பக்கம் எண் :

136பாரதம்கன்ன பருவம்

     'விண்ணோர்' என்பதைக் கண்களோடுங் கூட்டுக, விண்ணுலகத்தவர் தன்மை
கூறவே, மண்ணுலகத்தவர் தன்மை தானே பெறப்படும், வெறியோடி விடுதல் -
ஒளிமிகுதியால் ஒளியிழத்தல்.                                       (259).

169.-ஐந்துகவிகள் - கர்ணன்மகனான விடசேனன் நகுலனுடன்
பொருது அவனை மூர்ச்சித்துவிழச்செய்தலைக் கூறும்.

யாமினியிலெவ்வுயிர்க்குமேற்றதுயின் மாற்றுவோன்
மாமதலை கோமதலைமான்றேர்விடசேன
னாமமணித்தேர்மேனகுலன் மேற்சென்றுசில
தாமமுனைவாளிதழற்பொறிபோற்சிந்தினனே.

     (இ-ள்.) யாமினியில் - இராத்திரியில், எ உயிர்க்குஉம் -
எல்லாவுயிர்களுக்கும்.ஏற்ற - பொருந்திய, துயில் - தூக்கத்தை, மாற்றுவோன்-
(தான் உதித்து)ஒழிப்பவனாகிய சூரியனது, மா மதலை -  சிறந்த குமாரனான
கர்ணனது, கோமதலை - தலைமையான புத்திரனாகிய, மான் தேர் விடசேனன்-
குதிரைகளைப்பூட்டிய தேரையுடைய விருஷசேனனென்பவன்,-நாம மணிதேர்மேல்,
அச்சத்தைத்தருகிற மணிகளைக்கட்டிய தேரின்மேல், சென்று - போய், நகுலன்மேல்-
, தாமம் - ஒளியையும், முனை - கூர்மையைமுயுடைய, சில வாளி - சில
அம்புகளை, தழல் பொறி போல - நெருப்புப் பொறிகளைப்போல, சிந்தினன் -
இறைத்தான்; (எ-று.) - யாமினி - (மூன்று) யாமங்களையுடையது எனக் காரணப்
பெயர்                                                        (260)

170.வெம்புரவித்திண்டேர்விசயற்கினையோனுஞ்
செம்பதுமக்கையிற்சிலைநாணொலியெழுப்பிக்
கம்பமதமால்யானைக்கன்னன்மகனேவியகூ
ரம்படையவம்பாலாறுத்தறுத்துவீழ்த்தின்னே.

     (இ-ள்.) வெம் புரவி - கொடிய குதிரைகளைப் பூட்டிய, திண்தேர்-வலிய
தேரையுடைய, விசயற்கு இளையோன்உம் - அருச்சுனன் தம்பியாகிய நகுலனும்,
செம் பதுமம் கையில் - செந்தாமரைமலர் போன்ற கையிற்பிடித்த, சிலை-வில்லினது,
நாண் - நாணியின், ஒலி-தொனியை, எழுப்பி-உண்டாகச்செய்து,  கம்பம் -
கம்பத்திற்கட்டப்படுகிற, மதம் மால் - மதமயக்கத்தையுடைய, யானை -
யானைபோன்ற, கன்னன் மகன் - (கர்ணனது) குமாரனான விடசேனன், ஏவிய -
தொடுத்த, கூர்அம்பு அடைய - கூர்மையையுடைய அம்புகளையெல்லாம்,
அம்பால் - (தன்)அம்புகளினால், அறுத்து அறுத்து வீழ்த்தினன் -
துணித்துத்துணித்துக் கீழேதள்ளினான்; (எ - று.)

171.அண்டர்பெருமானுக்கம்பொற்கவசமுடன்
குண்டலமுமீந்தோன்குமாரன்கொடுங்கணையான்
மண்டுகனலருந்தவன்காண்டவமெரித்த
திண்டிறலோன்றம்பிதடந்தேர்க்கால்களையழித்தான்.

     (இ-ள்.)  அண்டர்பெருமானுக்கு - தேவர்களுக்குத்தலைவனான இந்திரனுக்கு,
அம் பொன் கவசமுடன் - அழகிய பொன்னாலாகிய கவசத்தோடு, குண்டலம்உம் -
குண்டலங்களையும், ஈந்தோன் - தானஞ்