி எழுந்தது-எனக்கு (நான்குவெள்ளைக்) குதிரைகளும் குரங்குக்கொடியும் உயர்ந்ததேரும் முதலியவற்றை முன்புகொடுத்த அக்கினியின் ஒளி தோன்றிவிளங்கியது' என-என்று, முரண் அழிந்திட-(அவனது உறுதிநிலை குலையும்படி, மொழிந்து - வீரவாதங்கூறி, வில் தரும் கணைகளால்-(தனது) வில்லினால் எய்யப்படும் அம்புகளால், விழ-(அவனது குதிரைகள் கொடி தேர்முதலியன) கீழ்விழும்படி, போர் பொருது-போர்செய்து, வெயிலவன் சுதனை- சூரியபுத்திரனான அக்கர்ணனை, மீளஉம்-மறுபடியும், பின் தரும்படி- புறங்கொடுக்கும்படி, பிளந்தனன்-(உடம்பைப்) பேதித்தான்;(எ - று.)-'இது உனக்கு வெற்றிக்காலமன்று, எனக்கே வெற்றிக்காலம்' என்றுசொல்லி அவன்மனநிலையைக் குலைத்தவாறாம். பி-ம்: முரண்மிகுந்திட, (585) 189.-கிருதவன்மாவைத் தருமன் சயித்தல். ஒருதன்வாகுவலியாலும்வார்சிலையுதைத்தவாளிவலியாலுமொண் குருதிபொங்கவடுதருமராசன்ரகுகுலவிராமனிகராயினான் கிருதவன்மனெனவருநாரதிபதிகெட்டுமாவிரதம்விட்டுவா ணிருதர்சேகரனொடுவமையாயவனெடுங்களத்திலெதிர்நன்றிலன். |
(இ-ள்.) ஒரு தன் வாகு வலியால்உம்-ஒப்பற்ற தனதுதோள் வலிமையினாலும்,வார் சிலை உதைத்த வாளி வலியால்உம்-நீண்ட வில்லினின்று செலுத்தியஅம்புகளின் வலிமையினாலும், ஒள்குருதி பொங்க அடு-ஒள்ளிய இரத்தம்வெளிச்சொரியும்படி போர் செய்கிற, தருமசாரன்-யுதிட்டிரன், ரகு குலம் இராமன்நிகர் ஆயினான்-ரகுவென்னும் அரசனது வம்சத்திலே திருவவதரித்த ஸ்ரீராமன்போலானான்; கிருதவன்மன் என வரும் நராதிபதி-கிருதவர் மாவென்று பேர்பெற்றுவந்த, அரசன், கெட்டு-தோற்று, மா இரதம் விட்டு-பெரியதேரை விட்டு இழிந்து, வாள் நிருதர் சேகரனொடு உவமை ஆய்-கொடிய அரக்கர்தலைவனான இராவணனோடு ஒப்பாய், நெடுங்களத்தில் அவன் எதிர் நின்றிலன்- பெரியபோர்க்களத்திலே அத்தருமனெதிரிலே நிற்கமாட்டாதவனாய்ப் புறங்கொடுத்துச்சென்றான்; (எ - று.) இராவணன் முதல்நாட்போரில் யாவையு மிழந்தமையும், அப்பொழுது இராமபிரான் அவனைக்கொல்லாமல் 'இன்றுபோய் நாளைவா' என்று விடுத்தமையும் பிரசித்தம். தருமபுத்திரனது அம்புக்கு ஆற்றாது கிருதவன்மன் சிலையொழிந்து நிலைதளர்ந்து சென்றானென்றும், அதுகண்ட தருமபுத்திரன் அவனைக்கொல்லாது கருணைசெய்தா னென்றும், உவமையால்விளங்கும். பலராமனினும்வேறுபாடு தோன்ற,தசரதராமனை 'ரகுகுலராமன்' என்றார். ரகு-சூரியவம்சத்திற் பிரசித்திபெற்றஓரரசன்;இவன்குலத்தில் அவதரித்ததனால்,ராமனுக்கு ராகவனென்று ஒருதிருநாமமும்வழங்கும். (586) |