அடையும்படி, முடுகி எய்தான் - உக்கிரமாக அம்பெய்தான்; அவன்உம் - அசுவத்தாமனும், இவனை-அருச்சுனனை, வேறுஓர்-, குசை உடை புரவி தேர்உம் - கடிவாளத்தையுடைய குதிரைகளைப் பூட்டிய தேரையும், குனி வரும் சிலைஉம் - வளைதல் பொருந்திய வில்லையும், கொண்டு-,நிசையினை அருக்கன் போல - இராத்திரியைச் சூரியன் (அழிப்பது) போல, நிலை தளர்ந்திடுவித்தான்-உறுதிநிலை தளரச்செய்தான்; (எ-று.) (195) 105. | தளர்ந்தவத்தளர்ச்சிகண்டுதனஞ்சயன்றன்னைத்தேற்றிக் கிளர்ந்தடர்புரவித்தாமாகேவலனல்லனையா பிளந்திடிங்கிவனையென்னப்பிறைமுகப்பகிழியொன்றா லூளம்புகத்தொடுத்தான்பாகனுரைமுடிவதன்முனம்மா. |
(இ-ள்.) தளர்ந்த அ தளர்ச்சி கண்டு - (அருச்சுனன்) நிலை தளர்ந்த அந்தத்தளருகையைப் பார்த்து, (கண்ணன்), தனஞ்சயன் தன்னை தேற்றி- அருச்சுனனைத்தைரியப்படுத்தி, 'ஐயா-தலைவனே! கிளர்ந்து அடர் புரவித்தாமா - மிக்குப்போர்செய்கிற அசுவத்தாமன், கேவலன் அல்லன் - அலட்சியமாக வெல்லத்தக்கவனல்லன்; இங்கு-இப்பொழுது, இவனை-, பிளந்திடு- (மார்பில்அம்பெய்து) பிளப்பாயாக', என்ன - என்றுசொல்ல,-அருச்சுனன்), பாகன் உரை முடிவதன்முன்-கண்ணன் வார்த்தை முடிவதற்குமுன்னமே, பிறைமுகம் பகழி ஒன்றால்- அர்த்தசந்திரபாணமொன்றினால், உளம் புக - நெஞ்சில் தைக்கும்படி, தொடுத்தான்-எய்தான்; (எ - று.) அம்மா - ஈற்றசை. ஐயா - பாகன் எசமானனை அழைப்பதோர் சொல்விழுக்காடு. (196) 106. | எய்தவப்பகழியொன்றாலீசன்மாமதலைமாழ்கி வெய்துயிர்த்திரதமீதுவீழ்ந்தனன்வீழ்ந்தோன்றன்னைக் கைதவச்செயலினான்றுச்சாதனன்கண்டுமுன்னைச் செய்தப்பயன்போல்வந்துதேரொடுங்கொண்டுபோனான். |
(இ-ள்.) எய்த அ பகழி ஒன்றால் - (அருச்சுனன்) எய்த அந்தஒருபாணத்தினால், ஈசன் மா மதலை - பரமசிவனது சிறந்த குமாரனான அசுவத்தாமா, மாழ்கி - மயங்கி வெய்து உயிர்த்து-வெப்பமாகப் பெருமூச்சுவிட்டுக்கொண்டு, இரதம் மீது - தேரின்மேல், வீழ்ந்தனன்-, வீழ்ந்தோன் தன்னை - விழுந்த அவனை, கைதவம்செயலினான் - வஞ்சனைச்செய்கையையுடையவனாகிய, துச்சாதனன்-,கண்டு-, முன்னை செய் தவம் பயன்போல் - முற்பிறப்பிற்செய்த நல்வினையின் பலன் (பிற்பிறப்பில் வந்து உதவுவது) போல, வந்து-(உதவியாக) வந்து, தேரொடுஉம் கொண்டு போனான் - தேரோடும் உடன்கொண்டு சென்றான்; (எ -று.) (197) 107.-நான்குகவிகள் - அசுவத்தாமன் மீண்டுவந்து பொர, சித்திரவாகனபாண்டியன் அவனோடு கடும்போர்செய்தலைக் காட்டும். போனவப்புரவித்தாமாபுரிந்துபோர்தொடங்குமெல்லைச் சேனைகணான்கினோடுஞ்சித்திரவாகனென்னு |
|