பக்கம் எண் :

76பாரதம்துரோண பருவம்

     இருதிறத்து அரசர்களிலும் எவரும் புகழாதவரில்லை: எல்லோரும்
புகழ்ந்தனரென்பதாம். உபமேயமாகிய யானையின் மேல்தவிசைக் கருதி,
உபமானமாகிய மலையை ' சிகரக்கிரி' என விசேடித்துக் கூறினார். கார் -
இருவர்க்கும் உவமை; சிலைக்கு ஒப்பெனினுமாம். மனமொழிமெய்களுக்கு
எட்டாதமாயவனாதலால், ' புகழ்தற்கரிய பாகன்' என்றார் இதனால்,
பகவானதுவாசாமகோசரத்வம் வெளியாம். பி -ம்: புகழாதில்லை.

     இதுமுதற் பதினாறுகவிகள்- கீழ்ச்சருக்கத்தின் முப்பத்துநான்காங்கவி
போன்றஅறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.      (112)

68.- அப்போது காந்தாரர் கொல்வதாக அருச்சுனனைப்
புடைசூழ்தல்

விருதுஞ்சஞ்பல்லியமுமேன்மேலதிரவிற்போரில்
பொருதின்றிவனைக்கொன்றன்றிப்போகோமென்னப்புடை
                                    சூழ்ந்தார்
மருதுஞ்சகடும்விழவுதைத்ததவலவன்கடவவாயுவெனக்
கருதும்புரவித்தேரூருங்கழற்காவலன்மேற்காந்தாரர்

     (இ-ள்.) (அதன்பின்பு), காந்தாரார் - காந்தாரதேசத்து அரசர்கள், விருதுஉம்-
பிருதாவளிகளும், சங்குஉம்-, பல் இயம்உம் -அநேக வாத்தியங்களும், மேல்மேல்
அதிர - மிக அதிகமாகமுழங்க, 'வில் போரில் - வில்லினாற் செய்யும் யுத்தத்தில்,
இன்று - இன்றைக்கு, பொருது- போர்செய்து, இவனை - இவ்வருச்சுனனை,
கொன்றுஅன்றி- கொன்றாலல்லாமல், போகோம்- விட்டுப்போகமாட்டோம்',
என்ன - என்று(வீரவாதஞ்) சொல்லிக்கொண்டு,- மருதுஉம் சகடுஉம் விழ
உதைத்த -மருதமரங்களும் வண்டியுங் கீழ்விழும்படி (திருவடியால்) உதைத்திட்ட,
வலவன் -பாகனான கண்ணன், கடவ - செலுத்த,- வாயு என கருதும் -
(விசையால்)காற்றென்று எண்ணத்தக்க, புரவி- குதிரைகளைப் பூட்டிய, தேர் -
தேரின்மேல்,ஊரும் - ஏறிவருகிற, கழல் காவலன்மேல்- வீரக்கழலையுடைய
அருச்சனராசன்மேல், புடைசூழ்ந்தார்- நாற்புறத்துஞ் சூழ்ந்துகொண்டார்கள்;
(எ -று.)- விருது - வெற்றியைக்குறிக்கும் சின்னம் முதலிய ஊதுகருவிகளுமாம்.
பி -ம்
:விறற்போரில்.                                         (113)

69.- அருச்சுனனம்பால் சகுனிதனயரிருவர் இறத்தல்.

காந்துந்தறுகட்காந்தாரர்கடுவெங்கனல்போற்கண்சிவந்தங்
கேந்துஞ்சிலையாற்கணைமழைபெய்தெழிலிக்கணம்போரெல
                                      திரூன்றிச்
சாந்தும்புழுகுங்கமழ்வாகுச்சகுனிதனயர்தலைபோரிற்
சேர்ந்தன்றிறந்தார்விடசெயனுஞ்செயனுமெனும்போர்ச்செயவீரர்.

     (இ-ள்.) காந்தும்- கோபித்துவந்த, தறுகண்-அஞ்சாமையையுடைய, காந்தாரர்-
காந்தாரதேசத்து அரசருள், சாந்துஉம் புழுகுஉம் கமழ் வாகு சகுனி தனயர்-
சந்தனமும் கஸ்தூரிப்புழுகும் வாசனைவீசுகிற தோள்களையுடைய சகுனியின்
புத்திரர்களான, விடசெயன்உம் செயன்எம் எனும் - வ்ருஷஜயன் ஜயன்  என்னும்
பெயருடைய, போர் செய வீரர் - போரில் வெற்றியையுடைய வீரர்கள், அன்று -
அப்போது, கடு வெம் கனல்போல் - மிகக்கொடிய