பக்கம் எண் :

10பாரதம்கன்ன பருவம்

17.- வீமன் கேமதூர்த்தியைக் கொல்லுதல்.

தணடொடுதண்டமேந்திச்சாரிகைபலவுங்காட்டிக்
கொண்டலின்முழக்கீதென்னக்குரைகடலொலியீதென்னக்
கண்டவர்க்கன்றிக்கேட்டார்க்குரைப்பருங்கணக்கிற்றாக்கிக்
கொண்டுவன்காயமொன்றாற்கேமனைவீமன்கொன்றான்.

     (இ-ள்.) (அவ்வீரரிருவரும்),- தண்டொடு தண்டம் ஏந்தி - (தம் தம்)
கதாயுதத்தையெடுத்துக்கொண்டு, சாரிகை பலஉம் காட்டி - (வலதுசாரி
இடசாரிமுதலிய) பலவகை நடைவிகற்பங்களையுஞ் செய்து காண்பித்து,
கொண்டலின்முழக்கு ஈது என்ன - மேகத்தின் இடி யோசை இதுவென்று
சொல்லவும், குரைகடல் ஒலி ஈது என்ன - ஒலிக்கின்ற கடலின் ஓசை இது
வென்னவும்,(பெருமுழக்கமுண்டாக), கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்குஉரைப்பு
அருங்கணக்கின் - (பிரதியக்ஷமாகப்) பார்த்தவர்கட்கேயல்லாமல் (புறத்திருந்து)
கேட்டவர்கட்கும் (இத்தன்மையதென்று) சொல்லுதற்கு அரிய தன்மையாக,
தாக்கிக்கொண்டு - தாக்கிப்போர்செய்துகொண்டிருந்து,- (பின்பு அப்போரில்),
வீமன்-,வல் காயம் ஒன்றால் - வலிய கதையின் வீச்சு ஒன்றினால், கேமனை
கொன்றான்,-(எ -று.)-காயம், காய் - பகுதி.                       (17)

18.- கர்ணன், கேமனிறந்ததனால் நிலைகுலைந்த சேனையை
ஒழுங்குபடுத்துதல்

எறிந்ததண்டமரிற்கேமனிறந்தனனென்றபோழ்தின்
முறிந்ததுவேலைஞாலமுழுதுடைநிருபன்சேனை
யறிந்தெதிரூன்றிவென்றியாண்டகைக்கன்னன்மீளப்
பிறிந்தபல்லணியுமொன்றைப்பேரணியாக்கிநின்றான்.

     (இ-ள்.) எறிந்த தண்டு அமரில் - வீசியடித்துச் செய்த கதாயுத்தத்தில்,
கேமன்இறந்தனன்-, என்ற போழ்தில் - என்ற மாத்திரத்திலே,- வேலை ஞாலம்
முழுதுஉடை - கடல்சூழ்ந்த நிலவுலகம் முழுவதையும் (தனதாக) உடைய,
நிருபன் -துரியோதனராசனது, சேனை-, முறிந்தது - வலிகெட்டு நிலைகெட்டது
வென்றி -வெற்றியையும், ஆண் தகை - ஆண்மைக்குணத்தையுமுடைய,
கன்னன் - கர்ணன்- அறிந்து - (அதனை) அறிந்து, எதிர் ஊன்றி - எதிரிற்
சென்று தைரியப்படுத்தி,-பிறிந்த - (சிதறுண்டு தனித்தனி) பிரிந்துபோன, பல்
அணிஉம் - பலவகைச்சேனைகளும், மீள - திரும்பவும், ஒன்ற - ஒருங்குதிரள,
பேர் அணி ஆக்கிநின்றான் - பெரியவகுப்பாகப் படைவகுத்து நின்றான்;
(எ-று.)                                                       (18)

19.- பாண்டவசேனை கௌரவவேனையை எதிர்த்தல்.

பேரணி கலஞ்சேர் மார்பன் பேரணி யாக்கி நின்ற
போரணி மிக்க சேனைப் பொலிவுகண் டொலிகொள் வண்டார்
தாரணி யலங்கன் மௌலித் தருமன்மா மதலை சேனை
யோரணி யாகக் கூடி யுடன்றெதிர் நடந்த தன்றே.