9.-மற்றும்பலர் மற்றும்பலரோடு எதிர்த்தல். முனிவன்மைந்தனிந்திரன்றன்மைந்தனோடுமுடுகினான் றினகரன்றன்மதலைகாலின்மைந்தனோடுசீறினான் றனுவின்விஞ்சுதென்னனோடுசகுனிபோர்தொடங்கினா னினியகண்டமுஞ்சிதைக்குமிறுதிகாலமென்னவே. |
(இ-ள்.) 'இனி-இப்பொழுது, அகண்டம்உம் சிதைக்கும் இறுதி காலம் - உலகமுழுவதையும் அழிக்கின்ற கற்பராந்தகாலம்,' என்ன - என்று (யாவரும்) எண்ணும்படி,-முனிவன் மைந்தன் - துரோணபுத்திரனான அகவத்தாமன், இந்திரன் தன் மைந்தனோடு-அருச்சுனனுடன், முடுகினான்-விரைந்து பொருதான்; தினகரன் தன் மதலை - கர்ணன், காலின் மைந்தனோடு - வாயுபுத்திரனான வீமனுடன், சீறினான் - கோபித்துப் பொருதான்; தனுவின் விஞ்சு தென்னனோடு - வில்தொழிலிலேமிக்க (சித்திரவாகன) பாண்டியனுடன், சகுனி போர்தொடங்கினான்-; (எ -று)-'இறுதிக்காலம்' என வலிமிகாதது, செய்யுளோசைநயத்தின் பொருட்டு, பி-ம்:செறுக்கும். (626) 10.-கௌரவசேனை வெல்லுதல். எந்தவெந்தமன்னர்தம்மிலிருவராகியமர்செய்தா ரந்தவந்தவீரர்செய்தவண்மைசொல்லுமளவதோ முந்தமுந்தவென்றுவென்றுமோகரித்ததெவ்வர்தாம் வந்தவந்தவழிமடங்கநின்றதவ்வரூதினி. |
(இ-ள்.) எந்த எந்த மன்னர் - எந்தெந்த அரசர்கள், தம்மில் இருவர் ஆகிஅமர் செய்தார்-(கீழ்க் கூறியபடி) தமக்குள் இரண்டிரண்டு பேராய்ப் போர்செய்தார்களோ, அந்த அந்த வீரர் - அந்தந்த வீரர்கள், செய்த-,ஆண்மை- பராக்கிரமச்செயல், சொல்லும் அளவதுஓ-சொல்லுந் தரமுள்ளதோ? (அன்றென்றபடி); முந்த முந்த வென்று வென்று மோகரித்த தெவ்வர்-முன்னே முன்னே (பலநாட்களில்) மிகுதியாகச் சயித்து ஆரவாரித்த பகைவர்களாகிய பாண்டவசேனையார், தாம் வந்த வந்த வழி மடங்க-தாம் தாம் வந்த வந்த வழியே மீண்டு புறமிட, அ வரூதினி-அந்தக்கௌரவசேனை, நின்றது- (வெற்றிகொண்டு) நின்றது;(எ - று.) (627) 11.-பாண்டவசேனைதோற்றல். தேயு வாளி வருணன் வாளி தேவர் வாலி திண்மைகூர் வாயு வாளி முதல னைத்து வாளி யாலு மலைதலா லாயு நூன்கு னிக்கு டைந்த தன்பு மிக்க தந்தையுந் தாயு மாகி மண்பு ராத தருமன் விட்ட தானையே. |
(இ-ள்.) தேயு வாளி-ஆக்நேயாஸ்திரமும், வருணன் வாளி - வாருணாஸ்திரமும், திண்மை கூர் வாயு வாளி-வலிமைமிக்க வாயவ்யாஸ்திரமும், தேவர் வாளி-(மற்றும்பல) தேவர்களின் அஸ்திரமும், முதல்-முதலான, அனைத்து வாளியால்உம்-எல்லா அஸ் |