பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்135

பொன்னசலம்போலும்புனைபொற்கொடிநெடுந்தேர்
கன்னனெதிருன்றினான்காயுங்கனல்போல்வான்.

     (இ-ள்.) (என்றுசொல்லி), காயும் கனல் போல்வான் - கொதிக்கிற
நெருப்புப்போன்ற கோபமுள்ளவனாகிய, பொன் அசலம் போலும் - பொன்
மலையாகியமேருபோன்ற, புனை - அழகிய, பொன் - பொன்னாலாகிய, கொடி
நெடுதேர் - கொடியையுடைய பெரியதேரையுடைய, கன்னன்-,-முன்னம்-முன்னே,
அமரில் - போரில், முதுகுஇட்ட - புறங்கொடுத்த, மன்னரைஉம் - அரசர்களையும்,
மன்னவர்கள் மன்னனைஉம் - இராசராசனான துரியோதனனையும், வல் பேர்
அணிஆக்கி - வலிய பெரிய படையாக வகுத்து, எதிர் ஊன்றினான் - எதிர்த்துச்
சென்றான்; (எ - று.)                                           (257)

167.-த்ருஷ்டத்யும்நனும் தம்பக்கத்தவரை அணிவகுத்து
எதிரே செல்லுதல்.

சேனாபதியானதேர்த்துருபதேயனும்வான்
மீனாமெனப்பரந்தவேந்தருடனேதனக்குத்
தானாண்மைக்கொப்பாந்தருமனையுஞ்சேனையையு
மாநாகமுட்கவகுத்தாங்கெதிர்நடந்தான்.

     (இ-ள்.) சேனா பதி ஆன - (பாண்டவ) சேனைத்தலைவனான, தேர்
துருபதேயன்உம் - தேரையுடைய துருபதாராஜகுமாரனான திட்டத்துய்மனும்,
ஆங்கு- அப்பொழுது, வான் மீன் ஆம் என பரந்த - ஆகாயத்தில் விளங்குகிற
நட்சத்திரங்கள்போலப்பரவிய, வேந்தருடனே - அரசர்களோடு, தனக்கு தான்
ஆண்மைக்கு ஒப்பு ஆம் - பராக்கிரமத்தில் தனக்குத் தானே உவமையாகிய
தருமனைஉம் - உதிட்டிரனையும், சேனையையும்-, மா நாகம் உட்க - (உலகத்தைத்
தாங்குகிற) மகாநாகங்களும் (பாரமிகுதியால்) அஞ்சும்படி, வகுத்து - படைவகுத்து,
எதிர் நடந்தான் - எதிரே சென்றான்; (எ-று.)-மின்னுவது மீன் எனக் கரணப்பெயர்.
                                                              (258)

168.-பறையோசைமிகுதியும் ஆபரணங்களினொளி மிகுதியும்,

பொன்னார்முரசமுதற்போர்வெம்பணையாலும்
வின்னாணொலியாலும்விண்ணோர்செவிடுபடப்
பன்னாமபேதப்படையொளியாலும்பலபூண்
மின்னாலுங்கண்கள்வெறியோடிவிட்டனவே.

     (இ-ள்.)  பொன் ஆர் - அழகுபொருந்திய, முரசம் முதல் - பேரிகை
முதலான போர் வெம் பணையால்உம் - போருக்குரிய கொடிய வாச்சியங்களின்
பேரொலியாலும் வில் நாண் ஒலியால்உம் - வில்லின் நாணியின் டங்காரத்தொனி
மிகுதியாலும், விண்ணோர் - தேவர்களும், செவிடுபட - செவிடாய்விட,-பல் நாம
பேதம் படை  ஒளியால் உம் - பலவகைப்பட்ட பெயர்களையுடைய ஆயுதங்களின்
ஒளியினாலும், பல பூண் மின்னால்உம் - பலவகை ஆபரணங்களின் ஒளியாலும்,
கண்கள் வெறியோடிவிட்டன - (தேவர்கள்) கண்களுந் திகைப்படைந்துவிட்டன;
(எ- று.)