பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்159

தொடுத்தான்; ஆயு புறம் இட்டுவிட - ஆயுள் ஒழியும்படி, பொருவோன் -
போர்செய்பவனாகிய கன்னனது. அரி வெம் கணை-கொடிய சர்ப்பாஸ்திரம், அங்கு-
அவ்விடத்து, மலைந்திடுவோன் - எதிர்த்துப்போர்செய்கிற அருச்சுனனது, உற்பலம்
வீ - கருங்குவளைமலர் போன்ற கூர்மையான, மா முனை - சிறந்த நுனியையுடைய,
வெம்கணை - கொடிய வாயவ்யாஸ்திரத்தை, மேல் வீசி பொரும் முன்பு -
மேன்மேலேவிரைந்துதொடுக்கும் முன்னே, விழுங்கியது - உட்கொண்டு அடக்கிற்று;
(எ - று.)--பி-ம்: அவ்வெங்கணை.

     ஆகாயத்துக்கு அழகையும் விளக்கத்தையுஞ் செய்தலால், ககனமணியென்று
சூரியனுக்குப் பெயர். சர்ப்பம் காற்றை உணவாகஉட்கொள்ளுதலால்,
வாயுஅஸ்திரத்துக்கு சர்ப்ப அஸ்திரம் மாறாகும். உற்பலம்-உத்பலம். அரிய=ஹரி:
பாம்பு.                                                      (307)

217.என்னம்புதனக்கெதிரியில்லையெனாவிருளம்பினையே
                           வினன்வில்விசயன்,
கன்னன்கலையெட்டுடனெட்டுடைவெண்கதிரம்புதொடுத்
                          தெதிர்கன்றினனான்,
முன்னம்புசிதைந்துசிதைந்தழியாமுகமாறியிமைத்து
                             விழிக்குமுனே,
பின்னம்புதொடர்ந்துசெலச்செலவேபிலமூழ்கியதென்ன
                           பெரும்பிழையோ.

     (இ-ள்.) வில் விசயன் - வில்லில்வல்ல அருச்சுனன், என் அம்பு தனக்கு
எதிர்இல்லை எனா-எனது இந்த அம்புக்கு எதிரில்லையென்று எண்ணி, இருள்
அம்பினை- அந்தகாராஸ்திரத்தை, ஏவினன்-; கன்னன்-, கலை எட்டுடன் எட்டு
உடை -பதினாறுகலைகளையுடைய, வெண் கதிர் அம்பு-வெண்மையாகிய
ஒளியையுடையபூர்ணசந்திராஸ்திரத்தை, எதிர் தொடுத்து - (அதற்குப்) பிரதியாகப்
பிரயோகித்து,கன்றினன் - கோபித்தான்; பின் அம்பு - பின்புவிட்ட கர்ணன்
அஸ்திரம், தொடர்ந்துசெல செல - தொடர்ந்து விரைந்து செல்லுதலால், முன்
அம்பு - முன்புவிட்ட(அருச்சுனன்) அஸ்திரம், இமைத்து விழிக்கும் முனே -
(கண்ணை)மூடித்திறக்கும்முன்னே, சிதைந்து சிதைந்து - கெட்டுக் கெட்டு,
அழியாமுகம் மாறி -(முன் ஒருபோதும் அழியாத தன்) முகம் மாறுபட்டு, பிலம்
மூழ்கியது என்ன -பாதளாத்துள்ளே மறைந்தாற்போல (மறைந்துவிட்டது); பெரு
பிழைஓ-(இங்ஙன்போனதும்) தப்பித்துக்கொண்டதாமோ?(எ-று.)

     கலை - சந்திரன்பங்கு- எட்டுடன் எட்டு - எட்டோடு கூடிய எட்டு -
வெண்கதிர் - அன்மொழித்தொகை.                               (308)

218.-அருச்சுனனெய்த அஸ்திரங்களோடு கர்ணனெய்த அஸ்திரங்கள்
முட்டிக்கொண்டு தடுத்தல்.

மகவானருள்வாளிதொடுத்தனனம் மகவான்மகன்வாசிகளேழு
                                      டைவெம்,
பகவானருள்வாளிதொடுத்தனனப் பகவானருடியாகபராய
                                        ணனுந்,
தகவாளியிரண்டுமுடன்கதுவித் தாழாதுயராதுசமம்பெறவே.
முகவாய்கள்பிளந்தனமற்றுளபோர்முனைவாளியுமிப்படி
                                     முட்டினவே.

     (இ-ள்.) மகவான் அருள் வாளி - இந்திரனருளிய ஐந்திராஸ்திரத்தை, அ
மகவான் மகன் - அவ்விந்திரன் மைந்தனான அருச்சுனன்