பக்கம் எண் :

142பாரதம்கன்ன பருவம்

களைச் சொல்ல, விறல் வேலோன் - வெற்றியைத்தரும்வேலையுடையவனாகிய,
அரசன்உம் - துரியோதனனும், அவை கேட்டு - அவ்வார்த்தைகளைச் செவியுற்று,
(அவனை நோக்கி), 'காரியம் புகல்வது - (நீ) சொல்லுந்தொழில், புவி ஆட்சியில்
கருத்து உடையவர்க்கு அன்றுஓ - பூமியை அரசாளுதலில்
எண்ணமுடையவர்களுக்கன்றோ (செய்யத்தக்கது)? தூரியம்  கறங்கு - வாச்சியங்கள்
முழங்குகின்ற, அமரிடை - போர்க்களத்தில், உடல்விழ - உடம்புவிழவும், உயிர் -,
சுரர் உலகு எய்த - தேவலோகத்தையடையவும் வீரியம் பெறல் - வீரத்தனத்தைப்
பெறுதல், எனக்கு-, இனி, இனிமேல், பயன் - அடையப்படும் பிரயோஜனமாம்,'
என- என்று, விளம்பினன் - சொன்னான்: (எ - று.)                  (273)

183.-துரியோதனன் அசுவத்தாமனோடு பின்பு இனியவார்த்தை
கூறிக் கர்ணனைச்சோகம்மாற்றி அருச்சுனனுயிரைக்
கொள்ளுமாறு கூறுதல்.

முனிமகன்புகல்கட்டுரைமறுத்தபின்முனிவுறாவகைபோருக்
கினிமைகொண்டசொற்பலமொழிந்தவனொடுமிரப்பவருள்ளங்கைக்
கனியெனுங்கொடைக்கன்னனைத்தழீஇயவன்கண்ணுகுபுனன்மாற்றிப்
பனிநெடுங்குடைப்பார்த்திவனுவன்றனன்பார்த்தனதுயிர்கொள்வான்.

     (இ-ள்.) பனி நெடு குடை - குளிர்ந்த பெரிய (ஒற்றைவெண்கொற்றக்)
குடையையுடைய, பார்த்திவன் - துரியோதனன்,- முனிமகன் புகல் -
துரோணகுமாரன் சொன்ன, கட்டுரை - உறுதி வார்த்தையை, மறுத்தபின் -
தடுத்தபின்பு,-முனிவு உறா வகை- (தன்வார்த்தையைத் தடுத்தானென்று அவனுக்குக்)
கோபம், உண்டாகாதபடி, போருக்கு - போர்செய்யும் பொருட்டு, இனிமை கொண்ட
சொல் பல - (கேட்டற்கு) இனிப்புப் பொருந்திய பல வார்த்தைகளை,
அவனொடுஉம்மொழிந்து-அவனோடு சொல்லி, இரப்பவர் உள்ளங்கைகனி எனும் -
யாசகர்களுடைய அகங்கையிலுள்ள பழம் போலச் சித்தமான, கொடை -
தானத்தையுடைய, கன்னனை - கர்ணனை, தழீஇ - தழுவிக்கொண்டு, அவன்
கண்உகு புனல் மாற்றி - (புத்திரசோகத்தால்) அவன்கண்களினின்று பெருகுகிற
நீரைத்துடைத்து, பார்த்தனது உயிர் கொள்வான்-அருச்சுனனது உயிரைக்
கொள்ளும்படி,நுவன்றனன் - சொன்னான்; (எ - று.)

     இனி, இரப்பவருள்ளங்கைக் கனியெனும் கொடை என்பதற்கு - யாசகர்களது
உள்ளங்கைக்குச் சுரங்கம்போன்ற (நிதிதருகின்ற) கொடை யென்றுமாம்; கனி -
சுரங்கம்.                                                    (274)

184.- இரண்டுகவிகள் - துரியோதனனும் சல்லிய
அசுவத்தாமருங்கேட்கக் கர்ணன் தான் கலங்காது அருச்சுனன்
தலையைக் கொய்வேனெனல்.

மலைகலங்கினுமாதிரங்கலங்கினுமாதிரங்களில்விண்ணோர்
நிலைகலங்கினுநெடுங்கடல்கலங்கினுநிலங்கலங்கினுஞ்சேடன்
றலைகலங்கினும்பேரவைமூன்றினுந்தளர்விலாதவர்கற்ற
கலைகலங்கினும்போர்முகத்தென்மனங்கலங்குமோகலங்காதே.