பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்59

     இதுமுதல் ஏழுகவிகள்- குளகம்;அவற்றில், முதல் மூன்றரைச் செய்யுள்
ஒருதொடரும், மற்றவை ஒருதொடருமாம்.

     (இ-ள்.) 'அதி தவளம்- மிக வெண்ணிறமான, மத்த வாரணம்உம்-
மதம்பிடித்த(இவனது) யானையும், முதல் - பூர்வ காலத்தில், அமுத மதனத்தில் -
தேவாமிருதத்துக்காகக் கடைகையில், ஆழிமிசை- திருப்பாற்கடலின்மேல், சுத்தம்
ஆகவரும் - வெண்ணிறமாகத் தோன்றிய, மதம் களிறு- (ஐராவதமென்னும்
இந்திரனது) மதயானையேபோலும்; இவன்உம்-, அ மகபதி - அந்த இந்திரனே
போல்வான் ; எடுத்த கார்முகம்உம்- (இவன்கையில்) ஏந்திய வில்லும், அவன்-
அவ்விந்திரன், எதிர்தர- (பகைவர்) எதிர்க்கையில், எடுத்த - (கையில்) எடுத்த
சாபம்-வில்லேபோலும்; இவனுடன் இகல்செய நினைக்க - இவனொடு (எதிர்த்துப்)
போர்செய்தற்கு நினைக்கவும், யாவர்உளர் - எந்தவீரர் தகுதியுள்ளார்?' என -
என்று, விருது உதவ - (துதிபாடகர்) பிருதாவளிகளைக்கூற, - விதம் உற வகுத்த -
பலவகையாகப் பகுக்கப்பட்ட, யானை அணியுடன்- யானைச்சேனையுடனே,-
பகதத்தராசன்-,- (எ-று.)-"களத்திலானபொழுதிலே" என 47 - ஆங் கவியோடு
தொடரும்.

     இவன் ஏறிவரும் பட்டத்துயானைக்கு 'சுப்பிரதீகம்' என்று பெயர்; இது
தேவயானையென்றும், இந்திரனால் இவனுக்கு அளிக்கப்பட்ட தென்றுங் கூறப்படும்;
இது நூறாயிரம்யானை பலமுடைய தென்று பெருந்தேவனார் பாரதத்து
உரைநடையால் தெரிகிறது. இவனதுவில்லைப் பெருந்தேவனார்
"கடவுட்சிலை" என்றதையும் இங்கே யறிக. மத்தவாரணம், அம்ருதமநம், சுத்தம்-
வடசொற்கள். விருது- பிரதாபத்தை வெளியிடும் வாக்கியங்கள்; வெற்றி யென்று
கூறினாருமுளர். அம்மகபதியென்பது, சந்தவின்பத்துக்காகத் தொக்கது. பி-ம்: -
உயர்மகபதி.

     இதுமுதற் பத்துக்கவிகள்- பெரும்பாலும் ஒன்று ஐந்தாஞ்சீர்கள்
கருவிளங்காய்ச்சீர்களும், இரண்டுமூன்று ஆறுஏழாஞ்சீர்கள் தேமாச்சீர்களும்,
நான்குஎட்டாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும் ஆகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியச்சந்த விருத்தங்கள். 'தனதனன தத்த தான தனதன தனதனன
தத்ததான தனதன' எனச் சந்தக்குழிப்புக் காண்க.                  (90)

46.இருபத்திற்றுநூறுகளிறுள விவனினுமிகுத்தவீரர்கடவுவ.
ரொருபதுபதிற்று றுவமையெனமிக்கவாகுவலியினன்.
நூறுமழகளிமுருகனெனவெற்றிநேமிமுகிலென
                முரணவுணருக்கு வாழ்வுகெடவுயர்,
சுரபதிதனக்குவாழ்வுவரும்வகை சுரருலகளித்த
                             தோழனிவனரோ.

     (இ-ள்.) இருபது பதிற்று நூறு களிறு - இருபதினாயிரம் யானைகள், உள-
(இவனுக்கு) உள்ளன; (அவற்றை), இவனின்உம் மிகுத்த வீரர் - இவனைக்காட்டிலுஞ்
செருக்கிய வீரர்கள், கடவுவர்- செலுத்துவார்கள்; இவன்-, ஒருபது பதிற்றுநூறுமழ
களிறு உவமைஎன- பதினாயிரம் இளையஆண்யானைகள் ஒப்பு என்று சொல்லும்
படி, மிக்க- மிகுந்த, வாகு வலியினன் - தோள்வலிமையையுடையான்;