பக்கம் எண் :

126பாரதம்கன்ன பருவம்

இபம் கிரி - மலைபோன்ற (அஷ்ட) திக்கஜங்கள், சத்தம்இட்ட - வீரிட்டன;
(எ- று.)-;கிரிசிந்தியிட்டவே' என்ற பாடம் சந்தத்துக்கு மாறுபடும்.

     இதுமுதற் பத்துக்கவிகள்-பெரும்பாலும் ஒன்று ஐந்தாஞ்சீர்கள்
புளிமாச்சீர்களும்,இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள் கூவிளச்சீர்களும், மூன்று
ஏழாஞ்சீர்கள் -புளிமாங்கய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள்,' தனன
தந்தன தனதத்ததத்தன தனன தந்தன தனதத்த தத்தன' என
இவற்றிற்குச்சந்தக்குழிப்புக் காண்க.                                   (238)

148.வெகுளிகொண்டுகொண்டெதிர்கொக்கரித்தனர் விசை
                  யுடன்கிளர்ந்துயரக்குதித்தன,
ருகவைவிஞ்சவெங்கதையைச்சுழற்றினருயர்விசும்பெறித்
                        தொருகைப்பிடித்தனர,்
முகமலர்ந்துநின்றதிரச்சிரித்தனர்முதிரவஞ்சினம்பல
                              கட்டுரைத்தனர்,
மகிபர்கண்டகண்டவர்சித்தமுட்கிடவரையிரண்டு
                     வெஞ்சமர்கற்பதொக்கவே.

     (இ-ள்.) மகிபர் கண்ட கண்டவர் - பார்த்த பார்த்த அரசர்களெல்லாம்,
சித்தம்உட்கிட-மனந்திடுக்கிடும்படி, வரை இரண்டு - இரண்டு  மலைகள், வெம்
சமர்கற்பது ஒக்க-கொடிய போரைப் பழகுவதை ஒக்கும்படி, (இருவரும்) வெகுளி
கொண்டு கொண்டு -  கோபத்தை மிகுதியாகக் கொண்டு, எதிர் கொக்கரித்தனர் -
எதிரேகர்ச்சித்தார்கள்; விசையுடன் - வேகத்தோடு, உயர கிளர்ந்து குதித்தனர் -
மேலே எழும்பிக் குதித்தார்கள்; உகவை விஞ்ச - களிப்புமிக, வெம் கதையை
சுழற்றினர் - கொடிய கதாயுதத்தைச்சுழற்றி, உயர்விசும்பு எறிந்து - உயர்ந்த
ஆகாயத்தில் வீசி, ஒரு கை பிடித்தனர்-ஒருகையால் (மீளவும்) ஏந்திப்பிடித்தார்கள்;
முகம் மலர்ந்து நின்று - முகமலர்ச்சிபெற்று நின்று, அதிர - அதிரும்படி,
சிரித்தனர்- சிரித்தார்கள்; முதிர - மிகுதியாக, வஞ்சினம் பல - பல சபதங்களை,
கட்டுஉரைத்தனர்-உறுதியாகச் சொன்னார்கள்; (எ-று.) உகத்தலுக்கும்,
முகமலர்தலுக்குங்காரணம் - ஒத்த வீரனோடு போர்நேர்ந்தமை, ஒருவர்
செய்வதைமற்றவருஞ் செய்வதால், 'கற்பதொக்க' என்றார். பி-ம்: விசையுடன்
சினந்து.                                                      (239)

149.இகலிவெங்கொடுங்கதையொத்துமொத்தொலி யிடியின்
             வெங்கொடுங்குரலொத்தொலித்தன,
மகிதலம்பிளந்தசர்ப்பவர்க்கமும்வயிறழன்றுநஞ்சுகள்
                               கக்கியிட்டன,
திகிரியந்தடங்கிரிபக்குநெக்கதுசெவிடுகொண்டயர்ந்தது
                                திக்கயக்குல,
முகடுவிண்டதண்டமுமப்புறத்துற முகில்களும்
                  பெருங்குகைபுக்கொளித்தவே.

     (இ-ள்.) இகலி - (இருவரும்) பகைத்து, வெம் கொடு கதை - மிகவுங்
கொடியகதாயுதத்தால், ஒத்து மொத்து ஒலி - ஒருங்கே தாக்குதலினாலுண்டாகிற
ஓசை,இடியின் வெம்கொடுகுரல்ஒத்து - மிகவும் கொடிய இடியின் முழக்கத்தைப்
போன்று,ஒலித்தன-; (அதனால்), மகி தலம் பிளந்தது - பூமியிடம் பிளவுபட்டது;
சர்ப்பவர்க்கம்உம் - (பாதாளத்திலுள்ள)  பாம்புக்கூட்டங்களும், வயிறு அழன்று -
(அச்சத்தால்) வயிறு வெதும்பி நஞ்சுகள் கக்கியிட்டன - விஷங்களை வெளியிற்
கக்கின; அம் திகிரி தட கிரி - அழகிய