ரெழுத்தனைத்தும் குற்றெழுத்தாகவே வந்தது, குறுஞ்சீர்வண்ணம். விததி - வடசொல். இதுமுதற் பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ் சீரும்புளிமாச்சீர்களும், மற்றை ஆறும்கருவிளஞ்சீர்களுமாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். 'தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன' என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம். (20) 21.- தேர்வருணனை. நிறனின்மிகுகூனநவமணிகளினிய னெடியகொடுமுடிநிகர்வன மகுடமு, மறையுமருவுயையுவமைகொள்சவரமு மடவிநிகரெனவசை வுறதுவசமு, முறையினறைகமழ்தொடைபடுமலர்களு முடுகுமிட னுடைமுழைகளுமுடையன, விறகர்கொடுபலமலைதிரிவனவெனவிகலி யிசைபெறநடவினவிரதமே. |
(இ-ள்.) நிறனில் மிகுவன - (தம் தமக்கு உரிய) நிறங்களிற் சிறந்தனவான, நவமணிகளின் - ஒன்பதுவகை இரத்தினங்களைக் கொண்டு, இயல், செய்யப்பட்ட, நெடிய - உயர்ந்த, கொடிமுடி நிகர்வன - மலைச்சிகரத்தை ஒப்பனவாகிய, மகுடம்உம் - முடியையும்,- அறையும் - ஒலிக்கின்ற, அருவியை - மலைநீர்ப்பெருக்கை, உவமை கொள் - (தனக்கு) உவமையாகக்கொண்ட, சவரம்உம் - சாமரையையும்,- அடவி நிகர் என - காடு உவமை யென்னும்படி, அசைவுறு - அசைந்தாடுகின்ற, துவசம்உம் - கொடியையும்,- முறையின் - ஒழுங்காக, நறை கமழ் - வாசனை வீசுகின்ற, தொடைபடு - (மலையாகத்) தொடுக்கப்பெற்ற, மலர்கள்உம் - பூக்களையும், - முடுகும் இடன் உடை - நெருங்கிய இடத்தையுடைய, முழைகள்உம் - குகைபோன்ற மறைவிடங்களையும்,- உடையன - உடையவையாகிய, இரதம் - தேர்கள்,- இறகர் கொடு திரிவன - (இந்திரனால் வெட்டப்படுவதற்கு முன்பு தம்தமக்கு உள்ள) சிறகுகளாற் சஞ்சரிப்பனவாகிய, பல மலைஎன - பலமலைகள்போல, இகலி - நெருங்கி, இசை பெற - ஒலி பெறும்படி , நடவின -ஓடின; (எ - று.) தேரின்உச்சி - மலையின் சிகரத்தையும், அதன் சவரம் - மலையருவியையும், அதன் துவசம் - மலையிலுள்ள வனத்தையும், தொங்க விடப்பட்டுள்ள மாலையின்மலர்கள் - மலையிலுள்ள மலர்களையும், தேரில் மறைவாகவுள்ள உள்ளிடங்களுட் சில - மலைக்குகைகளையும் ஒத்தலால், விரைந்தோடுகின்ற தேர்கள்- இறகுகளைக்கொண்டு திரிகின்ற மலைகளை யொத்தன வென்க: தற்குறிப்பேற்றவணி. சமரம் = சாமரம், பி - ம்:விசைபெற. (21) 22.- குதிரைவருணனை. அடலில்வலிமையில்விரைவினிலுயர்வன வகிலபுவனமு நொடியினில்வருவன, பொடியின்மிசைவெளிதுகடரவிடுவன புணரியிடையலை யலையொடுபொருவன, விடவிபடுபடைமடிதரநிமிர்வன விரியுநறுமலர் கமழ்முகவுயிரன, படியிலொருபடிநிலையறுகதியன பவனமெனநனிபர வினபரிகளே. |
|