பக்கம் எண் :

124பாரதம்கன்ன பருவம்

விழுந்த மேகத்தின் மழைநீர்த்துளிகள்போல(ச் சிதிறிப்போம்படி), அவற்றை கடிது
உதறி - அவ்வம்புகளை விரைவாக உதறிவிட்டு,-மல் மேல் கொண்ட புயம் உற -
மற்போரை மேன்மையாகக் கொண்ட தோளின்வலிமை பொருந்த, வில் வாங்கி -
வில்லைவளைத்து, கொடு போர் வாளி பல - கொடிய போருக்கு உரிய பல
அம்புகளை, மென்மேல் எய்தான் - மேல்மேலே தொடுத்தான்; எதிர்ப்பட்டால் -
(பகைவன்) எதிரிரே வந்து அகப்பட்டால், பின்னை - பின்பு, விடும்ஓ-(வீமன்)
விடுவானோ? (எ - று.)-பொதுப்பொருளும் சிறப்புப் பொருளுமாக வாரமையால்,
இது, வேற்றுப்பொருள்வைப்பணியாகாது.                           (234)

144.தூவாநின்றவேவனைத்துந்துச்சாதனன்றன்றொடைபிழையா
வேவால்விலக்கியேழுகணையெய்தானெய்தகணையேழு
மாவானவற்றின்றலைநான்குமடங்கற்கொடியுமணித்தேரு
மேவாநிருபன்மலர்த்தடக்கைவில்லுந்துணித்துவீழ்த்தனவே.

     (இ-ள்.) தூவாநின்ற - (வீமன்) பொழிகிற, ஏ அனைத்துஉம் - அம்புகளை
யெல்லாம், துச்சாதனன்-, தன் - தனது, தொடை பிழையா - தொடுத்த இலக்குத்
தவறாத, ஏவால் - அம்புகளினால், விலக்கி - தடுத்து, ஏழுகணை எய்தான் -
ஏழம்புகளைத் தொடுத்தான்; எய்த கணை ஏழ்உம் -தொடுத்த அந்த ஏழம்புகளும்,
மேவாநிருபன் - (தம்மோடு மனம்) பொருந்தாத (பகைவனாகிய) வீமராஜனது,
மாவானவற்றின் - (நான்கு) தேர்க்குதிரைகளின், தலை நான்குஉம்-
தலைகள்நான்கையும், மடங்கல் கொடிஉம்-சிங்கக்கொடியையும், மணி தேர்உம் -
அழகிய தேரையும், மலர் தட கை வில்உம் - தாமரை மலர் போன்ற பெரிய
கையிற் பிடித்த தனுசையும், (ஆக ஏழு பொருளையும்), துணித்து - அறுத்து,
வீழ்த்தன - தள்ளிவிட்டன; (எ - று.) பி-ம்: துணிய.                 (235)

145.இந்தேரழியவேறொருதேரேறிப்பரவையிடைச்சுழன்ற
மத்தேயனையசிலைவாங்கிமன்னற்கிளையவயமீளி
யத்தேரழியக்கொடிவலவன்வயமாவனைத்துமற்றுவிழப்
பத்தேயெய்தாங்கிணைவாளிபகைவன்புயத்திற்படவெய்தான்.

     (இ-ள்.) மன்னற்கு இளைய வயம் மீளி - தருமராஜனுக்கு அடுத்த
தம்பியாகியவலிமையையுடைய வீரனாகிய வீமன், இ தேர் அழிய - இந்தத் தேர்
அழிந்ததனால்,வேறு ஒரு தேர் ஏறி-, பரவை இடை சுழன்ற மத்துஏ அனைய -
பாற்கடலிற்சுழன்று  கொண்டிருந்த மத்தாகிய மந்தரமலையையே போன்ற, சிலை
வாங்கி,-(வேறொரு) வில்லை எடுத்து வளைத்து, அ தேர் அழிய - அத்
துச்சாசனனேறியதேர் அழியவும், கொடி-கொடியும், வலவன் - சாரதியும், வயம் மா
அனைத்துஉம் -வலிமையையுடைய தேர்க்குதிரைகளெல்லாமும், அற்று விழ -
அறுபட்டு விழவும்,பத்துஎய்து - பத்து அம்புகளைத் தொடுத்து, ஆங்கே -
அப்பொழுதே, இணைவாளி -  இரண்டு அம்புகளை, பகைவன் புயத்தில் பட -
பகைவனான அவனதுதோளிரண்டிலும் படும்படி, எய்தான்-; (எ - று.) மந்தரம்
பாற்கடலைக்கலக்கியதுபோல வில் போர்க்கடலைக் கலக்குத