பக்கம் எண் :

384பாரதம்துரோண பருவம்

தோன்றும்படி நீ துரோணனுக்குக் கூறி அதனால் அவன் மனம் வருந்திப்
போரொழிந்து இறக்கும்படி செய்திடவேண்டு மென்று கண்ணன் தருமனுக்குக்
கூறினான்.                                                 (637)

21.-அதற்குத் தருமன் உடன்படாமை.

வையினால்விளங்குநேமிவலம்புரிவயங்குசெம்பொற்
கையினானந்தணாளன்கையறல்புகன்றகாலை
மெய்யினால்வகுத்ததன்னமெய்யுடைவேந்தன்கேட்டுப்
பொய்யினாலாள்வதிந்தப்புவிகொலோவென்றுநக்கான்.

     (இ-ள்.) வையினால் விளங்கும் நேமி-கூர்மையோடு விளங்குகின்ற சக்கரமும்,
வலம்புரி - சங்கமும், வயங்கு - விளங்கப்பெற்ற, செம் பொன் கையினான் -
சிவந்தஅழகிய திருக்கைகளையுடையவனான கண்ணன், அந்தணாளன் கையறல்
புகன்றகாலை - (இங்ஙனம்) துரோணன் செயலற்று ஒழியும்வகையைச் சொன்ன
பொழுது,-மெய்யினால் வகுத்தது அன்ன மெய் உடை வேந்தன் -
சத்தியத்தினாலமைக்கப்பட்டது போன்ற உடம்பையுடைய தருமராசன், கேட்டு-,
பொய்யினால் ஆள்வது இந்த புவி கொல்ஓ என்று-இந்தப்பூமியைப் பொய்கூறி
அதனாற் பெற்று ஆளுவது தகுதியோ? என்று கூறி, நக்கான் - சிரித்தான்; (எ -
று.)-'மெய்யினால்வகுத்ததன்னமெய்' என்றது, தற்குறிப்பேற்றவணி.      (638)

22.-இதுவும், தருமன்வார்த்தை: பொய்ம்மையின் தீப்பயன்.

அண்ணியகிளையுமில்லுமரும்பெருமகவுமன்புந்
திண்ணியசீருமிக்கசெல்வமுந்திறலுந்தேசு
மெண்ணியபொருள்கள்யாவுமியற்றியதவமுமேனைப்
புண்ணியமனைத்துஞ்சேரப்பொய்ம்மையாற்பொன்றுமன்றே.

இரண்டுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) இல்உம் - மனைவாழ்க்கைத்துணையும் (தாரமும்), அரும்பெரு மக
உம் - அரிய பெரிய சந்தாநமும், அண்ணிய கிளைஉம்-நெருங்கிய மற்றைப்
பந்துவர்க்கமும், அன்பும்-, திண்ணிய சீர்உம் - உறுதியுள்ள அழியாத புகழும்,
மிக்கசெல்வமும்-, திறல்உம்-வலிமையும், தேசுஉம்-ஒளியும், எண்ணிய பொருள்கள்
யாஉம்-மற்றும் எண்ணப்படும் பொருள்கள் யாவையும், இயற்றிய தவம்உம்-செய்த
தவசும், ஏனை புண்ணியம் அனைத்துஉம்-மற்றைப்புண்ணியங்கள் யாவையும்,
சேர -ஒருசேர, பொய்ம்மையால் - பொய் சொல்லுதலினால், பொன்றும்
அன்றே -அழிந்துவிடுமன்றோ! (எ - று.)-அன்றே - தேற்றம்; பொய்கூறிய
அப்பொழுதேயெனினுமாம். பி-ம்: மனமுங்கேள்விச்செல்வமுநிதியுந்.

23.-அதற்குக் கண்ணன் சமாதானங்கூறத் தொடங்குதல்.

என்றுகொண்டினங்கொள்கோவினிடர்கெடவெழிலியேழுங்
குன்றகொண்டடர்த்தமாயன்கூறவுமறுத்துக்கூறக்