இயையும். இன்று சாலும் என - இன்றைக்கே (போர்) முடியுமென்று எனினுமாம். பி -ம்:மிலைச்சினரிந்த்ரசால்மென. (67) 23.- தருமன் குருவின்பதாகை முதலியவற்றை ஒழியுமாறு செய்தல். சினத்துமுனைந்தபோரில்வருசிலைக்குருவின்பதாகையற மனத்தினுமுந்துமாதுணியவயத்துடனுந்துபாகன்விழ வனைத்துருளூஞ்சதாவியிடவடுக்குறநின்றதேரழிய வினத்தொடையைந்துபூபதியுமிமைப்பொழுதின்கணேவினனே. |
(இ-ள்.) சினத்து - கோபத்தோடு, முனைந்த - முயன்று செய்த, போரில் - யுத்தத்தில், வரு -(எதிர்த்து) வந்த, சிலை குருவின் - வில்லாசிரியனான துரோணனது,பதாகை-(வேதக்) கொடி, அற - அறுபடவும், மனத்தின்உம் முந்து - மனோவேகத்தினும் முற்படச்செல்லுகிற, மா - குதிரைகள், துணிய - துண்டாகவும், வயத்துடன் - வலிமையோடு, உந்து -தேர்செலுத்துகின்ற, பாகன் - சாரதி, விழ - இறந்து கீழே விழவும், அனைத்து உருள்உம் - தேர்ச்சக்கரங்களெல்லாம் சதாவியிட - சிதைந்து விழவும், அடுக்க உற நின்ற - (அனேக அங்கங்கள் ஒன்றன்மேலொன்றாக) அடுக்கியிருக்கின்ற, தேர்-, அழிய - அழியவும், இனம் தொடை ஐந்து - ஒருசாதியான ஐந்து அம்புகளை, பூபதிஉம் - பூமிக்குத்தலைவனான யுதிட்டிரனும், இமை பொழுதின் கண் - ஒருமாத்திரைப்பொழுதிலே, ஏவினன் - (அக்கொடி முதலிய ஐந்தன்மேலும் தனித்தனி) செலுத்தினான்; (எ -று.) ஒருபொருளை நினைத்த மாத்திரத்தில் மனம் அப்பொருள் எவ்வளவு தூரத்திலிருப்பினும் அவ்விடத்தே செல்லுதலால், மனம், வேகத்துக்குச் சிறந்த உவமையாகக் கூறப்படும், 'விழ' என்றது- மங்கலவழக்கு. (68) 24.- இதுவும் அடுத்த கவியும் குளகம்: படையிழந்த துரோணனைத் தருமன் ஏகுமாறுசொல்ல அவன் ஏகுதல். தனித்துமலைந்தபோரிலெழுதலத்தரசன்கைவாளிகளில் அனத்தம்விளைந்தநாணொடுவிலறத்துணியுண்டதாகவமுன் முனிக்குலமென்றுமாதிமறைமுதற்குருவென்றுமேன்மையுற இனிக்கணையொன்றுமேவுகிலமிளைப்பறவஞ்சலேகெனவே. |
(இ-ள்.) தனித்து மலைந்த போரில்- (வேறு எவருந் துணையில்லாமல் தருமனும் துரோணனும் தொந்தயுத்தமாகத்) தனித்துச் செய்த போரிலே, எழு தலத்துஅரசன் - ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுவதுக்கும் இராசனான தருமனது, கைவாளிகளில் - கையினா லெய்யப்பட்ட அம்புகளால், அனத்தம் விளைந்து - (துரோணனுக்குத்) தீங்கு உண்டாகி, நாணொடு வில் அற துணியுண்டது- நாணோடுகூடிய வில் இரண்டாம்படி துணிக்கப்பட்டது; (அப்பொழுது), ஆகவம் முன் - போர்க்களத்திலே, (தருமன் துரோணனை நோக்கி), 'முனிகுலம் என்றும் - (நீ பிறந்தசாதி) பிராமணசாதி யாதலாலும், ஆதி மறை முதல் குரு என்றும் - பழமையான வேதம் வல்ல சிறந்த ஆசிரியனாதலாலும், மேன்மை உற - (உன்பக்கல் எமக்குக்) கௌரவபுத்தியிருத்தலால், இனி கணை ஒன்றுஉம் ஏவுகிலம்- |