செய்-சொல்லப்படுகிற, மெய் அங்கம் ஒன்றின்உம் - உடம்பின் உறுப்பு ஒன்றிலும், உற்று உறைத்தில- (கதைகள்) போய்ப்படவில்லை, கதைகளும்-, பிளந்து ஒடிபட்டு - பிளவுபட்டு ஒடிந்து, எடுத்தன கர தலங்கள்உம் - (அக்கதைகளை) எடுத்தனவாகிய கைகளினிடங்களும், கருகிசிவந்தன - கறுத்துச்சிவந்துவிட்டன; இவர் - இவர்கள், முதிர் சினம் கொளுந்தலின் - மிகுந்த கோபம் மூண்டதனால், முற்றுஉம் விட்டு - ஆயுதங்களையெல்லாம் ஒழித்து விட்டு, முட்டி யுத்தம் - முட்டியினாற்செய்கிற போரை, முரணுடன் - வலிமையோடு, தொடங்கினர்-; (எ - று.)- முஷ்டியுத்தம் - கைக்குத்துப் போர். பி-ம்: விட்டிலர். (242) 152.- | விரல்களைந்தையுஞ்செறியக்குவித்தொளி மிகுநகம்புதை ந்திடவுட்புதைத்திரு, கரதலங்களுஞ்சிகரப்பொருப்பிடைகரியகொண் டன்மண்டுருமொத்திடித்திட, வருளுடன்சிறந்தறனுற்ற கொற்றவனனு சனுந்தயங்குரகத்தனிக்கொடி, நிருபர்தம்பெருந்தகைமுற்கனிட்டனுநினைவுடன்கலந்தெதிர் குத்தியிட்டபின். |
இதுமுதல் நான்கு கவிகள் - ஒருதொடர். (இ-ள்.) அருளுடன் கருணையுடனே, சிறந்த அறன்-மேலான தருமமும், உற்ற- பொருந்திய கொற்றவன் - வெற்றியையுடைய யுதிட்டிரனது, அனுசன்உம் - உடன்பிறந்தவனாகிய வீமனும், தயங்கு - விளங்குகிற, தனி - ஒப்பற்ற, உரகம் கொடி- பாம்புக் கொடியையுடைய, நிருபர்தம் பெருந் தகை - அரசர்களுக்கெல்லாம் அரசனாகிய துரியோதனனது, முன் கனிட்டன்உம் - முதல் தம்பியாகிய துச்சாதனனும், நினைவு உடன் கலந்து -(தாம்தாம்வெல்லவேண்டுமென்ற) எண்ணத்துடனே (ஒருவரோடொருவர்) கைகலந்து, விரல்கள் ஐந்தைஉம் செறிய குவித்து - ஐந்து விரல்களையும் ஒரு சேர நெருங்கும்படி மடக்கி, ஒளி மிகு நகம் புதைந்திட - ஒளிமிகுந்த நகம் பதியும்படி உள்புதைத்து - நான்குவிரல்களினிடையே கட்டை விரலை வைத்து, இரு கரதலங்கள்உம் - இரண்டுகைகளி னிடங்களாலும், சிகரம் பொருப்பிடை - சிகரங்களையுடைய மலையிலே, கரிய கொண்டல் - கறுத்த (நீர்கொண்ட) மேகம், மண்டு - கர்ச்சிக்கிற, உரும் ஒத்து - இடியைப் போன்று, இடித்திட - இடிக்கும்படி , எதிர் குத்தியிட்டபின் - எதிரே குத்தின பின்பு,- (எ - று.)-"தகர்த்து ***கலக்கி" என்க. சிறந்தறன் - அகரம் தொகுத்தல், அருள் அறத்திற்குக்காரணமாதலால், 'அருளுடன் சிறந்தறனுற்ற கொற்றவன் என்றார். (243) 153. | அனிலன்மைந்தனென்றுரைபெற்றகொற்றவ னரசன்முந்து தம்பியைமத்தகத்திடை, கனல்கொளுந்தமுந்ததிரத்தகர்த்திருகவு ணெரிந்துவண்செவியுட்கரக்கவு, முனைசிதைந்துரம்பெறுபற்றெறிக்கவு மொழிகளுந்தளர்ந்தனமுற்றொளிக்கவு, மினலினுஞ்சிவந்தொளிபெற்ற வற்புத விழிபிதுங்கவும்பெருகக்கலக்கியே. |
(இ-ள்.) அனிலன் மைந்தன் என்று - வாயுகுமாரனென்று, உரைபெற்ற- பேர்பெற்ற, கொற்றவன் - வெற்றியையுடைய வீமன். |