பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்93

     (இ-ள்.) நஞ்சம்- விஷத்தையுடைய, வியாளம்- பாம்பின் வடிவத்தை,
உயர்த்த- உயரத்திலெழுதியுள்ள, பதாகை- கொடியையுடைய, நர அதிபன் -
துரியோதனராசனது, ஏவலினால் - கட்டளையினால், வரூதினி மன்னர்-
சேனைகளையுடைய அரசர்கள்(பலர்), விசயனை மேலிடுவான்- அருச்சுனனை
வெல்லும்பொருட்டு, விஞ்ச திரண்டனர்- மிகுதியாக ஒருங்குகூடினார்கள்; அவரால்-
அவ்வரசர்களால், நெஞ்சு அழிவுண்ட - மனம்வருந்திய, தபோதனன்- துரோணன்,
நெருநலின்உம் கடுகி - நேற்றையப்பொழுதினும் விரைந்து, பஞ்சவர் கோ
முதல்வன்தனை- பாண்டவரைவருள் முந்தினவனான தருமராசனை, வன்பொடு -
வலிமையோடு, படை பொர - ஆயுதங்களாற் போர்செய்ய, எண்ணினன் -
கருதினான்; (எ -று.)

     துரியோதனன்கட்டளையால் அநேக அரசர்கள் அருச்சுனனை வெல்லத்
திரண்டது, 'நாங்கள், அருச்சுனன் தருமனுக்கு உதவியாகாதபடி தடுத்திடுகிறோம்;
நீமுன் சொன்னபடி தருமனைப் பிடித்திடு, பார்ப்போம்' என்னுங் கருத்தை
வெளியிட்டுத் துரோணனுக்கு வருத்தத்தை மூட்டுதலால், ' நெஞ்சு
அவராலழிவுண்டதபோதனன்' என்றார். அவரால் - கர்ணன் முதலியோரால்
எனினுமாம். பாண்டவரால் எனக்கொண்டு, முந்தினநாட் போரிற் பட்ட
பரிபவத்தைக்குறித்தாகவும் உரைக்கலாம். நஞ்ச என எடுத்தால், குறிப்புப்
பெயரெச்சமாம்.வ்யாளம்-வடசொல். கோமுதல்வனை - முதல்வனாகிய
கோவையென்க.                                           (140)

3,-இலக்கணமைந்தன்முதலோர் படைவகுப்பில் வந்து நிற்றல்.

இலக்கணமைந்தனுமைந்துடைமன்னவனிளைஞருமெம்முனையுங்
கலக்குறவென்றகலிங்கருமுட்படுகாவலர்பற்பலருஞ்
சிலைக்கைவயம்பெறுசிந்துநராதிசெயத்திரதன்சிரமா
நிலக்கணெழுந்துகள்வானிடைசென்றிடநின்றனர்பேரணியே.

     (இ-ள்.) இலக்கண் மைந்தன்உம் - லக்ஷணகுமாரனும், மைந்து உடை
மன்னவன் இளைஞர்உம்- வலிமையையுடைய துரியோதனன் தம்பிமாரும், எ
முனைஉம் - எல்லாப்போர்களிலும், கலக்கு உற- (பகைவர்க்குக்) கலக்க
முண்டாம்படி,வென்ற - (முன்பு) சயித்துள்ள, கலிங்கர்உம்- கலிங்கநாட்டு வீரரும்,
உள் படு -(என்னும் இவர்கள்) உள்ளிட்ட [இவர்கள்முதலான], காவலர்
பல்பலர்உம்- மிகப்பலஅரசர்களும், சிலை கை வயம் பெறு- வில்லையேந்திய
கையின் வலிமை பெற்ற,சிந்து நர ஆதி - சிந்துதேசத்துச் சனங்களுக்குத்
தலைவனாகிய, செயத்திரதன்-ஜயத்ரதனை, சிரம் ஆ - (தங்களுக்குத்)
தலைமையாகக் கொண்டு, நிலக்கண் எழும்துகள் வானிடை சென்றிட -
(சேனைகளால்) பூமியிலே மேலெழுந்த தூளிஆகாயத்திற் செல்லும்படி, பேர்
அணி நின்றனர் - பெரிய படைவகுப்பில் ஒருங்குநின்றார்கள்; (எ - று.) (141)

4.- துரோணன் தன்சேனைகளைச் சக்கரவியூகமாக வகுத்தல்.

அக்கரம்யாவுமுணர்ந்தசிலைக்குருவாசுரர்சேனைநடுச்
சுக்கிரனார்நிகரென்னவகைப்படுதூசியின்மாமுறையே