பக்கம் எண் :

130பாரதம்கன்ன பருவம்

படும் கடு தரையில் - மணல்கள் பொருந்திய வலிய பூமியிலே, துகள் பட - புழுதி
படும்படி, அடி இரண்டின்உம் - இரண்டு கால்களாலும், சரிய துகைத்து - அழுந்த
மிதித்து, எழு செயிருடன் - உண்டாகிற கோபாவேசத்துடனே, பெரு தொடை
தொட்டு இழுத்து-பெரிய தொடைகளைப் பிடித்து இழுத்து, அணி திகழ்உரம்
பகுந்து-அழுகு விளங்குகிற மார்பைப்பிளந்து, அவுணர் குலத்து இறை-
அசுரர்கூட்டத்துக்குத்தலைவனான இரணியனது, உயிர் - உயிரை, கவர்ந்த -
கொள்ளைகொண்ட,சிங்கமொடு - நரசிங்கமூர்த்தியோடு, ஒப்பு உற -ஒக்கும்படி,
தனது ஒளி சிறந்தனன் -தன்னுடைய ஒளி மிகுந்தான்; (எ- று.)-பி-ம்: மயிர்கரங்கள்
கொண்டிறுகப்பிடித்து.                                           (246)

156.-  துச்சாதனன்குருதிப்புனலில் வீமன் நீராடுதல்.

உகிரெனும்பெரும்பெயர்பெற்றசொட்டைகளுருவியெங்கணும்
                               புதைபட்டுரத்தலம்,
வகிரவுங்கொடுங்குடர்வட்டமற்றுகுவயிறுதொங்க
                            வுங்கிழிவித்தபிற்செறி,
துகிருடைந்தசெம்பவரொத்தநெட்டுடல்சொரி
                   தருஞ்செழுங்குருதிப்பெருக்கிடை,
பகிரதன்றருங்கடவுட்றைப்புனல்படியுமும்பர்தம்பரிசிற்
                                     குளிக்கவே.

இதுவும்மேற்கவியும் - ஒருதொடர்.

     (இ-ள்.) உகிர் எனும் பெரு பெயர் பெற்ற-நகமென்னும் பெரிய பெயரைப்
பெற்ற, சொட்டைகள் - ஆயுதங்கள், உருவி - ஊடுருவி, எங்கண்உம் -(உடம்பு)
முழுவதும், புதைபட்டு - அழுந்துதலால், உரம் தலம் வகிரஉம் - மார்பினிடம்
பிளவுபடவும்,-கொடு குடர்வட்டம்  அற்று - கொடிய குடலின் சுற்று அறுபட்டு,
உகுவயிறு தொங்கஉம் - விழுகிற வயிறு தொங்கும்படியாகவும், கிழிவித்தபின்-
கிழியச்செய்தபின்பு, செறி துகிர் உடைந்த செம்பவர் ஒத்த - சிறந்த பவழம் பிளந்த
இடத்துள்ள சிவந்த நிறத்தைப் போன்ற, நெடு உடல் சொரி தரும் செழு குருதி
பெருக்கிடை-பெரிய உடம்பினின்று வழிகிற செழுமையான இரத்த வெள்ளத்தில்,
பகிர தன் தரும்கடவுள்துறை புனல் - பகீரதனாற் (பூலோகத்துக்குக்) கொணரப்பட்ட
தெய்வத்தன்மையையுடைய ஆகாசகங்காநதியின் நீர்த்துறையில், படியும் - நீராடுகிற,
உம்பர்தம் பரிசின் - தேவர்களின் தன்மைபோல, குளிக்க - (அருவருப்பில்லாமல்
மனமகிச்சியோடு விரும்பி) நீராடுமாறு,- (எ - று.)- "தருமனுக்கிளையோன்...
ஏற்றுதலும்" என்க. பி-ம்: துகிர்பரந்த.

     பகீரதன் - சூரியகுலத்துப் பேர்பெற்றற ஓர் அரசன்; இவன்,
கபிலமகாமுனிவரதுகோபத்தீக்கு இரையாய்ச் சாம்பரான தமது
மூதாதையராகியசகரபுத்திராறுபதினாயிரவரையும் நற்கதிபெறச்செய்யும் பொருட்டுப்
பலவாயிரம் வருஷகாலம் பெருந்தவஞ்செய்து தேவலோகத்துஉள்ள கங்காநதியைப்
பூமிக்குக் கொணர்ந்து அங்கிருந்து பாதாளத்துக்கு அழைத்துக்கொண்டுபோய்
அதன்நீரினால் அவர்கள் சாம்பலை நனைத்தானென்பது, கதை.         (247)