பக்கம் எண் :

154பாரதம்கன்ன பருவம்

ஆகவே, உன்வில்லைப் பழித்தவரைக் கொல்வே னென்ற உனது சபதம்
நிறைவேறினதாகும்' என்று உபாயங் கூறி, அருச்சுனன் தருமனைக் கொல்வதைக்
கண்ணபிரான் தடுத்தருளினான், குரவோர்- ஈற்றயல் அகரம் ஓவாயிற்று,
குரவராவார்- அரசன், போதகாசிரியன், வமிசகுரு, தந்தை, தமையன் என்பாரு
முளர், உரவு-தேகபலம், புத்திபலம், மனோபலம்,  ஆயுதபலம் சேனாபலம்
முதலியவற்றோடு,தெய்வபலமும், இல்முகம் எனப் பிரித்து - இல்லாமை (வறுமை)
தோன்றுகிற முகமென்றுமாம். "காப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல் எஞ்ஞான்றும்"
என்றவாறுலோபிகள் இரப்பவரதுமுகத்தைக் காணாதபடி தலைகவிழ்ந்து கொள்வ
ராதலால், 'இரவோர்தம தின்முகம் வண்மையினா லிதயத்தொடு கண்டு' என
அவனதுதானகுணத்தை வெளியிட்டார்.                          (298)

208.-அருச்சுனன் தருமனைப் புன்மொழிகூற, அவன்பேசாது
துறப்பேனென்று கானகஞ்செல்லத் தொடங்கல்.

என்னாவுரைசெய்தலுமஞ்சியிளைத் திருகைகொடிறைஞ்சி
                                  நராதிபனைத்,
தன்னாவிசையாதனசிற்சிலசொற் றளர்வோடெதிர்நின்று
                                  தனஞ்சயனுஞ்,
சொன்னான்றன்மாமகனோருரையுஞ் சொல்லாமலினித்துற
                               வெய்துவனென்,
றுன்னாவிரைவோடிரதத்தினிழிந் துயர்கானடைவா
                              னுணர்வுற்றனனே.

     (இ-ள்.) என்னா - என்று, உரைசெய்தலும்- (கண்ணன்)
அருளிச்செய்தவளவில்,-தனஞ்சயன்உம் - அருச்சுனனும், அஞ்சி-, இளைத்து -
சோர்ந்து, இரு கைகொடு இறைஞ்சி - இரண்டுகைகளாலும் (அவனைத்) தொழுது,
நரஅதிபனை - மனிதர்க்குத் தலைவனானதருமனை நோக்கி, எதிர் நின்று எதிரிலே
நின்று, தளர்வோடு - மனத்தளர்ச்சியுடனே, தன் நா இசையாதன - தனது நாவினாற்
சொல்லுதற்குப் பொருந்தாதவையாகிய, சிற் சில சொல் - சிலசில பழிப்பான
வார்த்தைகளை, சொன்னான்-; அறன் மா மகன் -சிறந்த தருமபுத்திரன், ஓர்
உரைஉம் - ஒருவார்த்தையையும், சொல்லாமல்-, 'இனி துறவுஎய்துவன் -
இப்பொழுது துறவறத்தை அடைவேன்,' என்று-, உன்னா - எண்ணி, விரைவோடு -
வேகத்தோடு, இரதத்தின் - தேரினின்றும், இழிந்து - இறங்கி, உயர்காண்அடைவான்
- சிறந்த காட்டை அடையும்பொருட்டு, உணர்வு உற்றனன் -
ஆலோசித்தவனானான்; (எ-று.)

     இங்கே, இனி - இப்பொழுது என்னும்பொருளைத்தந்தது. துறவு -
சன்னியாசம்.கானுக்குஉயர்வு - தவஞ்செய்வதற்கு வாய்ப்பான
இடமாயிருத்தல்.                                               (299)

209.-இதுவும் மேலைக்கவியும் - ஒருதொடர்: க்ருஷ்ணார்ச்சுனர்
தருமன்காலில்விழுந்து  கோபம்மாற்றிக் கர்ணனுயிரைக்
கொல்வோமென்று விடைபெற்றுச் செல்லுதலைக்கூறும்.

நரநாரணர்சென்றுதராபதிதா ணளினத்தில்விழுந்தொருநாயகமா
வரனாமவனைப்புனைதேர்மிசையேவைத்துத்துனிமாறிடுமாறுரைசெய்