பக்கம் எண் :

90பாரதம்துரோண பருவம்

தோன்றிப் பார்வதியென்று பெயர்பெற்றாள், தன்மைக்கு நிலை ஆன -
குணத்திற்குஇடமான எனினுமாம். பி -ம்: வடவிந்தகிரி கன்னி.      (135)

91.அதிர்வார்களதிர்மின்களதிரப்பொரும்போரிலறன்
                              மைந்தனோ
டெதிர்வார்களுண்டாகிலிக்கங்குல்சென்றாலினிக்
                               காணலாம்
முதிர்வாய்மையாலென்ன பயனென்று வெஞ்சாப
                               முனியேகினான
கதிர்வார்முடிக்கோவுமரசர்க்குவிடைதந்துகண்டுஞ்சினான்.

     (இ-ள்.) அதிர்வார்கள் அதிர்மின்கள்- வீணாரவாரஞ்செய்பவர்கள்
செய்யுங்கள்;அதிர பொரும் போரில்- நடுக்கமுண்டாம்படி செய்யும் யுத்தத்தில்,
அறன்மைந்தனோடு எதிர்வார்கள் - தரும புத்திரனோடு எதிர்க்கவல்லவர்கள்,
உண்டுஆகில் - உள்ளாரானால் இ கங்குல் சென்றால்- இவ்விராத்திரி கழிந்தால்,
இனி -பின்பு [நாளைமுதல்], காணல் ஆம்- (அவர்திறத்தைப்) பார்க்கலாம்: முதிர்
வாய்மையால்- வரம்புகடந்த வாய்ப்பேச்சுமாத்திரத்தால், என்ன பயன்-? என்று -
என்றுசொல்லிவிட்டு, வெம் சாபம் முனி- கொடிய வில்லில்வல்ல துரோணன்,
ஏகினான் - (தன்இடத்துக்குச்) சென்றான்; கதிர் வார் முடி கோஉம்- ஒளியையுடைய
நீண்ட கிரீடத்தையுடைய துரியோதனனும், அரசர்க்கு - (கர்ணன் முதலிய)
அரசர்களுக்கெல்லாம், விடை தந்து - (செல்ல) அனுமதிகொடுத்து, கண்துஞ்சினான் -
தூங்கினான்; (எ - று.)

     முன்னிரண்டடிகளோடு துரோணன் மறுமொழி முற்றுகின்றது.
பின்னிரண்டடிகள் - அவ்வாறுகூறிய துரோணன் ஏக, யாவர்க்கும்  விடை
கொடுத்துத்துரியோதனன் துயின்றமையைத் தெரிவிக்கும். அதிர்வார்கள்
அதிர்மின்கள் -வழுவமைதி. கதிர் - சூரியன்போன்ற என்றுமாம். பி- ம்:
யாவர்க்கும் விடைதந்து.                                     (136)

92.- பாண்டவர்கள் கண்துயிலுதல்.

மகதத்தரிற்சூரசஞ்சத்தகரிலுள்ளமகிபாலரும்
பகதத்தனுந்துள்ளியெதிர்வந்தகாந்தாரபதிமைந்தருந்
தகதத்தவெனவெங்களத்தூடுவிழவென்றதனுவேதியுஞ்
சுகதத்தமுறவோடவென்றோர்களுங்கண்டுயின்றார்களே.

     (இ-ள்.) மகதத்தரில் - மகததேசத்துவீரரிலும், சூர சஞ்சத்தகரில்-வீரர்களான
சஞ்சப்தகரிலும், உள்ள - சேர்ந்த, மகிபாலர்உம்- அரசர்களும், பகதத்தனும்-,
துள்ளிஎதிர் வந்த காந்தாரபதி மைந்தர்உம்- மகிழ்ச்சியோடு கூத்தாடிக்கொண்டு
எதிர்த்துவந்த காந்தாரதேசத்து அரசனான சகுனியின் பிள்ளைகள் இரண்டு
பேரும், தகதத்தஎன வெம் களத்தூடு விழ - தகதத்தவென்னும் ஓசையுண்டாகக்
கொடியபோர்க்களத்தில் இறந்து கீழ்விழவும்,- வென்ற தனுவேதிஉம்-
பகைவெல்லுந்தன்மையுள்ள வில்வித்தை வல்ல துரோணனும், சுக தத்தம் உற ஓட -
இன்பத்தையிழத்தலுண்டாகப் புறங்கொடுத்தோடவும்,- வென்றோர்கள்உம்- சயித்த
பாண்டவர்களும், கண் துயின்றார்கள் - நித்திரைசெய்தார்கள்;