பக்கம் எண் :

68பாரதம்துரோண பருவம்

     உறழ்தல் - எண்கூட்டிப்பெருக்கல். பத்தோடு பெருக்கிய பத்து- நூறு,
அதனோடு பெருக்கிய பத்து - ஆயிரம், அதனோடு பெருக்கிய பத்து -
பதினாயிரம்:அதனையுடைய எட்டு - எண்பதினாயிரம். தெரிவித்த பகழி-
(கிருபனும்துரோணனும் பரமசிவனும் கண்ணபிரானும்) கற்றக்கொடுத்த
அஸ்திரசஸ்திரங்கள்.எக்காலத்தும் ஒருபடிப்பட நித்தியமாய் அழிவில்லாததான
உயிருக்குமடிதல்-உடம்பினின்று நீங்குதல். விருது- வலிமை, வீரம், வெற்றி;
அவற்றையுடையவர்-விருதர். பி -ம் : நிருபர்.                    (101)

57.- ஸ்ரீ க்ருஷ்ணன் அருச்சுனனோடு பகதத்தனை யணுகுதல்.

அரியொத்த பரிகடவிமனமொத்த விரதமிசையமரர்க்கு
                             முதல்வன்மகனோ,
டெரிபற்றிவருமனில மெனவெற்றி வரிவளையு மிதழ்வைத்தவ்
                            வொருநொடியிலே,
கிரிமுற்று மரிவதொரு கிளர்வச்ர னெனவுதய கிரியுற்ற
                               பரிதியெனவே,
கரிசுற்றும் வரவிகட கரடக் கைம்மலையில்வருகணை
                         விக்ரமனையணுகினான்.

     (இ-ள்.) அரி ஒத்த (வேகத்தில்) வாயுவைப்போன்ற, பரி - குதிரைகளை,
கடவி-செலுத்திக்கொண்டு, மனம் ஒத்த இரதமிசை மனத்தையொத்த தேரின் மீது,
அமரர்க்கு முதல்வன் மகனோடு- தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்குப்
புத்திரனாகிய அருச்சுனனுடன், எரி பற்றி  வரும் அனிலம் என - நெருப்போடு
தொடர்ந்து வருங் காற்றுப்போல, வெற்றி வரி வளைஉம் இதழ் வைத்து- சயத்துக்கு
(அடையாளமாக)க் கோடுகளையுடைய தன் சங்கத்தையும் வாயில்வைத்து
ஊதிக்கொண்டு, அ ஒரு நொடியிலே - அந்த ஒரு மாத்திரைப் பொழுதிலே,
(கண்ணன்),- கிரி முற்றுஉம் அரிவது ஒரு கிளர் வச்ரன் என -
மலைகளெல்லாவற்றையும் இறகறுப்பதொரு விளங்குகிற வச்சிராயுதத்தையுடைய
இந்திரன் போலவும், உதயகிரி உற்ற பரிதிஎன - உதய பருவதத்தின் மேற்
பொருந்தின சூரியன் போலவும்,- கரி சுற்றும் வர - யானைகள் (தன்னைச்)
சுற்றிலும்வர, விகடம் கரடம் கை மலையில் வரு - களிமயக்கத்தையும்
மதசலத்தையும்துதிக்கையையுமுடைய மலைபோன்ற யானையின் மீது வருகிற,
கணை விக்ரமனை -அம்புதொழிலிற் பராக்கிரமத்தையுடைய பகதத்தனை,
அணுகினான்- சமீபித்தான்; (எ- று.)

     அரி - ஹரி; வடசொல்: (அகப்பட்டபொருள்களை) அடித்துக் கொண்டு
வருவது என்று பொருள். ஏறியவீரரது உள்ளக்கருத்தை யொத்துச் செல்லுவ
தென்பார், 'மனமொத்த இரதம்' என்றார்; மனோவேகம்போலச் செல்லுந் தேர்
என்றலும் ஒன்று. ( திருமால் வீற்றிருக்கும் இடமாதல்பற்றி) இதய கமலத்தை யொத்த
தேரென்றலும் அமையும். நெருப்பு- பகையழிக்கும் அருச்சுனனுக்கும், காற்று-
அவனைத் தூண்டித் தொழில் செய்விக்குங் கண்ணனுக்கும் வினையுவமை.
வடமொழி மகாபாரதத்திலும் இவ்வுவமை விவரித்துக் கூறப்பட்டுள்ளமை காண்க.
அவ்வொருநொடியிலே - தருமன் நினைத்தவுடன்  மிகவிரைவிலே என்றபடி.
முன்றாமடி - யானை மீது வரும் பகதத்தனுக்கு உவமை. இந்திரன்,
ஐராவதயானையின்மேல்