பக்கம் எண் :

பதினைந்தாம் போர்ச்சருக்கம்391

சாபாநுக்கிரகச் சொற்களையுடையாயெனினுமாம்; புகழையுடையாய் என்றலு
மொன்று.                                                (650)

வேறு.

34.கற்கொண்டு கன்மழைமுன் றடுத்த கண்ணன் கற்கறித்துப்
                      பன்முறித்துத் கழறத் தானு.
முற்கொண்ட விரதமறத் தியாருங்கேட்பமுரசுயர்த்தோன்
                 பொய்சொன்னான் முடிவி லந்தச்.
சொற்கொண்டுவெறுங்கையனா மளவிற்றிட்டத்துய்மனென
                 நின்றகுருத் துரோகி கொன்றான்,
விற்கொண்டு பொரநினைந்தா லிவனே யல்ல
        விண்ணவர்க்கு மெந்தைதனைவெல்ல லாமோ.

     (இ-ள்.)  கல் கொண்டு - (கோவர்த்தன) மலையைக்கொண்டு, கல்மழை
முன்தடுத்த - கல்மழையை முன்பு தடுத்த, கண்ணன்-, கல்கறித்து பல் முறித்து-
கல்லைக்கடித்தாற்போலப் பற்களைக் கடித்துக்கொண்டு, கழற-சொல்லவே, முரசு
உயர்த்தோன் தான்உம்-முரசக்கொடியை உயர நிறுத்தியவனான  தருமபுத்திரனும்,
முன் கொண்ட விரதம் மறந்து - பழமையாக (த்தான்) கொண்டுள்ள
(சத்தியமேபேசுதலாகிய)விரதத்தைத் தவறி, யார்உம் கேட்ப-
எல்லாருங்கேட்கும்படி(வெளிப்படையாக), பொய் சொன்னான்; முடிவில்-முடிவிலே
(அதன்பின்பு என்றபடி), அந்த சொல் கொண்டு வெறுங்கையன் ஆம் அளவில் -
அந்தவார்த்தையை உண்மையாகக்கொண்டு (என்தந்தை படைக்கலமொழிந்து)
வறுங்கையனாகுமளவில், திட்டத்துய்மன் என நின்ற குருத்துரோகி -
த்ருஷ்டத்யும்நனென்று பெயர்கூறப்பட்டுநின்ற குருத்துரோகியானவன், கொன்றான்-
(அவனைக்) கொன்றிட்டான்; (இங்ஙனமன்றி), வில்கொண்டு பொர நினைந்தால்-
(என்தந்தை) வில்லைக் கையிற்கொண்டு போர்செய்ய எண்ணினால், இவன்ஏ
அல்ல -இந்தத்திட்டத்துய்மனே யல்லன்: விண்ணவர்க்குஉம் - தேவர்கட்கும்,
எந்தைதனைவெல்லல் ஆம்ஓ - என் தந்தையை வெல்லுதல் இயலுமோ? (இயலா
தென்றபடி);(எ - று.)-என்று அசுவத்தாமன் புலம்பினான்.

     கற்கொண்டுகன்மழைதடுத்த, கண்ணன்-'கன் மாரியாகையாலே,
கல்லையெடுத்து ரக்ஷித்தான்; நீர் மாரியாகில், கடலை யெடுத்து ரஷிக்குங்காணும்
என்று பட்டர் அருளிச்செய்வர்; இத்தால், இன்னத்தைக்கொண்டு இன்னகார்யஞ்
செய்யக்கடவோ மென்னும் நியதி யில்லை; ஸர்வசக்த னென்கை' என்ற
வியாக்கியாநவாக்கியம் இங்கு அறியத்தக்கது,' 'கற்கொண்டு' என்றது -
அந்தமலைமுழுவதையும்ஒருகல்லை யெடுத்தாற்போல அநாயஸமாக எளிதில்
எடுத்தமை தோன்றுதற்கு.வற்புறுத்தித் தருமனைப் பொய் கூறச்
சொல்லினனென்பது, 'கற்கறித்துப் பன்முறித்துக்கழற' என்பதனால் விளங்கும்.
'கற்கறித்துப் பன் முறித்து'-தொகையுவமையணி.குருவைக் கொன்றதனால்,
திட்டத்துய்மன் 'குருத்துரோகி' எனப்பட்டான்- பி-ம்: காத்தகள்வன்கட்டுரைத்த
மொழிப்படியே கருதார்போரின்.

     இதுமுதல் எட்டுக்கவிகள்-பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றைநான்கும் மாச்