தருமபுத்திரனுடனே, சேனை-(அவனுடைய) சேனையும், பாசறை அடைந்த பின்- படைவீட்டை யடைந்த பின்பு,-அடல் மன்னர் மன்னன் எனும் மன்னன்- வலிமையையுடைய இராசாராசனென்று பெயர் பெற்ற துரியோதனராசன், மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி-(துரோணவதத்தால்) மயக்கமிக்க தனித்த மனமுடையவனாய், உருள் பரந்த ரததுரக குஞ்சர பதாதியோடு-சக்கரங்களால் விரைந்துசெல்லுகின்ற தேர்களும் குதிரைகளும் யானைகளும் காலாள்களுமாகிய சதுரங்கசேனையுடனே, கடிதுஓடினான் - விரைவாக ஓடிப்போனான்;(எ - று.)பி-ம்: மைந்தனடு-பரந்திரத். (663) 47,48,- இரண்டுகவிகள் ஒருதொடர்: துரியோதனன் சஞ்சயனைத் தந்தையிடம் அனுப்புதலைத் தெரிவிக்கும். தனதுபாசறையிலானவக்குரிசில்சஞ்சயன்றனையழைத்துநீ நினதுகாதலுயிரனையவெந்தைதனைநிசிதனிற்கடிதினெய்தியே புனைதுழாய்மவுலிவிரகினான்முரசுயர்த்தபூபனுரைபொய்த்ததும் எனதுவாழ்வுவலிவென்றிதேசுறுதியாவுமாமுனியிறந்ததும்.தனஞ்சயன்றலைதுணிக்கநின்றவரிசாபகோபமுதிர்சாயகத் தினஞ்செய்நாதனருள்செல்லமாதலைசேனைநாதனினியாவதும் இனஞ்செய்வண்டுமுரறாமார்பனொடியம்பிமேனிகழ்வயாவையு மனஞ்செய்திவ்விரவுபுலருமுன்கடிதின்வருகவென்றனன்வணங்கியே. |
(இ-ள்.) (47) தனது பாசறையில் ஆன - தன்னுடைய படை வீட்டிற் சேர்ந்த அ குரிசில்-அந்தத்துரியோதனராசன்,-சஞ்சயன்தனை அழைத்து - சஞ்சயமுனிவனை வரவழைத்து,-(48) வணங்கி - நமஸ்கரித்து,-(அவனைநோக்கி),-(47) 'நீ-,-நினது காதல் உயிர் அனைய எந்தைதனை-உன்னுடைய அன்புக்கிடமான உயிரையொத்த (பிராணசினேகிதனான) என் தந்தையை, நிசிதனில்-இவ்விரவிலே, கடிதின் எய்தி - விரைவாய் அடைந்து,-புனை துழாய் மவுலி - தரித்த துளசிமாலையையுடைய முடியையுடையவனான கண்ணனது, விரகினால் தந்திரத்தால், முரசு உயர்த்த பூபன் உரைபொய்த்ததுஉம் - முரசக்கொடியை உயர வெடுத்த யுதிட்டிரராசன் பொய்பேசியதையும்,-எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாஉம் ஆம் முனி- என்னுடைசெல்வ வாழ்க்கையும் வலிமையும் வெற்றியும் ஒளியும் தைரியமும் ஆகிய எல்லாவற்றி னுருவமுமாயிருந்த துரோணன், இறந்ததுஉம்-இறந்ததையும்,-(48) தனஞ்சயன் தலை துணிக்க நின்ற - அருச்சுனனது தலைதுணித்தற்குத் துணிந்துநின்ற, வரி சாபம் கோபம் முதிர் சாயகம் - கட்டமைந்த வில்லையும் கறு மிக்க நாகாஸ்திரத்தையுமுடைய, தினம் செய் நாதன் அருள் செல்வம் மா மதலை - பகலைச்செய்கின்ற தலைவனான சூரியன் பெற்ற சிறந்த செல்வப் பிள்ளையாகிய கர்ணன், இனி சேனைநாதன் ஆவதுஉம் - இனி மேல்(எனக்குச்) சேனைத்தலைவனாவதையும்,-இனம் செய் வண்டு |