கோழி - உறையூர்; முற்காலத்து ஒருகோழி நிலமுக்கியத்தால் யானையோடுபொருது அதனைப் போர்தொலைத்தல் கண்டு அந்நிலத்திற் செய்த நகராதலின், கோழியென்று உறையூருக்குப் பெயராயிற்று. இதனைச் சிலப்பதிகாரவுரையால் அறிக: (நாடுகாண்காதை-வரிகள் 247-248 உரை); இதை இராதானியாக உடையவன், சோழன்; கீழ் 'நாகையாப் புகழான்' என்றதுபோல, இங்கு 'சொற்கையா மனுகுலத்தோன்றல்' என்றார். இதுமுதற் பதினைந்துகவிகள் - மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும் மற்றை மூன்றும்விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். (211) 121.-இதுமுதல் மூன்றுகவிகள் - சோழன் அசுவத்தாமனை இகழ்ந்து கூறியன தெரிவிக்கும். தேரில்மேனின்றுநீசிறுகட்செம்புகர்க் காரின்மேல்வீரனைக்கணையிற்காய்வதே பாரின்மேலார்கொலிப்பாதகஞ்செய்தார் நீரின்மேலெழுத்தெனநிலையிலாண்மையாய். |
நான்குகவிகள்-ஒருதொடர். (இ-ள்.) நீரின்மேல் எழுத்து என - நீரிலெழுதிய எழுத்துப் போல், நிலை இல்- சிறிதும் நிலைபெறுதலில்லாத, ஆண்மையாய் -பராக்கிரமமுடையவனே! நீ- ,தேரின்மேல் நின்று - தேரின்மேல் இருந்துகொண்டு, சிறுகண்-சிறியகண்களையும், செம்புகர் - சிவந்த புள்ளிகளையுமுடைய, காரின்மேல் - மேகம்போன்ற யானையின்மேலிருந்த, வீரனை - வீரனாகிய பாண்டியனை, கணையின் காய்வதுஏ- அம்பினாற் கொல்லுவது தகுதியோ? பாரின்மேல் - பூமியில். ஆர் - (உன்னைத்தவிர) வேறுயார், இ காதகம் செய்தார் - இப்பாவத்தொழிலைச் செய்தவர்?[எவரும் இலர்]; (எ - று.)-கொல் - அசை. தேரின்மேலுள்ளவன் யானைமேலுள்ளவனைப் பொருது கொல்லுதல். அதருமயுத்தம். கார் - உவமைவாகுபெயர். எழுத்து- எழுதப்படுவது எனச் செய்யப்படுபொருள்விகுதிபுணர்ந்துகெட்டு விகாரப்பட்ட பெயர், பி - ம்; எழுத்தன, (212) 122.- | ஆர்ப்பனமறைமொழிந்தனைவர்பாவமுந் தீர்ப்பனவேள்விகள்செய்வதன்றியே கூர்ப்பனபலபடைகொண்டுபோர்செயப் பார்ப்பனமாக்களும்பாரின்வல்லரோ. |
(இ-ள்.) ஆர்ப்பன - ஆரவாரிப்பனவாகிய, மறை - வேதமந்திரங்களை, மொழிந்து - சொல்லி, அனைவர் பாவம்உம் தீர்ப்பன - எல்லோர்தீவினைகளையும் ஒழிப்பனவாகிய, வேள்விகள் - யாகங்களை, செய்வது அன்றிஏ-சேய்யவல்லவரே யல்லாமல், (அதைவிட்டு),-கூர்ப்பன பல படை கொண்டு - கூர்மையையுடையனவாகிய பல ஆயுதங்களால் போர் செய் - போர்செய்வதற்கு, பார்ப்பனமாக்கள்உம் - பிராமணர்களும், பாரின் - பூமியில், வல்லரோ-? |