பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்367

உந்தவேலமரில்விசயன்மேற்றொடுக்குமுரகவம்பினுக்குயிருய்ந்தா
லந்தவேலையின்மற்றெறிவதற்கிருந்தானாற்றலாற்கூற்றினுங்
                                     கொடியோன்.

     (இ-ள்.) இந்த வேல்-இவ்வேற்படை, இந்திரன் கவச குண்டலம் கவர்
நாள்இரவி மைந்தனுக்கு தந்த வேல்-இந்திரன் (கர்ணனது) கவசகுண்டலங்களை
இரந்துபெற்றகாலத்தில் அவனுக்குக் கொடுத்த வேலாம்: இதனை- இவ்வாயுதத்தை,
யாவர்மேல் விடின்உம்-யார்மேற் பிரயோகித்தாலும், (இது), அவன் வரத்தால்-
அவ்விந்திரனது வரத்தினால், தரிப்பு அறதெறும் - (அவர்களைத்) தாங்கமுடியாதபடி
கொல்லும்; ஆற்றலால் கூற்றின்உம் கொடியோன்-வலிமையால் யமனினுங்
கொடியவனான கர்ணன், அமரில் விசயன்மேல் தொடுக்கும் உரகம் அம்பினுக்கு
உயிர் உய்ந்தால் - போரில் (தான் இனி) அருச்சுனன்மேற் பிரயோகிக்கும்
நாகாஸ்திரத்துக்கு (அவ்வருச்சுனன்) உயிர் தப்பிப் பிழைப்பானாயின்,
அந்தவேலையில் - அச்சமயத்தில், மற்று-பிறகு, உந்த வேல் - இந்தவேற்படையை,
எறிவதற்கு இருந்தான் - (அவன்மேற்) பிரயோகித்தற்கு எண்ணியிருந்தான்;
(எ - று.)

     வரத்தால் தொடுக்கும் எனஇயைத்து, அக்கர்ணன் தான் குந்திக்குஅளித்த
வரத்தினால் அருச்சுனன்மீது போரில் (ஒரு முறையே) பிரயோகிக்கும்
நாகாஸ்திரத்துக்கு என்றலு மொன்று,  'ஆற்றலாற்கூற்றினுங்கொடியோன்' என்றது-
கர்ணன் இவ்வேற்படையைக் கைக்கொண்டிருப்பனாயின் அருச்சுனனைத்தவறாது
அழிக்கவல்லனென்றவாறு; ஒருகால்கூற்றுவனுக்கு உயிர் தப்பினும் கர்ணனுக்கு
உயிர்தப்புதலரிதென்க.                                         (609)

213.அலப்படையவனுமநேகமாயிரம்பேரரக்கரும்விளியு
                            மறாடர்த்தோ
னுலப்படையவுந்தானுய்யவுமரசனுரைத்தலாலோச்
                          சினனிவன்மேல்
வலப்படமுனையிலின்றுமக்கவனிவழங்கினன்
                       கன்னனேயென்றான்
குலப்படவரவின்முடியின்மேனடித்தகூத்துடைக்
                         கோவியர்கூத்தன்.

     (இ-ள்.) 'அலம் படையவன்உம் -அலாயுதனும், அநேகம் ஆயிரம் பேர்
அரக்கர்உம்-(மற்றும்) பல ஆயிரக்கணக்கான பெரிய இராக்கதர்களும், விளியும்
ஆறு - இறக்கும்படி, அடர்த்தோன் - பொருது அழித்தவனான கடோற்கசன்,
உலப்பு அடையஉம் - அழிவையடையும்படி, தான் உய்யஉம்-தான்
பிழைத்திடும்படியும், அரசன்-துரியோதனன்,உரைத்தலால் -
சொன்னதனால்,(கர்ணன்),இவன்மேல் ஓச்சினன் - (அவ்வேற்படையை) இந்தக்
கடோற்கசன்மேல் வீசியெறிந்தான்; (ஆதலால்), முனையில்-போரில், வலம் பட -
வெற்றியுண்டாக, உமக்கு - உங்கட்கு, கன்னன்ஏ - கர்ணன் தானே, இன்று -
இன்றைக்கு, அவனிவழங்கினன் - இராச்சியத்தைக் கொடுத்தவனாயினான்,'
என்றான்- என்று சொல்லியருளினான்: (யாவனெனில்) -குலம் படம் அரவின்
முடியின்மேல்நடித்த கூத்து உடை - சிறந்த படத்தையுடைய (காளியனென்னும்)
பாம்பினதுதலையின்மேல் ஆடிய நடனத்தையுடைய, கோவியர் கூத்தன் -
கோபஸ்திரீகளோடுகூத்தாடியவனாகிய கண்ணபிரான்; (எ -  று.)