பக்கம் எண் :

70பாரதம்துரோண பருவம்

கொடிஉம்- குரங்கின் வடிவமெழுதின துவசத்தையும், நடுவண் அற- நடுவிலே
அறும்படி, வெட்டி - துணித்து, - அதி தவளம்- மிக வெண்மையானவையும், மா
கவனத்தின் முடுகி அடு- மிக்க நடையில் விசைகொண்டு பொருந்துபவையுமான,
பரி- குதிரைகளை, கொத்தி- பேதித்து,- உடலில் இடு கவசத்தை- உடம்பில் தரித்த
கவசத்தை, மறைய- (முழுவதும்) மறையும்படி, நுழையூ- நுழைந்து, சிவனுக்குஉம்-,
மலரில் உறை- தாமரை மலரில் வாழ்கிற, பிரமற்கு உம்- பிரமனுக்கும், உணர்வு
அரிய - அறிதற்கு முடியாத, திகிரிகை வலவனைஉம்- சக்கரத்தையேந்துங்
கையையுடைய (பார்த்த) சாரதியான கண்ணனையும், இ சவனத்தில்- இப்போரில்,
மிகு துயரம் உறுவிக்க- மிக்க துன்பமடையச்செய்ய,- அவசம் மிகு தளர்வு உற்ற-
தன்வசந் தப்புந்தன்மை மிகும்படியான தளர்ச்சியை யடைந்த, தனு விசயன்-
விற்போரில்வல்ல அருச்சுனன்,- (எ-று.)-, 'தனதுசிலைகுனிவித்து' என அடுத்த
கவியோடு தொடரும்.

     மூன்றாம் அடியால், "பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய
வித்தகன்" என்ற இரண்டுதன்மைகளும் நன்குவிளக்கப்பட்டன. வலவனையும், உம்-
உயர்வுசிறப்போடு இறந்ததுதழுவிய எச்சம். சவனம் என்பதை ஸவநம் என்ற
வடசொல்லின்திரிபு என்க; வேள்வியென்று பொருளாம்: பொருதல் 'களவேள்வி'
எனப்படுதல் காண்க. 'ஜவநம்' என்ற வடசொற்றிரிபு என்றால், வேகத்தால்மிக்க
தென்று காரணப்பொருள்படும். மர்க்கடம், அதிதவளம், கவசம், அவசம் -
வடசொற்கள். தநு - உடம்பையுடைய எனினுமாம். பி - ம்:- தவளவெங்.
சிவமுற்ற.வலவனையுமே.                                    (104)

60.- மூன்றுகவிகள்-அருச்சுனன் தன் பராக்கிரமத்தைக் காட்டியமைகூறும்.

உரமிக்க தனதுசிலைகுனிவித்துமதியின்வகிருவமிக்குமடு
                                   பகழியால்,
வரமிக்கதவளநிறமதவெற்பையெதிர்கடவிவருவெற்றிய
                                 வனிபதிநீள்,
கரமுற்றசிலைகவசமறவெட்டிவிடுகணைகள்கணைவிட்டு
                               விலகவவனும்,
சரம்விட்டொரயில்விசயனிரதத்தின்வலவன்மிசைத
                         மரத்தினுடனெறியவே.

      (இ-ள்.) உரம் மிக்க - வலிமை மிகுந்த, தனது சிலை - தன் வில்லை,
குனிவித்து - வளைத்து, மதியின் வகிர் உவமிக்கும்- சந்திரனது பிளப்போடு
ஒப்புமைகூறப்படுகிற, அடு பகழியால் - அழிக்க வல்ல அர்த்தசந்திரபாணங்களால்-,
வரம் மிக்க- மேன்மை.மிகுந்த, தவளம் நிறம்- வெண்ணிறத்தையுடைய, மதம்
வெற்பை- மதத்தையுடைய மலைபோன்ற யானையை, எதிர் கடவி வரு- எதிரிற்
செலுத்தி வருகிற, வெற்றி அவனிபதி - சயத்தையுடைய அரசனான பகதத்தனது, நீள்
கரம் உற்ற - நீண்ட கையிற் பொருந்தின, சிலை- வில்லும், கவசம்- உடற்கவசமும்,
அற- துணிபடும்படி, வெட்டி- பிளந்து, விடு கணைகள்- (அவன் தன்மேல்) விடும்
ஆயுதங்களை, கணை விட்டு- எதிரம்பு கோத்து, விலக- (அருச்சுனன்) விலக்க,-
அவன்உன்- அப்பகதத்தனும், சரம் விட்டு- அம்பையொழித்து, ஓர் அயில்உம்- ஒரு
வேலாயுதத்தை, விசயன் இரதத்தின் வலவன்மிசை- அருச்சுனனது தேர்ப்பாகனான
கண்ணபிரான்மேல், தமரத்தினுடன்- ஆரவாரத்