97.- இரண்டுகவிகள்-வீமன் கர்ணனோடு பொருது அவனை மூர்ச்சித்துவிழச்செய்தலைக் கூறும். என்னுமுன்மருத்தின்மைந்தனிரதமேல்வரிவில்வாங்கிக் கன்னனதுரையும்வில்லுங்கணத்திடைச்சிதைந்துவீழ முன்னொருவாளிதொட்டானெதிரியுமுரண்விலொன்றாற் பன்னிருவாளிமீளிமார்பிடைப்பரப்பினானே. |
(இ-ள்.) என்னும் முன்-என்று (கர்ணன்) சொல்லுவதற்கு முன்னே, மருத்தின் மைந்தன் - வாயுபுத்திரனான வீமன், இரதம் மேல் - தேரின்மேலே, வரி வில் வாங்கி-கட்டமைந்த வில்லைவளைத்து, கன்னனது உரைஉம் - கர்ணனது பேச்சும், வில்லும்-,கணத்திடை - க்ஷணப்பொழுதினுள்ளே, சிதைந்து வீழ-கெட்டழியும்படி, முன்-முன்னே,ஒரு வாளி - ஓரம்பை, தொட்டான் - தொடுத்தான்; எதிரிஉம் - பகைவனானகர்ணனும், முரண்வில் ஒன்றால் - வலிமையையுடைய வேறொரு வில்லினால்,பன்னிருவாளி - பன்னிரண்டு அம்புகளை, மீளி மார்பிடை - வலிய வீமன் மார்பிலே,பரப்பினான் - பரவச்செய்தான்;(எ - று.)-உரை சிதைந்துவீழ்தல்- கீழ்ச் சல்லியனோடுசொல்லிய வார்த்தை பயன்படாமற்போதல். உரையும்வில்லுஞ்சிதைந்துவீழ -உடனவிற்சியணி. (188) 98. | பாய்ந்தவப்பாணந்தன்னைப்பாணியாற்றிமிர்ந்துவீமன் காய்ந்தவாளனையதாரைக்கடுங்கொடும்பகழியொன்றா லேய்ந்ததேரருக்கன்மைந்தனிதயத்துமூழ்குவித்தான் வேய்ந்ததாரவனுந்தேரின்மிசையயர்வுற்றுவீழ்ந்தான். | (இ-ள்.) வீமன்,-,பாய்ந்த அ பாணம்தன்னை -(தன் மார்பிற்) பாய்ந்த அப்பன்னிரண்டுபாணத்தை, பாணியால் திமிர்ந்து - கையாற் பொடியாக்கிவிட்டு, காய்ந்த வாள் அனைய - (பகைவரைக்) கொல்லுகிற, வாள்போன்ற, தாரை - நுனியையுடைய, கடு கொடு பகழி ஒன்றால் - விரைந்து செல்லுகிற கொடியதொருபாணத்தால், தேர் ஏய்ந்த அருக்கன் மைந்தன் - தேரிற் பொருந்திய சூரியகுமாரனது,இதயத்து - நெஞ்சில், மூழ்குவித்தான் - அழுந்தச்செய்தான்; வேய்ந்த தாரவன்உம் - அணிந்த மாலையையுடைய கர்ணனும், தேரின்மிசை - தேரின்மேல், அயர்வு உற்று- மூர்ச்சையடைந்து, வீழ்ந்தான் - விழுந்தான்; (எ - று.) (189) 99.-சல்லியனாற்றேறிய கர்ணன் சூழ்ந்த படைவீரரைத் துணித்திடல். வீழ்தலுமன்னர்மன்னன்வெம்படைவென்னிட்டோட வாழ்வறவீழ்ந்தோன்றன்னைமத்திரத்தலைவன்றேற்ற வேழ்பரித்தேரோன்மைந்தனெழுந்துபின்சாபம்வாங்கி சூழ்படைவீரர்யாருந்துஞ்சிடத்துணித்திட்டானே. |
(இ-ள்.) வீழ்தலும் - (கர்ணன்) விழுந்தவளவில், மன்னர் மன்னன் - ராஜராஜனான துரியோதனனது, வெம் படை - கொடிய சேனை, வென் இட்டு ஓட -புறங்கொடுத்து ஓடிப்போக, வாழ்வு அறவீழ்ந்தோன் தன்னை - ஜீவித்தல் அறும்படி (மூர்ச்சித்து) விழுந்த |