(இ-ள்.) என்முன் என்முன் என்று-எனக்குமுன்னே (போர்செய்யவேண்டும்) எனக்குமுன்னே (போர்செய்யவேண்டும்) என்று, மன்னர் யார்உம் இகலஏ - பகையரசர்கள்யாவரும் மாறு பட்டுநின்ற வளவிலே, முன் முன் நின்று ஒவ்வொருவரெதிரிலும் நின்று , யாவரோடுஉம்-அவர்களெல்லாரோடும், மூரி வில் வணக்கினான்-வலிய வில்லை வளைத்துப் பொருதான்; (யாவனெனில்),- 'வில்முன் எண்ண வில்உம் இல்லை - (இவனது காண்டீவ) வில்லின்முன் (ஒருபொருளாக) மதிக்கப்படுதற்கு வேறோரு வில்லும் இல்லை; வெம் சமத்து-கொடிய போரில், இவன்தன் முன் எண்ண - இவனெதிரில் நன்குமதிக்கப்படுதற்கு, மற்றுவீரர்இல்லை -வேறொரு வீரரும் இல்லை’,என - என்றுசொல்லும்படி, வரும் - (சிறப்புடையவனாய்) வருகிற, தனஞ்சயன்-அருச்சுனன்; (எ - று.) பி-ம்: நவிலவே.. இனி, 'வில்முன் எண்ண வில்லும் இல்லை' என்பதற்கு - இவனது வில்லுக்கு மேலாக முதலில்வைத்து விரல்மடக்கி யெண்ணுதற்கு வேறொரு வில்லு மில்லை யென்று உரைப்பினும் அமையும்; 'இவன்றன்முனெண்ண வீரரில்லை,'என்பதற்கும் இங்ஙனமே கொள்க. முன் முன் இன்றி யாவரோடும் எனப் பிரித்து, (அவர்களை ஒருபொருளாக மதித்தில னாதலால் அவர்கள்விருப்பின்படி) ஒவ்வொருவர்முன்புந் தனித்தனி போர்புரியாமல் ஏக காலத்தில் அனைவரோடும் வில்லைவளைத்துப் போர்செய்தான் என்றுமாம். (622) 6.-துரோணனது போர்த்திறம். ஈரிரண்டுமுகமும்வந்தெதிர்ந்தவீரர்சேனைக ளீரிரண்டும்வேறுவேறுபட்டுவென்னிடப்புடைத் தீரிரண்டொர்தொடையில்வாளியேவியேவியிகல்செய்தா னீரிரண்டுமையிரண்டுமானவிஞ்சையெய்தினான். |
(இ-ள்.) ஈர் இரண்டும்உம் ஐ இரண்டுஉம் ஆன வீஞ்சை எய்தினான் - பதினான்குவகையான வித்தைகளை யடைந்துள்ளவனாகிய துரோணன்,-ஈரிரண்டு முகம்உம் வந்து எதிர்ந்த-நான்கு பக்கங்களிலும் வந்து எதிரிட்ட, வீரர் சேனைகள் ஈரிரண்டுஉம்- பாண்டவரது சேனைகள் நான்கும். வேறு வேறுபட்டு வென் இட- சின்னபின்னமாகிய புறங்கொடுக்கும்படி, புடைத்து-மோதி, ஓர் தொடையில் ஈரிரண்டுவாளி ஏவி ஏவி-தொடுக்குந்தரமொவ் வொன்றிலும் நந்நான்கு பாணங்களைச் செலுத்தி,இகல் செய்தான்-போர் செய்தான்; (எ - று.) இச்செய்யுளின் இறுதியடியிற் குறிக்கப்பட்டவன் துரோணனென்பது மேற்கூறியது கொண்டு உணரப்படும். பதினான்குவித்தைகள் - வேதம் நான்கு. சிஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற வேதாந்தங்கள்ஆறு, மீமாம்சை தர்க்கம் புராணம் தர்மசாஸ்திரம் என்ற உபாங்கம் நான்கு என இவை, ஈண்டு, வாரணா |