பக்கம் எண் :

102பாரதம்கன்ன பருவம்

வனது புத்திரனான வீமன், ஒர் இமைப்பொழுதில் - ஒரு நொடிப் பொழுதுள்ளே,
முதல்வனை - தமையனான தருமனை, அடுத்தனன் - சமீபித்தான்;(எ - று.)-
வயிர்-வயிரம் என்பது விகாரப்பட்டது.                             (185)

வேறு.

95.-வீமன் வந்திட்டதுகண்டு, சல்லியன்,
வீமனைவேறலரிதெனல்.

முதல்வன்வென் னிடுதல் கண்டு முடியுடை வேந்த ரோடும்
விதலையில் வயிர நெஞ்சின் வீமன்வந் துறலுங் காலின்
புதல்வனைப் பொருது வேற லரிதெனப் பொலம்பொற்றேரோன்
மதலையை நோக்கிப் பாகன் வன்பகை தோன்றச் சொன்னான்.

     (இ-ள்.) முதல்வன் - தருமன், வென் இடுதல் - புறங்கொடுத்தலை, விதலை
இல் -  (அச்சத்தால்) நடுங்குத லில்லாத, வயிரம் - உறுதியையுடைய, நெஞ்சின் -
மனத்தையுடைய, வீமன்-, கண்டு-,முடி உடை வேந்தரோடுஉம் - கிரீடத்தையுடைய
அரசர்களோடும், வந்து உறலும் - வந்து சேர்ந்தவுடனே,-பொலம் பொன்தேரோன்
-அழகிய பொன்னிறமான தேரையுடைய சூரியனது, மதலையை நோக்கி -
குமாரனான கர்ணனைப்பார்த்து, பாகன் - சல்லியன், 'காலின் புதல்வனை -
வாயுபுத்திரனான வீமனை, பொருது - போர்செய்து, வேறல் - வெல்லுதல்,
அரிது -அருமையானது,' என - என்று வன் பகை தோன்ற - பகையின் வலிமை
தோன்றும்படி, சொன்னான்-;(எ - று.)-'காலின் புதல்வன்' என்றது, தந்தையாகிய
வாயுவைப்போலவே மைந்தனாகிய வீமனுந் தடுத்தற்கரிய வலிமையையுடையவ
னென்றற்கு.

     இது முதல் இருபத்தைந்து கவிகள் - கீழ்ச்சருக்கத்தில் 12 -ஆம் கவிபோன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்.                                        (186)

96.-கர்ணன் வீரவாதம்.

காமனேயென்னநின்றகன்னன்விற்கையில்வாங்கி
வீமனேயாகவென்றிவிசயனேயாகவெற்றித்
தாமனேகாண்டியிற்றைச்சமரிலென்றழல்வாயொற்றைத்
தூமநேர்பகழிக்காற்றார்தூண்டுதியிரதமென்றான்.

     (இ-ள்.) காமன்ஏ என்ன நின்ற - மன்மதனேபோல நின்ற, கன்னன்-, வில்
கையில் வாங்கி-வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு, (சல்லியனைநோக்கி),
'வெற்றிதாமனே-ஜயமாலையையுடையவனே! வீமன்ஏ ஆக -  வீமன் தானாவது,
வென்றிவிசயன் ஏ ஆக - வெற்றியையுடைய அருச்சுனன் தானாவது, என் -
எனது, தழல்வாய் - நெருப்புப்போன்ற முனையையுடைய, தூமம் நேர் -
புகைகிளம்பப்பெற்ற,ஒற்றை பகழிக்கு - ஒருபாணத்துக்கு, ஆற்றார்- முன்
நிற்கமாட்டார்கள்; இற்றைசமரில் - இன்றையுத்தத்தில், காண்டி - பார்ப்பாய்;
இரதம் - தேரை, தூண்டுதி -செலுத்துவாய், என்றான் - என்று சொன்னான்;
(எ-று.)

     காமன் - ஒப்புயர்வில்லாத கட்டழகுக்கும், விலக்குதற்கரிய அம்பெய்தற்கும்
உவமை.ஆக என்னுஞ் சொல் இரண்டும், விகற்பப்பொருளில்வந்த
இடைச்சொற்கள்.                                              (187)