சூரியகுலத்தவராதலால், இங்ஙனம்அபேதமாகக்கூறினார், புற- குறியதன் கீழ் ஆ, குறுகிற்று. (219) 129. | துளவணிமுடியவன்றுள்ளுகன்றினால் விளவினையெறிந்தெனவீரவேலினால் வளவனும்வெகுண்டுபின்மயூரவாகன னிளவலையெறிந்தனனெவருமஞ்சவே. |
(இ - ள்.) துளவு அணி முடியவன் - திருத்துழாயை யணிந்த திருமுடியையுடைய கண்ணன், துள்ளு கன்றினால் - துள்ளுகிற கன்றை வீசி அதனால், விளவினை எறிந்து என - விளாமரத்தை எறிந்தாற்போல, வளவனும் - சோழனும், பின் - பின்பு, வெகுண்டு - கோபித்து, வீரம் வேலினால் - வீரத்தன்மையையுடைய வேலால், எவர்உம் அஞ்ச - எல்லோரும் பயப்படும்படி, மயூர வாகனன் இளவலை - மயில்வாகனமுடைய முருகக்கடவுளது தம்பியான அசுவத்தாமனை, எறிந்தனன்-; (எ -று.)- சிவன்மகனாதலால், 'மயூரவாகன னிளவல்' என்றார். (220) 130.-சோழன்வேலால் அசுவத்தாமன் கலங்கிவிழ, சகுனி முதலியவேந்தர் அவன்வருத்தம் மாற்றுதல். உருத்திரன்றாதுவினுற்பவித்தவக் கருத்துடைமுனிவன்மெய்கலங்கிவீழ்தலுந் திருத்தகுசகுனியுஞ்சிற்சில்வேந்தரும் வருத்தமோடெடுத்தவன்வருத்தமாற்றினார். |
(இ-ள்.) உருத்திரன் தாதுவின் - உருத்திரமூர்த்தியினது சுக்கிலத்தினால், உற்பவித்த - பிறந்த, கருத்து உடை-(வெல்லும்) எண்ணத்தையுடைய, அ முனிவன் -அந்த அசுவத்தாமன், மெய்கலங்கி வீழ்தலும் - உடம்பு கலக்கமடைந்து (மூர்ச்சித்து)விழுந்தவளவில்,-திரு தகு - செல்வம்பொருந்திய, சகுனியும்-, கில் சில் வேந்தர்உம்,-(மற்றுஞ்) சிலசில அரசர்களும், வருத்தமோடு - மனவருத்தத்துடனே, எடுத்து -(அவனை) எடுத்துவைத்துக்கொண்டு, அவன் வருத்தம் மாற்றினார் - அவனதுவருத்தத்தை நீக்கினார்;(எ - று.) உருத்திரன் - (பகைவர்களை) அழச்செய்பவன். உத்பவித்த - உற்பவித்த; தகரம் றகரமாயிற்று, கருத்து உடை முனிவன் - நெஞ்சம்பிளந்த முனிவனென்றுமாம். திரு - சூதாட்டத்திற் பிறரை வெல்வதனால் வரும் பொருள். ஆற்றினார் என்றும் பதம்பிரிக்கலாம். (221) 131.-நான்குகவிகள்-அசுவத்தாமனுடனே மன்னர்பலர்வந்து சோழனுடன்பொருது அழிந்தமை கூறும். அவனொடுமீளவந்தபயன்றன்னொடு கவனமான்றேருடைக்காவன்மன்னவர் சிவனொடுமமர்பொருந்தெவ்வரென்னவே துவனிசெய்முரசெழத்துன்றுபோர்செய்தார். |
|