வலி, பகரிலிபமெட்டுநாணுமெதிரெறிபடைகளுணர்வுற்ற போரிலெரிவரு, புகர்முககரக்கபோலமதகரிபொருதொழிலுரைக்கலாகுமளவதோ. |
(இ-ள்.) மகரிகை- பூணையணிந்த, மருப்பு நால்உம்- நான்கு தந்தங்களும், இதற்கு -இவ்யானைக்கு, உள எனில்- உள்ளனவானால், வலிய குணதிக்கில் வாரணம்உம் -வலிமையையுடைய கீழ்திசை யானையான ஐராவதமும், எதிர் நிகர் அல - (இதற்கு)ஏற்றஒப்பாகாது; நாமம் உரை செயின் - (இதற்குப்) பெயர் இன்னதென்றுசொன்னால், நிலை உடைய சுப்ரதீகம் - உறுதி நிலைமையையுடைய சுப்பிரதீகம்(என்பதாம்); இதன் வலி பகரில் - இதன் வலிமையைக் கூறலுற்றால், இபம் எட்டுஉம்நாணும்- அஷ்டதிக்கஜங்களும் (தமக்கு இப்படிப்பட்ட வலிமையில்லையே யென்று)வெட்கப்படும்; எதிர் எறி - எதிரிலே வீசுதற்குரிய, படைகள் - ஆயுதங்களை,உணர்வு உற்ற - (யாவரும்) அறிந்துபிரயோகிக்கிற, போரில் - யுத்தகளத்தில், எரிவரு - தீ எழுகிற, புகர்முகம் - செம்புள்ளிகளையுடைய முகத்தையும், கரம் -துதிக்கையையும், கபோலம் மதம்- கன்னங்களினின்று பெருகுகிறமதசலத்தையுமுடைய, கரி - (இப்பகதத்தன்) யானை, பொரு - போர்செய்கிற,தொழில்-, உரைக்கல் ஆகும் அளவதுஓ- (எவராலேனுஞ்) சொல்லுதற்குத்தக்கஅளவுள்ளதோ? (எ -று.) மகரிகை - யானைக்கொம்பிற்பூண்; சுறாமீனின்திறந்தவாயின் வடிவமாகச்செய்யப்படுவது: மகரமென்பதனடியாப்பிறந்த காரணப்பெயர்; மகரம் - சுறாமீன். இனி, துதிக்கைமேல் எழுதப்படும் மகரிகாபத்திரமுமாம்; அது - சுறாமீன்வடிவமாக எழுதப்படுஞ் சித்திரரேகை; "மகரிகை தரித்த மதமா" என்றார், முதற்போர்ச்சருக்கத்தும். நான்குதந்தங்களையுடைய அந்த ஐராவதத்தினும் இரண்டுதந்தமுடைய இந்தச்சுப்பிரதீகத்துக்குக் குறைவு இரண்டு தந்தம் மாத்திரமே: வலிமைஅழகு உத்தமவிலக்கணம் அறிவு வெண்மை பாரந்தாங்குதல் உயர்ந்த வேந்தனையேந்தல் முதலிய சிறப்புக்களில் ஐராவதத்தினும் சுப்பிரதீகம் மேம்பட்டதுஎன்பது- முதல்வாக்கியத்துக்குக் கருத்து. உபமானத்தோடு உபமேயத்துக்கு உள்ளவித்தியாசத்தை விளக்கியதனால், வேற்றுமையணி. 'இதற்கு' என்பதை மத்திமதீபமாகஇரண்டு வாக்கியத்துக்குங் கூட்டுக. ஸுப்ரதீகம்என்ற வடசொல் - ஸு -நல்ல,ப்ரதீகம்- அவயவங்களையுடையது எனப் பொருள்படும். எரிவருபுகர். -அனற்பொறியை யொத்த செம்புள்ளிகளுமாம்; யானைமுகத்தில் செம்புள்ளிகளிருத்தல், உத்தமவிலக்கணம்: "தீயுமிழ் சிறுகணுஞ் செம்புகரு முடைத்தாய்" என்றது காண்க. முன்னே கரம் என வந்ததனால், பின்னே 'கரி' என்றது- துதிக்கையுடையதென்னுங் காரணப் பொருள் குறியாது, யானை யென்னுமாத்திரமாய் நின்றது. கபோல மதகரி - வடசொல்தொடர். பி-ம்:- வாரணமுமினி. நாமுமுரை செயின். படைகளுலவுற்ற. (97) 53. | கரிகளையெடுத்துவானினிடையிடைகரநுதிகொடெற்று நீடுபிறைநிக, ரிருபணைமருப்பினாலுமவரவரெதிரெதிருடைக்கு நேமியிரதமு, முரனுடையசித்ரவால்கொடெருபடியொலியொடு. |
|