பக்கம் எண் :

பதினைந்தாம் போர்ச்சருக்கம்381

லாமல் தேரின்மேல் விருப்பமில்லாதவனாய், தூ நலம் திகழும் சோதி சோமியம் -
பரிசுத்தமான நற்குணங்கள் விளங்கப்பெற்ற பரஞ்சோதியாகிய கடவுளை
யடைதற்குரியசாந் தகுணவமைதியை, அடைந்து நின்றன்-; (எ - று.)

     அரசர்க்குரிய தேரின்மேல் ஏறிநிற்றலை ஒரு சிறப்பாகக்கொள்ளலாம்,
புண்ணியப்பயனால் விமானம் வந்துதோனற அதன்மேலேறி வானுலகஞ்
சேர்தலிலேயே கருத்தைச் செலுத்தினனென்க. சோதி-சோதிவடிவமாகிய கடவுள்,
சோமியம்=ஸௌம்யம்: சாந்தகுணம்.                               (633)

17.-துரோணனைக்கொல்ல இதுவே சமய மென்று கண்ணன் கருதுதல்.

கோடையால்வற்றிமீண்டுங்கொண்டலானிறைந்ததெண்ணீ
ரோடையாமென்னநின்றோன்முன்னரேயுரைத்தவார்த்தை
மாடையாலிந்த்ரநீலமணிவரைவளைத்தாலன்ன
வாடையானறிந்துசொற்றவவதியீதென்றுகொண்டான்.

     (இ-ள்.)  கோடையால் - கோடைக்காலத்து முதிர்ந்த வெயிலினால், வற்றி-
நீர்வறண்டு, மீண்டுஉம்-மறுபடியும்,கொண்டலால்நிறைந்த-மேகம் மழை
பெய்ததனால்நிரம்பிய, தெள் நீர் - தெளிவான் நீரையுடைய, ஓடை ஆம் என்ன-
நீரோடைபோல,நின்றோன்-(அகம்நிரம்பித் தணிந்து) நின்றவனான துரோணன்,
முன்னர்ஏ -முன்னமே (முதல்நாட்போர்த் தொடக்கத்திலேயே), உரைத்த -
சொன்ன,  வார்த்தை-பேச்சை, இந்த்ரநீலமணி வரை மாடையால் வளைத்தால்
அன்ன ஆடையான் -இந்திர நீலரத்தினமயமானதொரு மலை பொன்னினாற்
சூழப்பட்டாற்போன்றபொற்பட்டாடையுடையவனான கண்ணபிரான்,-அறிந்து -
ஞாபகத்திற் கொண்டு,சொற்ற அவதி ஈது என்று கொண்டான் - (அவன்) சொன்ன
சமயம் இதுவேயென்று திருவுள்ளம்பற்றினான்; (எ - று.)

     மனம் ஒழுக்கநிலையில் நிற்றற்குஉரிய தத்துவஞானத்தை
இதுவரையிலுங்கொள்ளா திருந்த நிலைக்கு ஓடை கோடையால் வற்றிய
தன்மையையும், இப்பொழுது முனிவர்களின் இதோபதேசத்தால் அந்தமெய்யுணர்வு
நிரம்பப்பெற்ற நிலைக்கு அவ்வோடை கொண்டலால் தெண்ணீர்நிறைந்த
தன்மையையும் உவமைகூறினார். கோடைக்காலம் - முதுவேனிற்பருவம்;
க்ரீஷ்மருது:ஆனி ஆடிமாதங்கள். முன்னரே யுரைத்த வார்த்தை-
முதற்போர்ச்சருக்கச்செய்யுட்கள் 14, 15 காண்க. பி-ம்: கோறற்கவதி.      (634)

18.-கண்ணன் திட்டத்துய்மனைத் துரோணன்மேலேவித்
தருமனோடு பேசல்.

கடல்வடிவம்பலம்நின்றகைதவன்றன்னோடோதிச்
சுடுககனலளித்ததிட்டத்துய்மனையவன்மேலேவி
வடுவுரைமறந்துஞ்சொல்லாமன்னறன்மைந்தனோடும்
அடியவரிடுக்கண்டீர்ப்பானாமுறையருளிச்செய்வான்.

     (இ- ள்.) அடியவர் இடுக்கண் தீர்ப்பான்-(தனது) அடியார்களுடைய
துன்பங்களைப்போக்கியருள்பவனான கண்ணபிரான்,-