பக்கம் எண் :

42பாரதம்துரோண பருவம்

     சத்தியகேது - உண்மைக்குக் கொடிகட்டியுள்ளவ னெனப் பொருள்படும் :
இவனைக் காசிராஜ வமிசத்தவனான விபுவின் தந்தை யென்று கூறுகின்றனர். ஒன்றை
இரண்டாக்குதல் வல்லார்செயலாதலால் அங்ஙனம் செய்தானென ஒருசமத்காரந்
தோன்ற ' இரண்டாக்கி' என்றார். அளவிறந்த அழிவற்ற செல்வவொளிகளுக்குச்
சிகண்டமென்றுபெயர்; அதனையுடையவன், சிகண்டீ; இது, திருமாலின்
ஆயிரநாமங்களுள் ஒன்று; அதுவே இவனுக்குப் பெயராக     
இடப்பட்டதுபோலும். பி-ம்: சிகண்டியையுந் தேரழித்திட்டு. உத்தமபானுவை.  (59)

15.தாண்டியவெம் பரிநகுல சாதேவர் வென்னிட்டார்
பாண்டியனு முதுகிட்டான் பாஞ்சாலர் புறமிட்டார்
ஈண்டியவெங் களத்தவிந்தா ரெத்தனையா யிரம்வேந்தர்
தூண்டியவெம் பரிநெடுந்தேர்த் துரோணன்கைத்தொடையாலே.

     (இ-ள்.) (அப்பொழுது), தூண்டிய - செலுத்திய, வெம் பரி - வேகமான
குதிரைகளைப்பூட்டிய, நெடு தேர் - பெரிய தேரையுடைய துரோணன் -
துரோணனது, கை - கையினால் (விடப்பட்ட), தொடையால்- அம்புகளால், தாண்டிய
வெம் பரி நகுல சாதேவர் - தாவிச்செல்லுகிற வேகமுள்ள  குதிரைத்தொழிலில்
வல்ல நகுலனும் சகதேவனும், வென் இட்டார் - முதுகுகொடுத்தார்கள்; பாண்டியன்
உம் - பாண்டியநாட்டரசனும், முதுகு இட்டான் - முதுகுகொடுத்தான் ; 
பாஞ்சாலர் -பாஞ்சாலராசர்கள், புறம் இட்டார் - முதுகு கொடுத்தார்கள்; 
(இவைஇன்றி), ஈண்டிய- நெருங்கிய, வெம்- கொடிய, களத்து - போர்க்களத்தில்,
அவிந்தார் - இறந்தவர்,எத்தனை ஆயிரம் வேந்தர் - மிகப்பலவாயிரம்
அரசர்களாவர்;  (எ -று.)

     நகுலன் குதிரைத்தொழிலில்வல்லவ னாதலால், 'தாண்டியவெம் பரி நகுலன்'
எனப்பட்டான். தோற்றுப்பின்னிடைதலென்ற ஒரு பொருளை, வென்னிட்டார்,
முதுகிட்டான், புறமிட்டார் என வெவ்வேறு சொற்களாற் குறித்தது -
பொருட்பின்வருநிலையணி. இங்கே பாண்டியனென்றது, அருச்சுனன்மனைவியான
சித்திராங்கதையின் தந்தையாகிய சித்ரவாகனனை.                       (60)

வேறு.

16.-துரோணனும் தருமனும் நெருங்குதல்.

வடுத்தரு வெஞ்சி லீமுகமும் வணக்குகொ டுஞ்ச ராசனமும்
எடுத்தும னங்க தாவுசின மெழுப்பவே ழுந்தொ ரோர்நொடியில்
நடுத்தகை வின்றி வானவரு நடுக்குறு கின்ற போர்முனையில்
அடுத்தனர் வன்ற போதனனு மடற்றரு மன்கு மாரனுமே.

     (இ-ள்.) (பின்பு), வானவர்உம் - தேவர்களும், நடுக்கு உறுகின்ற -
(கண்டுஅஞ்சி) நடுக்கமடையும்படியான, போர் முனையில் - போர்க்களத்தில்,
வல்தபோனன்உம் - வலிமையையுடைய துரோணாசாரியனும், அடல் தருமன்
குமாரன்உம் - வலிமையையுடைய தருமபுத்திரனும், மனம் - (தம்தம்) மனத்தில்,
கதாவு - மிகுதியாகப் பொருந்திய, சினம் - கோபம், எழுப்ப - (தம்மைத்) தூண்ட,
வடு தரு - விரணத்