பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்111

அவர்கள் வேண்டுகோளின்படி மீண்டும் உமிழ்ந்தனரென்பது கதை;
நீர்மையென்னும்பண்புப்பெயர், ஈறுபோய் 'நீர்' என நின்றது: முந்நீர்-மூன்று
நீர்மையை [தன்மையை]யுடையதுஎனக் கடலுக்குப்  பண்புத்தொகையன்மொழி;
மூன்றுதன்மைகள் -பூமியைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்பன; நீரினின்று
நிலம் பிறந்ததெனவேதம் ஓதுதலாற் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையாதாதலின்
காத்தலும், இறுதியில் நீரினால் மூடப்பட்டு உலகம் அழிதலால் அழித்தலும் ஆக
முத்தொழில்களுங் கடலுக்கு உரியனவாயின, 'முந்நீரினுள்புக்குமூவாக்
கடம்பெறித்தான்' என்றவிடத்து அடியார்க்குநல்லாருரை காண்க.          (204)

114.மலையினிற்பிறந்தவாரமணங்கமழ்வடிவிற்றங்க
ளலையினிற்பிறந்தவாரமழகுறவணிந்தகோமான்
கொலையினிற்சிறந்தகோட்டுக்குஞ்சரங்கொண்டுமீண்டுஞ்
சிலையினிற்குருவின்மைந்தன்றேரொடுஞ்செருச்செய்தானே.

     (இ - ள்,) (தங்கள்) மலையினில் பிறந்த - தங்கள் நாட்டிலுள்ள
மலயபருவதத்தி லுண்டான, ஆரம் - சந்தனத்தின், மணல் கமழ்- வாசனைவீசுகிற,
வடிவில்-உடம்பிலே, தங்கள் அலையினின்-தங்கள் கடலிலே, பிறந்த-தோன்றின,
ஆரம் முத்துக்களினாலாயமாலையை, அழகுஉற - அழகுபொருந்தும்படி, அறிந்த -
தரித்த, கோமான் - பாண்டியராசன், கொலையினில்சிறந்த -
கொல்லுதற்றொழிலிலேமிகுந்த, கோடு - தந்தங்களையுடைய, குஞ்சரம் கொண்டு-
யானைமேல் ஏறிக்கொண்டு-மீண்டுஉம்-மறுபடியும், சிலையினில் - வில்லினால்,
குருவின் மைந்தன் தேரொடுஉம் - துரோண புத்திரனது (அசுவத்தாமனது)
தேருடனே, செரு செய்தான்-போர் செய்தான்; (எ -று)                 (205)

115.மோதியமத்தாரைமாறாக்கைம்முகமுகுத்தசெக்கர்ச்
சோதிமத்தகவெங்குன்றின்றழைசெவித்துளங்குகாற்றாற்
சாதிமைத்துரோணன்மைந்தன்றனித்தடந்தேரிற்கொற்ற
வோதிமப்பதாகையாடையப்புறத்தொடுங்கிற்றம்மா.

     (இ-ள்.) மோதி மத் தாரை மாறா -  (மேன்மேற்) பெருகி மதநீர்ப்பெருக்கு
இடையறாத, கை முகம் உகுத்த செக்கர் சோதி-துதிக்கையையுடைய முகத்தினின்று
வெளிப்படுத்துக்கொண்டிருக்கிற (புள்ளிகளின்) சிவந்த ஒளியையும், மத்தகம்  -
மஸ்தகத்தையுமுடைய, வெம் குன்றின் - கொடிய மலைபோன்ற (பாண்டியனேறிய)
யானையின், தழை செவி துளங்கு காற்றால் - தழைந்த காதுகள்
அசைதலாலுண்டாகிய காற்றினால், சாதிமை துரோணன் மைந்தன் -
உயிர்குடிப்பிறப்பையுடைய அசுவத்தாமனது தனி தட தேரில் - ஒப்பற்ற பெரிய
தேரிலுள்ள, கொற்றம் - வெற்றிக்கு அடையாளமான, ஓதிமம் - அன்னத்தின்
வடிவத்தை எழுதிய, பதாகை ஆடை  - கொடிச்சீலை, அப்புறத்து ஒடுங்கிற்று -
பின் ஒதுங்கியது; (எ - று.)-இதனால், பாண்டியன் யானையின் உயர்ச்சியும்
வலிமையுந் தொனிக்கின்றது. அம்மா - வியப்பு.