80.-எதிர்த்தவர் புறங்கொடுத் தோடுதல். இளைத்தடையப்பெருஞ்சேனையினிநாமொன்றுக்கீடாகோம், வளைத்தசிலையோடிவனிற்கமாயன்றன்னோ டவனிற்கத், துளைத்த கணையாற்றுரோணன்வலிதொலைத்தோனிற் கமலைத்திவரைத், திளைத்தலரிதென்றக்களத்திற்பொன்றாவரசர்சென்றாரே. |
(இ-ள்.) (பின்பு), அ களத்தில்- அப்போர்க்களத்தில், பொன்றா அரசர் - இறவாது சேடித்த அரசர்கள், 'பெரு சேனை அடைய- பெரிய சேனை முழுவதும், இளைத்தது- சோர்வடைந்து விட்டது; இனி - இனிமேல், நாம்-, ஒன்றுக்கு ஈடு ஆகோம் - ஒரு தொழிற்செய்தற்கும் வலியுடையமல்லோம்; வளைத்த சிலையோடு- வணக்கிய வில்லுடனே, இவன்- வீமன், நிற்க-, மாயன் தன்னோடு- கண்ணபிரானோடு, அவன் - அருச்சுனன், நிற்க,- துளைத்த கணையால் துரோணன்வலி தொலைத்தோன் - துளைசெய்த அம்புகளால், துரோணனது வலிமையை (முன்)ஒழியச்செய்து தருமன், நிற்க- இவரை மலைத்து திளைத்தல்- இவர்களை எதிர்த்துநெருங்குதல், அரிது - (எவர்க்கும்) முடியாது,' என்று - என்றுஎண்ணி, சென்றார்-(புறங்கொடுத்துப் பாசறைக்குப் ) போயினார்; (எ-று.) ஒன்றுக்கு ஈடாகோம்- சிறிதும் போர்செய்யவல்லோமல்லோம் என்றபடி; ஓரம்புக்கேனும் எதிராகோம் எனினும் அமையும். 'வளைத்தசிலையோடு' என்றதற்கு இனமாக 'மாயன்தன்னோடு என்றதனால், ஆயுதம் வீரனுக்கு உதவுதல்போலக் கண்ணன் அருச்சுனனுக்கு உதவுந் தன்மை குறிப்பிக்கப்பட்டது. பி-ம் அக்கணத்தில். (125) 81.- பாண்டவர் மகிழ்ச்சியோடு பாசறைசேர்தல். பெரும்பே ரறத்தின் றிருமகவைப் பிடிப்பானெண்ணி முடிப்பான்போற், பொரும்போ ரரசருடன் வந்தபொற்றேர் முனியும் புறம்போனான், பரும்பேருரகக் கொடி வேந்தன் பட்டான் மிகவும் பரிபவமென், றரும்போரரசர்களித்தாடவவருந்தம் பாசறையடைந்தார். |
(இ -ள்.) பெரு - பெருமைக்குணமுடைய, பேர் அறத்தின் திரு மகவை- சிறந்த தருமராசனது அழகிய குமாரனான யுதிட்டிரனை, பிடிப்பான் எண்ணி- (உயிரோடு) பிடித்துக்கொள்ளக் கருதி, முடிப்பான் போல் - (அவ்வாறு) நிறைவேற்றவல்லான்போல், போர் பொரும் அரசருடன் வந்த- போர்செய்யவல்ல (பல) அரசர்களோடு கூடிவந்த, பொன் தேர் முனிஉம் - அழகிய தேரையுடைய துரோணனும், புறம் போனான் - புறங்கொடுத்து (ப் பாசறைக்கு)ச் சென்றான்; பருபேர் உரகம் கொடி வேந்தன் - பருத்த பெரிய பாம்புக்கொடியையுடைய துரியோதனன், மிகஉம் பரிபவம் பட்டான்- மிகவும் அவமானமடைந்தான், என்ற - என்றகாரணத்தால், அருபோர் அரசர் - (செய்தற்கு) அரிய போரில்வல்ல (தன்பக்கத்து) அரசர்கள், களித்து ஆட - மிகமகிழ்ந்து கூத்தாட, அவர்உம்- அப்பாண்டவர்களும், தம் பாசறை அடைந்தார் - தமது படை வீட்டைச் சேர்ந்தார்கள்; (எ- று.) |