பக்கம் எண் :

60பாரதம்துரோண பருவம்

முருகன் என- (தேவசேனாபதியான) சுப்பிரமணியமூர்த்திபோலவும், வெற்றி நேமி
முகில் என - சயத்தைத்தருகிற சக்கராயுதத்தையுடைய மேகம்போன்ற
திருமால்போலவும், முரண் அவுணருக்கு வாழ்வு கெட- வலிமையையுடைய
அசுரர்களுக்கு வாழ்க்கையொழிய, உயர் சுரபதிதனக்கு - சிறந்த தேவேந்திரனுக்கு,
வாழ்வு வரும் வகை - நல்வாழ்க்கையுண்டாகும்படி, சுரர் உலகு அளித்த - தேவ
லோகத்தை (மீட்டு)க்கொடுத்த, தோழன் - சினோகிதன்; (எ - று.) அரோ- ஈற்றசை.
கீழ்ச்செய்யுளில் 'பகதத்தராசன்' எனப் பெயரைப் குறித்த ஆசிரியர், இப்பாட்டால்,
அவனது சிறப்புக்களைத்  தெரிவித்தார்; ஆதலின், இது - குளகத்தில்
இடைப்பிறவரலாக நின்றது. பி - ம் :- கடவுவ.

     'பதினாயிரம்யானைப் பலமுடையான் நூறாயிரம்யானையின் பல முடையதோர்
சுப்பிரதீபமென்னும் மதஹஸ்தியை மேற்கொண்டு' என்றார், பெருந்தேவனாரும்.
முருகு- தெய்வத்தன்மை, இளமை, வலிமை; அவற்றையுடையவன்- முருகன்:
சூரபதுமன் முதலிய அசுரர்களைச் சங்கரித்தற்காகவே அவதரித்தவ னாதலால்
முருகனையும். பற்பலசமயங்களில் பகைவரை யொழித்து அமரரைக் காத்ததனால்
திருமாலையும், பகதத்தனுக்கு அசுரசங்காரத்திலும் தேவபரிபாலனத்திலும்
உவமைகூறினார். முகில்- உவமையாகுபெயர். 'சுரபதிதனக்கு' என்பதை
'வாழ்வுவரும்வகை'  என்றதோடும், 'சுரருலகளித்த' என்றதோடும், 'தோழன்'
என்றதோடும் கூட்டுக. பாற்கடலைக் கடைந்தகாலத்து அதினின்று உண்டானதொரு
சுரையை [வாருணியென்னும் ஒருவகை மதுவை] ப் பானஞ்செய்தது பற்றித்
தேவர்க்குச் சுரர் என்றும், அதனைப்பானஞ்செய்யாதது பற்றி மற்றொரு
திறத்தார்க்குஅசுரர் என்றும் பெயர்.                                 (91)

47.எழிலணிதடக்கைமேருகிரிநிக ரிபசிரமதைக்கமோதியுருமென,
மொழியுறவதிர்த்துநீடுபுயகிரிமுறைமுறைதடிக்கவேகமொடுபுகை,
பொழிசினமனத்தின்மூளவவிரொளிபுனைநுதல்வெயர்க்க
                                    வாயுகதியென,
விழிவழிநெருப்புவீழவிரைவுடன் விறன்மிகு களத்திலான
                                     பொழுதிலே.

     (இ-ள்.) எழில் அணி- அழகுபெற்ற, தட கை - பெரியதுதிக்கையையுடைய,
மேரு கிரி நிகர் இபம் - மகாமேருமலையையொத்த (தான் ஏறிய) யானையினது,
சிரம்- தலையை, அதைக்க- அழுந்தும் படி, மோதி - (கையால்) அடித்து,- உரும்
என - இடியோசை போல, மொழி உற - சொற்கள் வெளிப்படும்படி, அதிர்த்து -
ஆரவாரித்து,- நீடு புய கிரி- உயர்ந்த மலைகள்போன்ற தோள்கள், முறை முறை
தடிக்க - மேல்மேல் பூரிக்க, - புகை பொழி சினம்- புகையைச்சொரிகிற கோபத்தீ,
வேகமொடு- உக்கிரமாக, மனத்தில் மூள - நெஞ்சிற்பற்றியெழ,- (அதனால்), அவிர்
ஒளி புனை நுதல்- விளங்குகிற ஒளியைக்கொண்ட நெற்றி, வெயர்க்க-
வேர்வையடையவும்-, விழிவழி- கண்களின்வழியாய், நெருப்பு வீழ - தீச்சிந்தவும், -
வாயு கதி என - காற்றின் ஓட்டம்போல், விரைவுடன் - வேகத்தோடு, விறல் மிகு
களத்தில் - வெற்றிமிக்க போர்க்களத்திலே,