இன்றி - (மீண்டும்ஏறிப்போர்செய்தற்கு) வேறொருதேரும் இல்லாமல், பல் நூறு தேர்தனை புரக்க - பலநூறுதேர்வீரர்கள் (தன்னைப்) பாதுகாக்க, நொய்தினில் - விரைவில், கழற்றினான்- (தன்னை) அச்சேனையினின்று) நீக்கிக்கொண்டான்; ( எ -று.) போரினின்று விலகுதற்றொழிலைக் செய்வதற்கே வருத்தப்பட வேண்டியதாயிற் றென்ற பொருள் தோன்ற, 'கழற்றினான்' எனப் பிறவினையாற் கூறினார்; இனி தன்வினைப்பொருளைப் பிறவினைச் சொல்லாற் குறித்தாருமாம். இனி இதனை, கழறினான் என்றதன் விரித்த லெனக்கொண்டு, அநேகநூறுதேர்வீரர் தன்னைப் பாதுகாக்கும்படி தந்திரமாகச்சொன்னான் என்று உரைப்பாரு முளர். விற்குஉடைந்து, நான்கனுருபு - பகைப்பொருளின்பாற்படும். பி - ம் : தேருமேறிநின்று. (88) 44.-அதுகண்ட பகதத்தன் தருமன் சேனையை எதிர்க்கவருதல். முனியு மேனை யானை தேரின் முடுகி வந்த நிருபருங் குனிசி லக்கை யபிமன் வெங்க ணைக்கு வென்கொ டுக்கவே யினிந மக்கு நல்ல கால மென்று சீறி யெய்தினான் றனித மிக்க சலத மன்ன சதம கன்ச காயனே. |
(இ-ள்.) முனியும்- கோபங்கொண்ட, யானை தேரின் முடுகி வந்த- யானைகளின்மேலும் தேர்களில்மேலும் விரைவாகவந்த, ஏனை நிருபர்உம் - (துரியோதனன் முதலிய) மற்றையரசர்களெல்லோரும், குனி சிலை கை - வளைந்தவில்லைப்பிடித்த கையையுடைய, அபிமன்- அபிமந்யுவினது, வெம் கணைக்கு - கொடிய அம்புகளுக்கு, வென் கொடுக்கஏ - முதுகுகொடுக்கவே,- (அச்சமயத்தில்), தனிதம் மிக்க - இடிமிகுந்த, சலதம் - மேகத்தை, அனன - ஒத்த,சதமகன் சகாயன்- இந்திரனது துணைவனான பகதத்தன், இனி நமக்கு நல்ல காலம்என்று - (போர்வலிமைகாட்டற்கு) இப்பொழுது நமக்கு நலல சமயமென்று, சீறிஎய்தினான் - கோபங்கொண்டு எதிர்த்து வந்தான்; (எ-று.) சிறந்தபோர் எப்பொழுதுநேருமோ என்று சமயத்தை எதிர்பார்த்திருக்குஞ் சுத்தவீர னாதலால், 'இனி நமக்கு நல்ல காலம்' என்றான். இவன் வருகிற ஆரவாரத்துக்கு 'தனிதமிக்கசலதம்' என உவமைகூறினார், முனியும்- எதிர்காலப்பெயரெச்சம்; இதற்கு - துரோணனும் என்று பொருள் கூறுதல், இவ்விடத்துக்குப்பொருந்தாது. பகதத்தனைச் சதமகன் சகாயனென்ற விவரம், நான்காம் போர்ச்சருக்கத்துக் கூறப்பட்டது. (89) வேறு. 45.- மூன்றுகவிகள் - பகதத்தன்வருஞ் சிறப்புக் கூறும். அதிதவள மத்த வார ணமுமுத லமுதமத னத்தி லாழி மிசை வரு, மதகளிறு சுத்தமாக விவனும மகபதியெ டுத்த கார்மு கமுமவ, னெதிர்தரவெடுத்த சாப மிவனுட னிகல்செயநி னைக்க யாவருளரென, விதமுறவ குத்தயானை யணியுடன் விருதுபக தத்த ராசனுதவவே. |
|