இனி, பண் நகஎனப்பிரித்து-பண்கள்விளங்கும்படி வண்டுகள் இசை பாடுகிற சோலையென்றுமாம்; நக -செயவெனெச்சம். நெருக்கு-முதனிலை திரிந்த தொழிற்பெயர்.மண்ணகம், விண்ணகம் - அகம், ஏழுனுருபு தண்டலை - தண்தலை; குளிர்ந்தஇடத்தையுடையது: பண்புத்தொகையன்மொழி. (224) 134. | முன்னிய சிலைமறை முனிவன் மைந்தனுந் தன்னிக ரிலாவிறற் சகுனி யாதியாய்த் துன்னிய நிருபருந் தொல்ல மர்க்குநீ சென்னியென் றவன்புகழ் செப்பி மீளவே. |
(இ-ள்.) சிலை மறை - தனுர்வேதத்தை, முன்னிய - அறிந்த, முனிவன் மைந்தன்உம் - துரோணகுமாரனான அசுவத்தாமனும், தன் நிகர் இலா - (சூதாட்டத்தில்) தனக்கு ஒப்பில்லாத, விறல் - வெற்றியையுடைய, சகுனி ஆதி ஆய்-சகுனி முதலாக, துன்னிய - நெருங்கிவந்த, நிருபர்உம் - அரசர்களும், 'தொல்அமர்க்கு பழைய போருக்கு, நீ,-சென்னி - தலையாவாய்,' என்று-, அவன் புகழ் -அச்சோழனது கீர்த்தியை, செப்பி - சொல்லி, மீள - திரும்பிப்போய்விட,- (எ-று,.)- "அடுத்தார்" என மேலிற்கவியோடு முடியும். 'சென்னி' என்பது சோழனைக்காட்டுவதோர் சொல்: அதற்குக் காரணங் கற்பித்ததுபோற் கூறியிருக்கும்நயம் பாராட்டத்தக்கது. (225) வேறு. 135,-அப்போது துச்சாதனனும் அவன் தம்பிமார் ஒன்பதின்மரும் வீமனெதிரேயடுத்தல். சோனா மேகம் பொழிவதுபோற் றுச்சா தனனுந் தம்பியரும் வானா டேற வழிதேடி வருவார் போல வெருவாமன் மேனாண் மொழிந்த வஞ்சினங்கண் முடிப்பா னின்ற வீமனெதி ரானா வாளி மழைதூவி யடல்வெஞ் சிலையோ டடுத்தாரே. |
(இ-ள்.) துச்சாதனனும்-, தம்பியர்உம் - அவன் தம்பிமார்களொன்பதுபேரும், வெருவாமல் - அஞ்சாமல், அடல் வெம் சிலையோடு - வலிய கொடிய வில்லுடனே, சோனா மேகம் பொழிவது போல்-விடாப்பெருமழையை மேகம் பெய்கின்றதுபோல, ஆனா வாளிமழை தூவி - நீங்காத பாணவருஷத்தைச் சொரிந்து கொண்டு, மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் - முற்காலத்திற் சொன்ன சபதங்களை, முடிப்பான் நின்ற-நிறைவேற்றும்பொருட்டு நின்ற, வீமன் எதிர்-வீமனுக்கு எதிரில், வான் நாடு ஏறவழி தேடி வருவார் போல - வீரசுவர்க்கம் அடைவதற்கு வழியைத் தேடி வருபவர்போல, அடுத்தார் - வந்துசேர்ந்தார்கள்;(எ - று.)-தம்பியர் ஒன்பதின்மர் என்பது -மேல் 140 - ஆங் கவியால் விளங்கும். மேனாள் - திரௌபதியைத் துகிலுரிந்தகாலத்தில். இதுமுதற் பன்னிரண்டு கவிகள் - மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீருங் காய்ச்சீர்களும்,மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (226) |