யத் தலைமேல்வைத்தன ரென்க. மாற்றரிய மறை-வேறு எந்த மந்திராஸ்திரபலத்தினாலுந்தடுக்க முடியாத பேராற்றலையுடைய மந்திர; மென்றபடி. (654) 38.- நாராயணாஸ்திரம் அனைவரையும் நீங்கி வீமன்மேற் செல்லுதல். பாருவித்திசையுருயண்டகூடம் பாதலத்தினுடனுருவிப்பரந்துசீறி யோரொருவருடலின்மிசைமயிர்க்காறோறுமோரொருவெங்கணையாய் வந்துற்றகாலை நேரொருவர்மலையாமற்றருமன்சேனைநிருபரொலாநிராயுதராய் நிற்றல்கண்டுலோ போருருவமுனிமைந்தன்றொடுத்தவாளிபொருபடைகொண்மாருதி மேற்போனதா. |
(இ-ள்.) முனி மைந்தன் - துரோணபுத்திரனான அசுவத்தாமன், போர் உருவ-போரிலே (பகைவர்மேல்) ஊடுருவிச்செல்லும்படி, தொடுத்த-பிரயோகித்த, வாளி-அந்த நாராயணாஸ்திரமானது, பார் உருவி-பூமியைத்துளைத்தும், திசை உருவி -திக்குகளைத் துளைத்தும், பாதலத்தினுடன் அண்டகூடம் உருவி- பாதாளலோகத்துடனே, அண்டகோளத்தின்முகட்டையும் துளைத்தும், பரந்து-பரவி, சீறி-கோபங்கொண்டு, ஓர் ஒருவர் உடலின்மிசை மயிர்க்கால் தோறுஉம் ஓர் ஒரு வெம் கணை ஆய்-ஒவ்வொருவரது உடம்பிலுள்ளமயிர்க்காலொவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கொடிய அம்பாய்ப் பெருகி, வந்து உற்றகாலை-வந்து அடுத்தபொழுது,-தருமன்சேனை நிருபர் எலாம்-யுதிட்டிரனதுசேனையிலுள்ள அரசர்களெல்லாரும், நேர் ஒருவர் மலையாமல்-எதிரில் ஒருவரும்போர் செய்யாமல், நிராயுதர் ஆய் நிற்றல்-(கையிற்) படையெடாதவராய்வணங்கிநிற்பதை, கண்டு-பார்த்து, (அந்தத்தெய்வஅஸ்திரம்), பொரு படை கொள்மாருதி மேல் போனது-போர்க்குரிய ஆயுதத்தை யேந்தியுள்ள வீமசேனன்மேற்சென்றிட்டது; (எ - று.)-ஆல்-ஈற்றசை. ஓ-வியப்பிடைச்சொல்; தவறாமலழிக்கவல்லநாராயணாஸ்திரத்துக்கு அவரனைவருந் தப்பியுய்ய, அது வீமன்மேல் மாத்திரம்சென்றமையா லாகிய வியப்புப்பற்றி வந்தது. அந்தச்சிறந்த அஸ்திரத்துக்கு, படையெடாதவர்மேற் புக்குத் தொழில் செய்யாமைஇயல்பென்க. போர் உருவம் முனிமைந்தன்-போரிற் பெருமிதத்தோற்றமுடைய அசுவத்தாமன்; யுத்தமே ஒருருவங்கொண்டுவந்தாற் போன்ற துரோணன துகுமாரனான அசுவத்தாம னென்றலுமாம். (655) 39.-வீமன் அந்த அஸ்திரத்தை யெதிர்த்தல். காற்றின்மதலையுந்தனதுதடந்தேருந்திக்கண்சிவந்துமனங்கருகிக் கால்வில்வாங்கிக், கூற்றமெனவெதிர்சென்றுமுனிவன்மைந்தன்கொடுங்கணையை மதியாமற்கடுங்கணாளன், வேற்றுருவங்கொடுகனலிமுதலாவுள்ளவிண்ணவர்தம்பகழிகளாய் மேன்மேல்வந்த, மாற்றரியபகழிகளையொன்றுயொன்றுக்கொன்று மாறானபகழிகளான் மாற்றினானே. |
(இ-ள்.) (பின்பு) காற்றின் மதலைஉம்-வாயுபுத்திரனான வீமனும், தனது தட தேர்உந்தி-தன்னுடைய பெரிய தேரைச் செலுத்தி, கண் சிவந்து மனம் கருகி- (கோபத்தாற்)கண்கள் சிவந்து மனம், வெதும்பி, வில்கால் வாங்கி-தநுர்த்தண்டத்தை வளைத்து, |