என்னும் இவையே யல்லாமல், முனி வரர்க்கு - சிறந்தஇருடி கட்க, உறுதி உண்டுஓ- நன்மைதருவது வேறுஉண்டோ? துன்னலர் செகுக்கும் போர்உம் - பகைவர்களையழிக்கின்ற போரும், நிறைதரு வலிஉம் - நிறைந்தபலமும், வாழ்வுஉம் - செல்வவாழ்க்கையும், நிருபர்தம் இயற்கை அன்றுஓ - அரசர்கட்கு உரிய இயல்பன்றோ? (எ -று.) அந்தணனாகிய நீ அரசர்க்குரியபோரையும் வலிமையையுஞ் செல்வவாழ்க்கையையுங் கைவிட்டு, முனிவரர்க்குஉரியவேதசாஸ்திரங்கள் முதலியவற்றைக் கைக்கொள்வாயாக என்றபடி. (631) 15. | தொடுகணைவில்லும்வாளுந்துரகமுங்களிறுந்தேரும் விடுகவெஞ்சினமும்வேண்டாவிண்ணுலகெய்தல்வேண்டுங் கடுகநின்னிதயந்தன்னிற்கலக்கமற்றுணர்வினொன்று படுகவென்றுரிமைதோன்றப்பகர்ந்தனர்பவமிலாதார். |
(இ-ள்.) தொடு கணை வில்உம் - தொடுக்கின்ற அம்புகளையுடைய வில்லையும், வாள்உம் - வாளையும், துரகம்உம் - குதிரையையும், களிறுஉம் - யானையையும், தேர்உம் - தேரையும், வெம் சினம்உம் - கொடிய கோபத்தையும், விடுக - விட்டிடுவாயாக: வேண்டா- (இவை) வேண்டுவதில்லை: விண் உலகு எய்தல் வேண்டும் - மேலுகத்தை யடைதல்வேண்டும்: (ஆதலால்) கடுக - விரைவாகநின் இதயந்தன்னில் கலக்கம் அற்று - உனது மனத்திலுள்ள சஞ்சலம் ஒழிந்து,உணர்வின் ஒன்று படுக - ஒப்பற்ற பரதத்வஞானத்தில் ஒன்றுபட்டு நிற்பாயாக, என்று-, உரிமை தோன்ற - (தமக்கு அவனிடமுள்ள) உரிய அம்பு வெளியாகுமாறு,பகர்ந்தனர் - சொன்னார்கள்; பவம் இலாதார் - பிறப்பில்லாதவரான அம்முனிவர்கள்;(எ -று.) உரிமைதோன்ற - ஸ்வாதந்திரியமாக வென்க; அவனுக்கு உரியகடமை அவனுக்குப் புலனாகுமாறு என்றலு மொன்று. (632) 16.-அப்போது துரோணன் கடும்போரொழிந்து பொறுமை மேற்கொளல். ஆனபோதாசானெஞ்சிலருமறையந்தத்துள்ள ஞானமும்பிறந்துபோரிலாசையுநடத்தலின்றித் தூநலந்திகழுஞ்சோதிச்சோமியமடைந்துநின்றான் யானமும்விமானமல்லாலிரதமேல்விருப்பிலாதான். |
(இ-ள்.) ஆன போது - இங்ஙனம் முனிவர்கள் உபதேசித்த பொழுது, ஆசான்- துரோணாசாரியன்,- அரு மறை அந்தத்து உள்ள ஞானம்உம் நெஞ்சில் பிறந்து -(அறிதற்கு) அரிய வேதாந்தத்தி லமைந்துள்ள தத்துவஞானமும் மனத்தில் தோன்றப்பெற்று, போரில் ஆசைஉம் நடத்தல் இன்றி - போர்செய்தலில் விருப்பமும்செல்லுதலில்லாமல், யானம்உம் விமானம் அல்லால் இரதம்மேல் விருப்பு இலாதான் -வாகனங்களுள்ளும் (வானத்திற் சஞ்சரிப்பதான) விமானத்தின்மேலே (விருப்பஞ்)செல்வது அல் |