முன்னிரண்டடிகள் - இகழ்ச்சிகுறிக்கும். ஆண்மை யென்றது, திரௌபதியின் துகிலை உரிந்ததை. அச்சு - அக்ஷமென்னும் வடமொழித்திரிபு. அம்ம - இடைச்சொல்: "அம்ம கேட்பிக்கும்" விருந்து - புதுமை; இப்பண்புப்பெயர், புதிதாய்வந்தவர்க்கு இடும் உணவுக்கு இருமடியாகுபெயர். (228) 138. | இன்றோவுன்றன்சென்னிதுணித்திழிசெம்புனலிற்குளித்திடுநா ளின்றோவழலினுற்பவித்தாளிருளாரளகமுடித்திடுநா ளின்றோதாகங்கெடநாவுக்கிசைந்ததண்ணீர்பருகிடுநா ளின்றோவுரைத்தவஞ்சினங்களெல்லாம்பயன்பெற்றிடுநாளே. |
(இ-ள்.) உன் தன் சென்னி துணித்து - உன் தலையை அறுத்து, இழி செம் புனலில் - (அதனனின்று) வழிகிற இரத்தத்தில், குளித்திடும் நாள் - (யான்) மூழ்குந்தினம். இன்றுஓ - இன்றைக்குத்தானோ? அழலின் உற்பவித்தாள் - அக்கினியிற்பிறந்த திரௌபதி, இருள் ஆர் அளகம் - இருளையொத்த - (மிகக்கரிய) (தனது) கூந்தன்மயிரை, முடித்திடும் நாள்-எடுத்து முடிக்குந்தினம், இன்றோ-? தாகம் கெட - தண்ணீர்வேட்கை கெடும்படி, நாவுக்கு இசைந்த தண் நீர் - நாக்குக்குப்பொருந்திய குளிர்ந்த நீரை, பருகிடும் நாள் - (நான் கையால் அள்ளி எடுத்துக்) குடிக்கிற தினம் இன்றோ-? உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் - (நாங்கள்) சொன்ன சபதங்களெல்லாம், பயன் பெற்றிடும் நாள்-பலனடையுந் தினம், இன்றோ-? திரௌபதி, துரியோதனன் துச்சாதனனைக்கொண்டு கூந்தலைப்பிடித்திழுத்துச் சபையிற்கொணர்ந்து துகிலுரிந்துந் தன்மடிமேலுட் காரென்று சொல்லியும் தன்னைப்பங்கப்படுத்தினபொழுது, துரியோதனாதியர் நூற்றுவரையுங் கொன்று அவர்களிரத்தத்தில் நனைத்தாலன்றி விரித்தகூந்தலை எடுத்துமுடித்து அலங்கரிக்கப்பதில்லையென்று சபதஞ்செய்தான், யாகசேனமகாராசன் செய்வித்த புத்திரகாமயாகத்தில் அருச்சுனனை மணஞ்செய்து கொள்ளும்பொருட்டுத் தீயினின்றுந் திரௌபதி பிறந்தான். (229) 139. | வென்றேயவனிமுழுதாளும்வீரோதயனின்றம்முனையுங் கொன்றேநாளையமரரெதிர்கொள்ளக்கடிதின்வரவிடுவ னின்றேநீபோயிடம்பிடிப்பாயெண்ணாவெண்ணமெண்ணிமன்றி லன்றேகலகம்விளைத்தென்றுமழியாவரசையழித்தோனே. |
(இ-ள்.) எண்ணா எண்ணம் எண்ணி-நினைக்கத்தகாத நினைப்பை நினைத்து,மன்றில் - சபையிலே, அன்று - அந்நாளில், கலகம் விளைத்து - சூதுபோரைஉண்டாக்கி, என்றும் அழியா அரசை - எந்நாளும் அழியாத (எங்கள்) அரசாட்சியை, அழித்தோனே - அழியச்செய்தவனே! வென்று - வெற்றிகொண்டு, அவனி முழுது - பூமி முழுவதையும், ஆளும்-அரசாளுகிற, வீர உதயன்- வீரத்தன்மையின் தோற்றத்தையுடையவனாகிய, நின் தம்முனைஉம் - உனது தமையனான துரியோதனனையும், நாளைஏ - நாளைக்கே, கொன்று-, அமரர் எதிர் கொள்ள - தேவர்கள் எதிர்கொண்டு அழைத்துப்போம்படி, கடிதின- |