அரிய கழனியும், முத்தீ இலா - மூன்று அக்கினியில்லாத, வேதியர்மனை வாழ்வுஉம் - பிராமணர்களது இல்வாழ்க்கையும், துளை இலா - துவாரமில்லாத, மணிமுத்துஉம்- அழகிய முத்தும், அம் தண்புனல் துறை இலா - அழகிய குளிர்ந்த நீர்த்துறையில்லாத, வளம்நாடுஉம் - அழகிய தேசமும், கிளை இலா - பந்துக்க ளில்லாத, அரசு இயற்கைஉம் - அரசாட்சியின் தன்மையும், நன்று என - (தனித்தனி)நல்ல தென்று, கேட்டு அறிகுவது உண்டோ-? (எ - று.)-கேட்டு அறிவதில்லையென்றபடி. வளை - மற்ற மங்கலவாத்தியங்களுக்கும் உபலட்சணம். முத்தீ - ஆகவநீயம், காருகபத்தியம், தக்ஷிணாக்கி என்பன, புனல்துறை - ஆறு முதலியன, "ஆறில்லா வூருக் கழகுபாழ்" என்றார், ஓளவையாரும், வளையில்லாத மங்கல விழவு முதலியனபோலக் கிளையில்லாத அரசியற்கை நன்றன் றென்றபடி, ஆதலால் பந்துக்களெல்லாம் இறத்தற்குக் காரணமான போரை இவ்வளவோடாவது நிறுத்த வேண்டு மென்றான். மங்கலவிழவுஎன்பதை - உம்மைத்தொகையாகக் கொண்டு, சங்கொலியில்லாத மங்கலகாரியமுந் திருவிழாவும் என்றும் உரைக்கலாம், மணி முத்து- நவரத்நங்களிலொன்றாகிய முத்துமாம். (271) 181. | தும்பிமாபரிமாவுளதேருளசுருங்கினசுருங்காம னும்பிமார்களிலிருந்தவர்தம்மொடுநுவலரும்பலகேள்வித் தம்பிமாரொடுநும்முனாகியவிறற்றருமன்மாமகனோடும் பம்பிமாநிலம்புரப்பதேகடனெனப்பார்த்திற்குரைசெய்தான். |
(இ - ள்,) சுருங்கின - (அழிந்தவைபோகக்) குறைந்தவையாகிய, தும்பி மா - யானைகளும், பரி மா - குதிரைகளும், உள - உள்ளன; தேர் உள - தேர்கள் உள்ளன: நும்பிமார்களில்-உன் தம்பியருள்ளே, சுருங்காமல் இருந்தனர் தம்மொடுஉம் - அழியாமல் மிகுந்தவர்களுடனும், நுவல் அரு-சொல்லுதற்கு அரிய, பல கேள்வி - பலவகைநூற்கேள்விகளையுடைய தம்பிமாரொடுஉம் - வீமன் முதலியதருமன் தம்பிமார்களுடனும், நும் முன் ஆகிய - உங்கள் தமையனான, விறல்தருமன் மா மகனோடுஉம் - வெற்றியையுடைய சிறந்த தருமபுத்திரனோடும், பம்பி -சேர்ந்து (சமாதானமாகி), மா நிலம் - பெரியபூமியை, புரப்பதுஏ - காப்பதுவே, கடன்- முறைமையாம், என- என்று, பார்த்திவற்கு - துரியோதனனுக்கு,உரைசெய்தான் -சொன்னான், (அசுவத்தாமன்); (எ - று.) (272) 182.-எனக்குவீரியமே பயனெனத் துரியோதனன் மறுமொழி கூறல். ஆரியன்றிருமகனிவையுரைசெயவரசனுமவைகேட்டுக் காரியம்புகல்வதுபுவியாட்சியிற்கருத்துடையவர்க்கன்றோ தூரியங்கறங்கமரிடையுடல்விழச்சுரருலகுயிரெய்த வீரியம்பெறலெனக்கினிபயனெனவிளம்பினன்விறல்வேலோன். |
(இ-ள்.) ஆரியன் - துரோணாசாரியரது, திரு மகன் - சிறந்த குமாரனான அசுவத்தாமன், இவை உரை செய - இவ்வார்த்தை |