ஆயிரங்கிரணங்களை யுடைமையாலும், மற்றைச்சுடர்களாகிய சந்திர அக்கனிகளுக்கு ஒளிகளைக் கொடுத்துவாங்குந் தன்மையையுடைமையாலும், தாமநிதியென்று சூரியனுக்குப் பெயர். (303) 213.-அருச்சுனன் ஆக்கினேயாஸ்திரத்தை விடுதல். அங்கிக்கதிர்தந்தகொடுஞ்சிலைநாணரவக்கணையஞ்சவெறிந்துமிகச் சங்கித்தடலங்கியளித்தனிச் சரமேவினன்வந்துதனஞ்சயனும் பொங்கிக்கனல்சாலமெழுந்ததெனப்புகையும்படிபோயகல்வானதியின் கங்கிற்பொறிவிட்டதுதாரகையின்கணமென்னவெழுந்ததுகாய்கனலே. |
(இ-ள்.) தனஞ்சயன்உம் - அருச்சுனனும், வந்து-, அங்கி கதிர் தந்த - அக்கினியென்னுஞ் சுடர் அளித்த, கொடு சிலை - கொடிய காண்டீவமென்னும் வில்லின், நாண் - நாணியை, அரவம் கணை - (கர்ணனது) நாகாஸ்திரம், மிக சங்கித்து-(இடியோசையோவென்று) மிகவுஞ் சந்தேகித்து அஞ்ச - பயப்படும்படி, எறிந்து - (கைவிரலால்) தெறித்து, அடல் - வலிமையையுடைய, அங்கி அளித்த - அங்கி அருளிய, தனி சரம் - ஒப்பில்லாத ஆக்கினேயாஸ்திரத்தை, ஏவினன் - பிரயோகித்தான்; எழுந்தது - (அதில் நின்றும்) உண்டானதாகிய, காய் கனல்- எரிகின்றநெருப்பு,-கனல் சாலம்-(பிரளயகாலத்து) நெருப்புத்திரள், பொங்கி எழுந்தது என-பற்றிமேலே கிளர்ந்ததென்னுமாறு, புகையும்படி - புகையுண்டாகும் படி, போய் -மேலெழுந்துசென்று, அகல் வான் நதியின் கங்கில் - பரந்த ஆகாசகங்கையின்கரையில், தாரகையின் கணம் என்ன - நட்சத்திரங்களின் கூட்டத்தைப்போலபொறிவிட்டது - பொறிகளைச் சிதறியது. (எ - று.) பி-ம்: எறிந்தது காய். (304) 214.-இதுவும் மேலைக்கவியும் - ஒருதொடர்: வாருணாஸ்திரத்தால் கர்ணன் ஆக்நேயாஸ்திரத்தை யவித்தலைக் கூறும். இணையின்றியெழுந்துசுடுங்கனலாலிரதங்களும்வேன்முதலெப் படையும், கணையுஞ்சிலையுங்கவனப்பரியுங்கரியுங்கரியானமைகண்டியமன்,றுணைவன்றுவாகுவளர்ந்திடவுந்துணைவார்புருவங்கடுடித்திடவும், பணைவெங்குரல்கன்றிமுழங்கிடவும்பவ்வத்தரசன்றருபாணமெடா. |
(இ-ள்.) இணை இன்றி - ஒப்பில்லாமல், எழுந்து - மேல்மேல் வளர்ந்து, சுடும்- எரிக்கின்ற, கனலால் - அக்கினியினால், இரதங்கள்உம் - தேர்களும், வேல் முதல்எ படைஉம் - வேல் முதலிய எல்லா வாயுதங்களும், கணைஉம் - அம்புகளும்,சிலைஉம் - வில்லும், கவனம்பரிஉம் - நடைகளையுடைய குதிரைகளும், கரிஉம் -யானைகளும், கரி ஆனமை - (எரிந்து) கரியாய்விட்டதை, இயமன் துணைவன்-யமனது தம்பியான கர்ணன், கண்டு-, (வீராவேசத்தால்), துணை வாகுவளர்ந்திடஉம் -ஒன்றொடொன்றொத்த (இரண்டு) தோள்களும் ஓங்கியிடவும், துணை வார்புருவங்கள் - நீண்ட இரண்டு புருவங்களும், துடித்திடஉம் - துடிக்கவும், பணைவெம் குரல் - பருத்த கொடிய சிங்கநாதஞ்செய்யும் ஒலி, கன்றி முழங்கிடஉம் -சினந்து, ஒலிக்கவும், பவ்வத்து அரசன் தரு - கடலுக்கு அரசனாகிய வருணன் |