பக்கம் எண் :

392பாரதம்துரோண பருவம்

சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள் (651)

35.-அசுவத்தாமன் எதிர்ப்பக்கத்தவரனைவரையுங் கொல்வேனென்று
தொடங்குதல்.

இப்புதல்வன்றிருத்தாதைபாடுநோக்கியிவ்வகையேயிரங்கு
                                 தலுமிராசராச,
னப்புதல்வன்றன்னையெடுத்தாற்றித்தேற்றியம்புயக்கணருவி
                          துடைத்தளிசெய்காலை,
யெப்புதல்வருடனும்விறற்குந்திமைந்தரியாவரையுஞ்சென்னி
                            துணித்தியாகசேனன்,
மெய்ப்புதல்வன்றனையுமறமலைவனென்னாவில்வளைத்தான்
                      சொல்வளையாவேதநாவான்.

     (இ-ள்.) இ புதல்வன் துரோணபுத்திரனான இந்த அசுவத்தாமன், திரு
தாதைபாடு நோக்கி-(தனது) மேலான தந்தையின் அழிவைக்குறித்து, இ வகைஏ
இரங்குதலும் - இவ்வாறே சோகித்தவளவிலே,-இராசராசன்-அரசர்க்கரசனான
துரியோதனன், அ புதல்வன் தன்னை -  அந்தத்துரோணபுத்திரனை, எடுத்து-,
ஆற்றி - ஆறுதல்கூறி, தேற்றி - சமாதானப்படுத்தி, அம்புயம் கண் அருவி
துடைத்து - தாமரைமலர்போன்ற அவன்கண்களினின்று இடையறாதுபெருகும்
நீர்ப்பெருக்கைத் துடைத்து, அளி  செய் காலை-அன்பு காட்டியபொழுது,-சொல்
வளையா வேதம் நாவான்-சொல்தவறாத வேதம்வல்லநாக்கையுடையவனான
அசுவத்தாமன்,-எ புதல்வருடன்உம் - இராசகுமாரரெல்லாருடனே, விறல் குந்தி
மைந்தர் யாவரைஉம் - வெற்றியையுடைய குந்தி புத்திர ரெல்லாரையும்
(பாண்டவரைவரையும்), சென்னி துணித்து-தலையறுத்து, யாகசேனன் மெய்
புதல்வன்தனைஉம் அற மலைவன்-துருபதனது சிறந்த புத்திரனான
திட்டத்துய்மனையும் உயிர்நீங்கக் கொல்வேன்,' என்னா-என்று சபதஞ்செய்து,
வில்வளைத்தான்; (எ-று.)- 'சொல்வளையா'என்பதற்கு-எவராலும் இகழ்ந்து
சொல்லுதற்குக்கூடாத என்றும் உரைக்கலாம். பி - ம்: தனைச்சேர.  (652)

36.- கண்ணன் கட்டளையால் அனைவரும் படைக்கலமும்
வாகனமும் ஒழிதல்.

பாகசாதனன்மதலைதெய்வப்பாகன்பாகடருநெடும்பனைக்கைப்
                                பகட்டின்மேலோன்.
மேகமேனியன்விரைவிற்றல்கள்சேனைவேந்தையெலாஞ்
                       சென்றெய்திவில் வாள்வேலும்,
வாகனாதியுமகற்றிநின்மினென்ன மாருதிமைந்தனை
                        யொழிந்தோர்மண்ணின்மீது.
யோகஞானியராகியனைத்துளோருமொருவரைப்போனிராயுதரா
                               யொடுங்கிநின்றார்.

     (இ-ள்.) மேகம் மேனியன்-மேகமபோலாக்கரிய திருமேனியையுடையவனும்,
பாகசாதனன் மதலை தெய்வம் பாகன் - இந்திரனுடைய குமாரனான அருச்சுனனது
தெய்வத்தன்மையுள்ள தேர்ப்பாகனுமாகிய கண்ணன், பாகு அடரும் நெடும் பனை
கைபகட்டின் மேலான்-பாகனைக்கொல்லுந் தன்மையதும் நீண்ட பனைமரம்போன்ற
துதிக்கையையுடையதுமான ஓர் ஆண்யானையின்