யென்றவன்மதலையேவுமிமையவர்தெவ்வையோட வென்றவனேவுந்தம்மில்விசும்பினைவேய்ந்தவாலோ. |
(இ-ள்.) சென்றவன் சேனை தன்னில்-(போருக்குச்) சென்ற அருச்சுனன் சேனையிலுள்ள, நிருபர்உம் - அரசர்களும், செரு செய்கிற்பான் நின்றவன் - போர்செய்யும்பொருட்டு நின்ற கர்ணனது, சேனை தன்னில் நிருபரும்-, நேர்ந்த காலை - எதிர்த்த பொழுது, என்றவன் மதலை ஏஉம் - சூரியகுமாரனது பாணங்களும் இமையவர் தெவ்வை ஓட வென்றவன், தேவர்களுக்குப் பகைவர்களான (நிவாதகவசர் காலகேயர் முதலிய) அசுரர்களை ஓடும்படி சயித்த அருச்சுனனது, ஏஉம் - அம்புகளும், தம்மில் - தமக்குள் (நெருங்கி) விசும்பினை வேய்ந்த - ஆகாயத்தை மறைத்தன; (எ - று.) என்றவன், அவன் - பகுதிப்பொருள் விகுதி. (193) 103.-கர்ணனுக்கு உதவியாக வந்து அசுவத்தாமா க்ருஷ்ணார்ச்சுனர்மேல் அம்புமழைபொழிதல். இரவிதன்மதலைக்காகவிமைத்தகண்விழிக்குமுன்னர்ப் புரவியந்தாமாவென்னும்பூசுரன்றேரிற்றோன்றி யரவணைச்செல்வன்மெய்யுமருச்சுனன்மெய்யுஞ்செக்கர் விரவியவானமென்னவெஞ்சரம்புதைவித்தானே. |
(இ-ள்.) இரவி தன் மதலைக்கு ஆக - கர்ணனுக்கு உதவியாக, இமைத்த கண்விழிக்கும் முன்னர்-மூடினகண் திறப்பதற்குமுன்னே[மிகவிரைவில்என்றபடி] அம்புரவித்தாமா என்னும் பூசுரன்,-அழகிய அசுவத்தாமா என்னும் பிராமணன், தேரில் தோன்றி - தேர்மேல் வந்து, அரவு அணை செல்வன் மெய்உம் - ஆதிசேஷனைச் சயனமாகவுடைய எல்லாஐசுவரியங்களுக்குந் தலைவனான கண்ணனது உடம்பும். அருச்சுனன் மெய்உம் - அருச்சுன னுடம்பும், செக்கர் விரவியவானம் என்ன - செம்மேகங்கள் பொருந்திய கரிய ஆகாயம் போலாம்படி, வெம்சரம் புதைவித்தான்- கொடிய அம்புகளைத்தைக்கச்செய்தான்; (எ - று.) பூசுரன்- (பிரமதேஜசினாற்) பூமியில் தேவன்போல விளங்குபவன். செம்மேகம்பொருந்திய கருவானம்-இரத்தத்தாற்சிவந்த கரியதிருமேனிகளுக்கு உவமை. (194) 104.-மூன்றுகவிகள்-கடுமையாகப்பொருகையில் அருச்சுனன் அசுவத்தாமனைமூர்ச்சிப்பிக்க, துச்சாதனன் தேரோடும்அவனைக் கொண்டுபோதல். விசையனும்வெகுளுற்றந்தவேதியன்வில்லுந்தேரு மசைவுறமுடுகியெய்தானனுமற்றிவனைவேறோர் குசையுடைப்புரவித்தேருங்குனிவருஞ்சிலையுங்கொண்டு நிசையினையருக்கன்போலநிலைதளர்ந்திடுவித்தானே. |
(இ-ள்.) விசையன்உம் - அருச்சுனனும்,-வெகுள் உற்று- கேபாங்கொண்டு அந்த வேதியன் - அந்தப்பிராமணகுலத்தானாகிய அசுவத்தாமனது, வில்லும் தேரும்-, அசைவு உற - அழிதலை |