பொருள்வைப்பணி. மற்றைப் பாண்டவரதுபெருமைக்கும் வலிமைக்கும் அருச்சுனன்முக்கியகாரணமென்பதுபற்றி அவன்பிழைக்கப்பெற்றதனை, மற்றவர் 'பெருமையும்வலியும் நல்வினைப்பயத்தாற்பெற்றனம்' என்று பாராட்டினர். (611) 215.-துரோணன் பலஅரசரோடு விராடனையும் துருபதனையும் தலைதுணித்தல். இராவணன்படுபோர்க்களமெனக்கிடந்தவிந்தவெங்களத்திடைமீண்டு மராவுயர்துவசனாணையால்வரிவில்லாரியனனீகினியுடன்போய் விராடனும்யாகசேனனுமுதலாம்வேந்தரோடெதிர்ந்தமர்லமலைந்து தராதிபர்பலரோடவ்விருவரையுஞ்சரங்களாற்சிரங்களைத்தடிந்தான். |
(இ-ள்.) இராவணன் படு போர் களம் என கிடந்த - இராவணன் இறந்துவிழுந்த யுத்தகளம்போலிருந்த (மிகப்பலஅரக்கர்இறந்துவிழப்பெற்ற), இந்த வெம் களத்திடை - இந்தக்கொடிய போர்க்களத்திலே, மீண்டும்-, அரா உயர் துவசன்ஆணையால் - பாம்புவடிவத்தை உயரநிறுத்திய கொடியையுடையவனான துரியோதனனது கட்டளையினால், வரி வில் ஆரியன் - கட்டமைந்த வில் வித்தையில்தேர்ந்த ஆசாரியனான துரோணன், அனீகினியுடன் போய்- சேனையுடனேசென்று,விராடன்உம் யாகசேனன் உம்முதல் ஆம் வேந்தரோடு எதிர்ந்து அமர்மலைந்து - விராடனும் துருபதனும் முதலான அரசர்களுடனே எதிர்த்துப்போர்செய்து, தராதிபர் பலரோடு அ இருவரைஉம் - பல அரசர்களுடனே அந்தஇரண்டுபேரையும், சரங்களால் சிரங்களை தடிந்தான் - அம்புகளினால் தலைகளைத்துணித்தான்; (எ - று.) (612) 216.-திட்டத்துய்மன் 'மறுநாள் துரோணனைக் கொல்வேன்' எனல். துருபதன்மடிந்தவெல்லையிற்றிட்டத்துய்மனும்வெகுண்டுளஞ் சுடப்போ யிருபதமரசர்முடிகமழ்முனியையேன்றுவஞ்சினமெடுத்துரைத்தான் பொருபகைமுனையிலெந்தையையென்முன்பொன்றுவித் தனையுனைநாளை நிருபர்தமெதிரேதின்மகன்காண நீடுயிரகற்றுவனென்னறே. |
(இ-ள்.) துருபதன் மடிந்த எல்லையில் - துருபதராசன் இறந்தவளவிலே,- திட்டத்துய்மன்உம் - (அவன்மகனான)த்ருஷ்டத்யும்நனும்,-வெகுண்டு-கோபித்து, உளம் சுட-மனந்தபிக்க, போய்-சென்று,-இருபதம் அரசர் முடிகமழ் முனியை ஏன்று-இரண்டுபாதங்களிலும் அரசர்களது முடியில் மணம் வீசப்பெற்ற துரோணாசாரியனையெதிர்த்து,-'பொரு பகை முனையின்-போர் செய்கிற பகைவர்களுடைய முன்னிலையிலே, எந்தையை - எமது தந்தையான துருபதனை, என் முன் - எனதுஎதிரிலே, பொன்று வித்தனை - அழித்தாய்; (ஆதலால்), உனை - உன்னை, நாளை- நாளைக்கு, நிருபர்தம் எதிரே-அரசர்கள் முன்னிலையிலே, நின்மகன் காண-உனது புத்திரனான அகவத்தாமன் பார்க்க (அவனெதிரிலே), நீடு உயிர் அகற்றுவன்- நெடுநாள் வாழுந்தன்மையதான உயிரை ஒழிப்பேன்,'என்று-,வஞ்சினம் எடுத்துஉரைத்தான் - சபதவார்த்தைகளை யெடுத்துச்சொன்னான்; (எ - று.) |