பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்39

     ஒலிக்கவும், இப துரகம் படை சூழ - யானை குதிரைகளின் சேனைகள்
சுற்றிலும் வரவும், குனி சிலையின் குரு - வளைந்த வில்லின் ஆசாரியனான
துரோணன், கொடி தலை மான் தட தேரான் - துவசத்தை மேலுடையதும்
குதிரைகள் பூட்டியதுமான பெரிய தேரிலேறியவனாய், வந்தான் - (தருமனை
எதிர்க்க) வந்தான் ; (எ - று.)

     கொடிது+அலை =கொடித்தலை; சிறுபான்மை உயிர்த்தொடர்க்
குற்றியலுகரத்தில் தகரவொற்று இரட்டிற்று : எருத்துமாடு என்றார்போல. இனி
கொடிதலை வேல் என எடுத்து, காக்கைகள் வட்டமிடும் நுனியையுடைய வே
லென்றலும் ஒன்று; "பாற்றினஞ் சுழலும் வைவேல்" என்றார்போல: காக்கைகள்,
அவ்வேலி லொட்டிய தசையையும் அவ்வேலாற் கொல்லப்படும் பிராணிகளையும்
தின்ன விரும்பி வந்தவை. இனி, கொடியினிடத்து வேலின் வடிவத்தையுடைய
எனவும் பொருள்படும். இனி, 'தடித்தலைவேல்' என்று பாடங்கொண்டு, தடி தலை
வேல் எனப் பிரித்து - தசை பொருந்திய நுனியையுடைய வேலென்றாவது, தடித்து
அலைவேல் எனப் பிரித்து - மின்னல் போல் அசைந்து விளங்குகிற வேலென்றாவது
பொருள் கொள்ளுதல் பொருந்தும். தடி- வில் என்பாரு முளர். ஸௌபலன் -
வடசொல் : சுபலனது மகனென்று பொருள்: தத்திதாந்தநாமம். ஸூபலன் - நல்ல
வலிமையுடையான்; இவன் - காந்தாரதேசத்து       அரசன்: திருதராட்டிரன்
மனைவிக்கும், சகுனிக்குந் தந்தை. 
பி - ம்;இடித்தலைமாமுகிலனையவிபதுரகம்
புடைசூழ.                                                    (54)

     10. அப்போது திருஷ்டத்யும்நன் துரோணனுக்கு எதிரிற்செல்லுதல்.

வந்தகுருக்குருகுலமாமன்னுடன்போர்புரிவதன்முன்
பந்தமுறப்பாஞ்சாலர் பற்பதினாயிரர்சூழ
முந்தவயப்பணைமுழங்கமுழங்கொலிநீர்கொதிப்பதுபோல்.
அந்தமுனிக்கெதிர்நடந்தானைவர்சேனாபதியே.

     (இ -ள்.) வந்த குரு - (அவ்வாறுவந்த) துரோணண், குருகுலம் மா மன்னுடன்
- குருகுலத்துச் சிறந்த அரசனான தருமனுடன், போர் புரிவதன் முன் -
போர்செய்வதன்முன்னே, ஐவர் சேனாபதி - பாண்டவர்சேனைத் தலைவனான
திட்டத்துய்மன்,- பந்தம் உற - நெருக்கம் மிக, பாஞ்சாலர் பல்பதினாயிரர் -
அநேகம்பதினாயிரக்கணக்காவுள்ள பாஞ்சாலதேசத்துவீரர்கள், சூழ - சூழ்ந்து
வரவும்,- முழங்குஒலி நீர் கொதிப்பது போல் - ஆரவாரிக்கிற ஓசையையுடைய
நீரையுடைய கடல்பொங்குவதுபோல (ச் சினம்பொங்க),- வயம் பணை- வெற்றிக்கு
அறிகுறியானவாத்தியங்கள், முந்த- முன்னே, முழங்க- மிக ஒலிக்கவும், அந்த
முனிக்கு எதிர்நடந்தான் - அந்தத் துரோணனெதிரிற்சென்றான்; ( எ -று.)

     குருக்குருகுலமெனச் சந்தவின்ப நோக்கியிரட்டித்தது. பி-ம்: ஒலிப்பதுபோல். (55)

11.- திருஷ்டத்யும்நன் பலரை அம்பெய்து மாய்த்தல்

இருவர்பெருஞ்சேனையுமுற்றெதிரெதிராயுதமேந்தி
ஒருவரொருவரைவேறற்கொண்ணாதவமருடற்றச்