பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்15

                                      விருதரு,
நறியதொடைமுடிநிருபருநிருபருநடலையமரிடையட
                                   லுடனடவவே.

     (இ-ள்.) எறியும் முரசம்உம் - அடிக்கப்படுகிற வாத்தியமான பேரிகையின்
உருவத்தையும், எரி விழி உரகம்உம் - நெருப்புப் போன்ற கண்களையுடைய
பாம்பின் உருவத்தையும், எழுது - (முறையே) எழுதியுள்ள, கொடி உடையவர் -
துவசத்தையுடையவர்களான தருமபுத்திரன் துரியோதனன் என்னுமிவரது, இரு
படையின்உம் - சேனையிரண்டிலும்,- வெறி கொள் - பெருங்கோபத்தைக்
கொண்ட,மதம் மலைகள் உம் மதம் மலைகள்உம் - மதங் கொண்ட மலைபோன்ற
யானைகளும் யானைகளும்,- விசயம் மிகுவன - வெற்றி மிகுவனவாகிய, இரதம்உம்
இரதம்உம் - தேர்களும் தேர்களும்,- நெறி கொள் - முறைமையைக் கொண்ட,
நவகதி - ஒன்பதுவகை நடைகளையுடைய, இவுளிஉம் இவுளிஉம் - குதிரைகளும்
குதிரைகளும், - நிருதர் குலம் நிகர் - அரக்கர் கூட்டத்தை யொத்த, விருதர்உம்
விருதர்உம் - காலாள் வீரர்களும்,- நறிய தொடை - நறுமணமுள்ள மாலைகளைத்
தரித்த, முடி நிருபர்உம் நிருபர்உம் - கிரீடாதிபதிகளான அரசர்களும் அரசர்களும்,
நடலை அமரிடை - நடுக்கத்தைத்தருகின்ற போரில், அடலுடன் - வலிமையோடு,
நடவ - எதிர்த்துச்செல்ல,- (எ -று.)                                 (25)

26- கன்னனும் நகுலனும் குதிரைமேலேறிப் பொருதல்.

இரவிமதலையுமிரவிதன்மதலையரிருவர்மதலையிமிரு
                             வருமெதிரெதிர்,
புரவிமிசைவிசைபடவலமிடநிகழ் புரிவினுடனமர்பொருபலகதி
                                      களி,
னரவின திபதிமுடிகெழுசுடிகையி னருணமணிவெயில
                             வனியிலெழநனி,
பரவியிருள்வரநிரைநிரையெழுதுகள் பகல்செயொளிவெயில்
                           பருகின செருகியே.

     (இ-ள்.) இரவி மதலைஉம் - சூரியகுமாரனான கர்ணனும், இரவி தன்
மதலையர் இருவர் மதலைஉம் - சூரியபுத்திரராகிய அசுவினீ தேவரென்னும்
இரட்டையரது குமாரனான நகுலனும், இருவர்உம் - இவ்விரண்டுபேரும், எதிர்
எதிர்- எதிர்க்கு எதிராக, புரவி மிசை - குதிரைகளின்மேல் (ஏறிக்கொண்டு),
விசை பட -வேகமாக, வலம் இடம் - வலமும் இடமுமாக, நிகழ் - செல்லுகின்ற,
புரிவினுடன் -சாரிகளுடனே , அமர் பொரு - போர்செய்கின்ற, பல கதிகளின் -
பலவகைநடைகளால் (பூமியின் துகளெல்லாம் மேலெழுப்பப் படுதலால்),- அரவின்
அதிபதி -(பூமியைத்தாங்குகின்ற) சர்ப்பராசனான ஆதிசேஷனது, முடி கெழு -
தலையிற்பொருந்திய, சுடிகையின் - உச்சிக் கொண்டையிலேயுள்ள, அருணம்
மணி -செந்நிறமுள்ள மாணிக்கத்தினது, வெயில் - சூரியகாந்தி போன்றஒளி,
அவனியில் -பூமியிலே,  எழ - விளங்காநிற்க,- நனி பரவி - மிகுதியாய்ப் பரந்து,
இருள் வர -இருட்டுவரும்படி, நிரை நிரை - கூட்டங் கூட்டமாக, எழு -
மேலெழுகின்ற, துகள் -புழுதிகள்,- பகல் செய் - பகலைச்செய்கின்ற, ஒளி -
ஒளியையுடைய, வெயில் -சூரியகிரணங்களை, செருகி - மறைத்து, பருகின -
மூடின; (எ -று.)