பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்115

     பார்ப்பனமாக்கள் - பாரப்பாராகிய மனிதர் என இருபெயரொட்டு.    (213)

123.தாதையைக்கொன்றவெஞ்சாபவீரனைக்
கோதைவிற்கணைகளாற்கொன்றிலாதநீ
யூதைமுற்சருகுபோலோடலல்லதை
மோதயிற்படைகொடுமுனையவல்லையோ.

    (இ-ள்.) தாதையை - (உன்) தந்தையாகிய துரோணனை, கொன்ற-, வெம்
சாபம்வீரனை - கொடிய வில்லையுடைய திட்டத்துய்மனை, கோதை வில்
கணைகளால் -நாணியையுடைய வில்லினாலெய்யப்படுகிற அம்புகளால்,
கொன்றிலாத -கொல்லமாட்டாத, நீ-, ஊதை முன் சருகுபோல்-
பெருங்காற்றுக்குமுன்னே உலர்ந்தஇலைபோல், ஓடல் அல்லதை -
ஓடிப்போவதே யல்லாமல், மோது அயில்படைகொடு-தாக்குதற்கு உரிய
கூர்மையான ஆயுதங்களால், முனைய வல்லஓ -போர்செய்ய வல்லவனோ?
(எ - று.)-அல்லதை. ஐ-சாரியை.                                (214)

124.-ஆறுகவிகள்-அசுவத்தாமனும் சோழனும்
கடுமையாகப் பொருதலைக் கூறும்`

என்றுசின்மொழிமொழிந்திவுளித்தாமன்மேற்
துன்றுவில்வளைத்தனன்சோழபூபதி
குன்றுடன்குன்றமர்குறிக்குமாறுபோற்
சென்றுசென்றடுத்தனதேருந்தேருமே.

     (இ-ள்.) என்று-, சில் மொழி மொழிந்து - சிலவார்த்தைகளைச் சொல்லி,
இவுளித்தாமன்மேல் - அசுவத்தாமன்மேலே, சோழபூபதி - சோழநாட்டரசன்,
துன்றுவில் வளைத்தனன் - வலிய வில்லை வளைத்தான்; குன்றுடன் குன்று அமர்
குறிக்கும் ஆறுபோல் - மலையோடு மலை போர் தொடங்கும்விதம்போல, தேர்உம்
தேர்உம் - இரண்டுதேர்களும், சென்று சென்று அடுத்தன - விரைந்துபோய்
நெருங்கின; (எ-று.)                                               (215)

125.இருவர்செங்கரங்களுமிரண்டுகால்களு
முரனுறப்பிணித்தநாணோசைவீசவும்
மருவுபொற்றோளுறவலியின்வாங்கவும்
விரைவுடன்வளைந்தனவில்லும்வில்லுமே.

     (இ-ள்.) இருவர் செம் கரங்கள்உம் - இவ்விருவர்களது சிவந்தகைகளாலும்
இரண்டு கால்கள்உம் - இருகோடிகளிலும், உரன் உற பிணித்த - வலிமை
பொருந்தப்பூட்டப்பட்ட, நாண் - நாணியின், ஓசை-ஒலி, வீசஉம் - மிகும்
படியாகவும்,-மருவுபொன் தோள் உற-பொருந்திய அழகிய தோள்களிற்படும்படி,
வலியின் வாங்கஉம் -வலிமையோடு(நாணியை) இழுக்கும்படியாகவும்,-விரைவுடன்-
வேகத்தோடு, வில்உம்வில்உம் - இரண்டு விற்களும், வளைந்தன-; (எ - று.)-
தோள் உற - தோள்வலிமைபொருந்த என்னவுமாம்.                   (216)