தொடைஉடை - தொடுக்கப்படுந்தன்மையுள்ள, வாளி - அம்புகளின். மாரி - மழையை, சோனை அம்புயலின் - விடாப்பெருமழைபொழிகிற அழகிய மேகம்போல. பெய்தார் -(ஒருவர்மேல் ஒருவர் இடைவிடாமற்) சொரிந்தார்கள்; (எ - று.) இனி, 'நாகரும்பனிக்கும்வண்ணம்’என்பதற்கு -(பாரமிகுதியால் பாதாளலோகத்திலிருந்து பூமியைத்தாங்குகிற ஆதிசேஷன் முதலிய) நாகர்களும் வருந்தும்படி எனினும் அமையும். தொடையுடைவாளி -ஒன்றையொன்று தொடர்தலையுடைய அம்புகளெளினுமாம். உவமையணி. வரூதம் - ரதகுப்தி, தேர்க்காவல்: அதனையுடையது - வரூதிநீஎன ஏதுப்பொருள், நாகரும், உம் - உயர்வுசிறப்பு. (7) 8.-சகதேவனும் சகுனியும் பொருதல். மருத்துவர்மைந்தர்தம்மிலிளவலும்வலியசூது கருத்துடன்பொருதுவென்றமாமனுங்கலந்துதம்மில் ஒருத்தரையொருத்தர்வேறலரிதெனவுடன்றுவேக சரத்தொடுசரங்கள்பாயச்சராசனம்வாங்கினாரே. |
(இ-ள்.) மருத்துவர் - (தேவ) வைத்தியரான அசுவிநீதேவர்களின், மைந்தர்தம்மில் - குமாரர்களான நகுலசகதேவர்களுள், இளவல்உம்- இளையவனானசகதேவனும், வலிய சூது- வலிமையையுடைய சூதுபோரை, கருத்துடன் -(வஞ்சனை) நினைப்புடனே, பொருது- செய்து, வென்ற- (பாண்டவரைச்) சயித்த,மாமன் உம் -(துரியோதனாதியரின்) மாமனான சகுனியும், தம்மில் கலந்து-தமக்குள்[ஒருவரையொருவர்]நெருங்கி, ஒருத்தரை ஒருத்தர் வேறல் அரிது என - ஒருவரைமற்றொருவர் வெல்லுதல் முடியாதாம்படி [சமமாய்], உடன்று - உக்கிரங்கொண்டு,வேகம் சரத்தொடு சரங்கள் பாய - விரைவுள்ள அம்புகளோடு அம்புகள் பாய்ந்துஎதிர்கோத்து நிற்கும்படி, சராசனம் வாங்கினார்- வில்லை வளைத்துப்போர்செய்தார்கள் ; ( எ -று.) மருந்தின்தன்மையையறிந்து வியாதிக்கு ஏற்றபடி உபயோகித்தலால், மருத்துவரென்று வைத்தியர்க்குப் பெயர்; மருத்துவர் - மருந்தையுடையவர்; மருந்து- பகுதி. பொருது என்ற வினைக்கு ஏற்ப, சூது, போரெனப்பட்டது. போர் முதலிய செல்வங்களை எளிதிற்பெறுவித்த உறுதியைக் கருதி, 'வலியசூது' என்றார். இனி, வலிமை - கொடுமையுமாம். வேறல், வெல் - பகுதி. (8) 9.-சகதேவன் சகுனியை வெல்லுதல். ஒருகணைதொடுத்துப்பாகனுயிர்கவர்ந்துயர்த்தகேது விருகணைதொடுத்துவீழ்த்திபிரதமாத்தொலையநான்கு பொருகணைதொடுத்துவஞ்சன்பொருவருமார்பிலாறு வருகணைதொடுத்துவாகைமலைந்தனன்வஞ்சமில்லான். |
|